Showing posts with label Investment. Show all posts
Showing posts with label Investment. Show all posts

Monday, October 16, 2023

கடன் நிலுவையில் இருக்கும் சொத்தை பாகப்பிரிவினை செய்வதில் ஏற்படும் சிக்கல்கள்!

 கடன் நிலுவையில் இருக்கும் சொத்தை பாகப்பிரிவினை செய்வதில் ஏற்படும் சிக்கல்கள்!

ஒருவர் தான் சுயமாக சம்பாதித்த சொத்தை தன் காலத்துக்கு பின் யார் அனுபவிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உரிமை உண்டு.  அதே நேரம் அவர் உயில் எதுவும் எழுதாமல் இறந்துவிட்டால், வாரிசுகள் தங்களுக்குள் பாகப் பிரிவினை செய்துக்கொள்ளலாம்.

        சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இது இருந்து வருகிறது.  ஆனால், இந்த நடைமுறையை சில இடங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
        குறிப்பாக, வங்கியில் கடன் பெற்று ஒரு சொத்தை தந்தை வாங்கியிருப்பார்.  வங்கியில் கடனுக்கான தவணையை அவர் செலுத்தி வரும் நிலையில் அந்த சொத்தை வாரிசுகள் பெயரில் செட்டில்மென்ட் அல்லது உயில் வாயிலாக கொடுக்க நினைக்கலாம்.
        இத்தகைய சூழலில், கடன் கொடுத்த வங்கியின் ஒப்புதல் அத்தியாவசியமாகிறது.  இன்றைய சூழலில், வீட்டுக்கடன் வாங்கிய வங்கிகள் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கின்றன.
         கடன் நிலுவையில் இருக்கும் சொத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் பெயருக்கு மாற்றுவதால், இதுவரை தவணை செலுத்தி வந்தவர் அதிலிருந்து விடுபடுவார்.  அதே நேரம், சொத்து பெறும்  வாரிசுகளில் யார் மீதியுள்ள தவணைகளை செலுத்துவார்கள் என்பதை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
         சிக்கல் இன்றி இந்த நடைமுறையை நிறைவேற்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தாலும், வங்கிகள் இது விஷயத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க தயங்குகின்றன.  சொத்து பெறும் வாரிசுகள் கடன் தவணையை செலுத்தும் நிலையில் இருப்பதை வங்கி உறுதி செய்ய வேண்டும்.
         இதற்கு தகுதியான நிலையில் வாரிசுகள் இல்லை என்றால், அது வங்கிகளுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும்.  சில சமயங்களில் கடன் வாங்கியவர் இறந்தால், அந்த சொத்து வாரிசுகளை தான் சேரும்.
          
        அப்போதும், நிலுவை தவணைகளை வசூலிப்பதில் வங்கிகளுக்கு சிக்கல் ஏற்படும்.  இத்தகைய சூழலில், வாரிசுகளின் கடன் பெறும் தகுதியை பார்க்காமல் வங்கிகள் அவர்களிடம் வசூலில் இறங்கும்.  இறந்த பின் வாரிசுகள் பெயருக்கு சொத்து செல்லும் போது நிலுவையை வசூலிக்க ஒத்துவரும் வங்கிகள், உயிருடன் இருக்கும் உரிமையாளர் விஷயத்தில் வேண்டுமென்றே பிடிவாத போக்குடன் செயல்படுகின்றன.
        வங்கிகள் இது விஷயத்தில் வெளிப்படையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்கின்றனர் சொத்து மதிப்பீட்டாளர்கள்.

பழைய வீட்டை வாங்குவோர் பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய செலவுகள்!

 பழைய வீட்டை வாங்குவோர் பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய செலவுகள்!
விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் பழைய வீட்டை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  இதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் வீடு தொடர்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.
              குறிப்பாக, வீட்டின் அமைவிடம், அதன் தற்போதைய நிலை உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  இதில் ஆவணங்கள் ரீதியாக வில்லங்கம் எதுவும் உள்ளதா என்று பார்ப்பது அவசியம்.  அத்துடன் கட்டடத்தின் உறுதித்தன்மை எப்படி உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.  குறிப்பாக, அந்த கட்டடம் தற்போது குடியிருக்க என்ற நிலையில் உள்ளதா என்பதை கவனிப்பது அவசியம்.
             இதில் பழைய வீட்டை வாங்கும்போது சில கூடுதல் செலவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  உதாரணமாக, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய வீட்டை வாங்கும் நபர், கட்டுமான பணி முடிந்த நிலையில் உடனடியாக குடியேற முடியும்.
             ஆனால், பழைய வீட்டை பொறுத்த வரை இது சாத்தியமில்லை.  பழைய வீட்டை வாங்குவோர், அதில் பராமரிப்பு செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே ஒதுக்க வேண்டும்.  இதில் பெரும்பாலான பழைய வீடுகள் பயன்பாட்டு நிலையில் இருக்கும்.
             எனினும், அந்த வீடுகளில் சுத்தப்படுத்த, புதிய வண்ணம் அடிக்க, உடைப்புகளை சரி செய்ய என சிறு சிறு வேலைகள் என்ற அடிப்படையில் பல்வேறு செலவுகள் வரும்.  பழைய வீட்டை வாங்கும்போது அதற்கான வீட்டுக்கடன் கணக்கீட்டில், பத்திரப்பதிவு செலவு சேர்க்கப்படுகிறது.
             
அது போன்ற பழைய வீட்டை நீங்கள் வாங்குவதாக இருந்தால், அதற்கான பட்ஜெட்டில் பராமரிப்பு செலவு என்ற வகையில், ஒரு லட்சம் ரூபாயை ஒதுக்குவது அவசியம்.  வீட்டை வாங்கியபின் பராமரிப்பு செலவுக்கு பணம் தேடுவது நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்தும்.
              எனவே, பழைய வீட்டை வாங்குவோர் பராமரிப்பு குறித்தும் ஆரம்பத்திலேயே மதிப்பீடு செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

Saturday, October 7, 2023

மனையை உறுதி செய்யாமல் தவணை திட்டத்தில் பணம் செலுத்தினால் வரும் சிக்கல்கள்

 மனையை உறுதி செய்யாமல் தவணை திட்டத்தில் பணம் செலுத்தினால் வரும் சிக்கல்கள்

தமிழகத்தில் அங்கீகாரமில்லா மனைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால், பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முறையான அங்கீகாரத்துடன் வீட்டு மனை விற்பனையில் இறங்கியுள்ளன.
         இவ்வாறு, முறையாக அங்கீகாரத்துடன் விற்கப்படும் மனைகளை மட்டுமே மக்கள் வாங்குவது நல்லது.  இதில் தவணை முறையில் பணம் செலுத்தி மனை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
         வீட்டு உபயோக பொருட்கள் போன்று மனை வாங்கிக்கொண்டு தவணை செலுத்தினால் பிரச்சனை இல்லை.  ஆனால், சில நிறுவனங்கள், மாதம், 5, 000 ரூபாய், 10, 000 என வசூலித்து கொள்கின்றன.
          ஐந்து ஆண்டுகள் வசூலுக்கு பின் தான் மனை உங்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்படும் என்று ஒரு திட்டத்தை செயல்படுத்துகின்றன.  பொது மக்களும், இத்திட்டத்தின் அபாயம் தெரியாமல் தவணை செலுத்தி ஆர்வம் காட்டுகின்றனர்.
         இவ்வாறு தவணை செலுத்திய பின் இறுதியில் நிறுவனம், உங்களுக்கு எத்தகைய மனையை கொடுக்கும் என்பது தெரியாது.  சில நிறுவனங்கள், இதில் விற்காத மனைகளை தவணை முறையில் வருவோருக்கு ஒதுக்குகின்றன.  உதாரணமாக, ஒருவர் 5, 000 ரூபாய் வீதம் 60 மாதங்களுக்கு தவணை செலுத்துகிறார்.  தவணை முடியும் நிலையில், அவருக்கு, 600 சதுர அடி மனை ஒதுக்கப்படுகிறது.  அந்த குறிப்பிட்ட மனைப்பிரிவில் யாரும் விரும்பாத ஒரு மூலையில் அந்த மனை அமைந்துவிடுகிறது.  தவணை செலுத்தியவருக்கு அந்த மனையை பெறுவதில் விருப்பமில்லை.
         இதுபோன்று பல்வேறு சிக்கல்களை தவிர்க்க சில வழிமுறைகளை ஆரம்பத்திலேயே கடைபிடிக்க வேண்டும்.  தவணை திட்டத்தில் சேரும் முன் எங்களுக்கான மனை எது என்பதை ஆவணத்தில் குறிப்பிட்டு தருமாறு கேட்க வேண்டும்.
          தவணை துவங்கும் நிலையில் மனையின் மதிப்பு, தவணை முடியும் நிலையில் மனையின் மதிப்பு இதில், எதன் அடிப்படையில் விலை முடிவு செய்யப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.  சில நிறுவனங்கள், 3 லட்ச ரூபாய் வசூலித்துக்கொண்டு, 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மனையை உங்களுக்கு கொடுத்துவிட வாய்ப்புள்ளது.
        எனவே, தவணையில் மனை வாங்குவோர் ஆரம்ப நிலையிலேயே கூடுதல் விழிப்புடன் செயல்பட்டால் இத்தகைய சிக்கல்களை தவிர்க்கலாம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள். 


Tuesday, October 3, 2023

வீட்டை உள் அலங்காரம் செய்வதில் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியவை!

 வீட்டை உள் அலங்காரம் செய்வதில் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியவை!

                          சொந்தமாய் தனி வீடு கட்டி வாழ்வதே மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.  இதில், ஒவ்வொருவருக்கும் அவர்களின் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  வீட்டின் கட்டமைப்பு, முகப்பு, உள் அறைகளின் வடிவமைப்பு, படிக்கட்டுகள், வாசலின் முன் கேட், வீட்டின் நிறம் என, ஒவ்வொரு கட்டத்திலும் வித்தியாசமாய், அழகாய் இருக்க வேண்டும் என விரும்புவோம்.

                      இப்படி ஆசை இருந்தால் மட்டும் போதாது.  அது குறித்த விபரங்களும், அதற்கான உரிய வழிமுறைகளையும் கடைபிடிப்பது மிகவும் அவசியம்.  இதில் பெரிய அளவில், பிரபலமான உள் அலங்கார நிறுவனங்களை அணுக வேண்டும் என்ற எண்ணம் வேகமாக பரவி வருகிறது.  இல்லவேயில்லை.  அதிக பணம் வைத்துக் கொண்டு, புதிய நவீன தொழில்நுட்பம் இதுதான் என ஒரு வட்டத்தைப் போட்டு, மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்கின்றவர்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம்.


                       நம் கனவு வீடு எந்த அளவில் எந்த வடிவமைப்பில், எத்தனை அறைகளோடு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு நமக்கு விழிப்புணர்வு இருக்கும் பட்சத்தில், நம் வீட்டின் உள் அலங்காரமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முடிவும் நம் கையில் இருக்க வேண்டும்.


                       நீங்கள் பயன்படுத்தும் வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது உங்கள் முடிவாக இருக்க வேண்டும்.  உள் அலங்காரம் என்பதன் அடிப்படையை புரிந்து செயல்பட்டால் இதில் பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம்.


                       பல இடங்களில் உள் அலங்காரம் என்ற பெயரில் வீட்டை காட்சி கூடமாக மாற்றுகின்றனர்.  வீடு என்பது நாம் தங்குவதற்கு, குடும்பமாய் வாழ்வதற்கு தான்.  கண்காட்சி மாதிரி பொருட்களை அலங்கரித்து காட்சிப்படுத்துவதற்கு அல்ல.  இப்படி செய்வது முற்றிலும் தவறான நடைமுறையாகும்.


                      உள் அலங்காரம் என்ற பெயரில் வீட்டின் பல்வேறு பகுதிகளை காட்சி கூடமாக மாற்றுவதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.  குறிப்பாக, உங்களுக்கு ஏற்படும் சின்ன ஆசைகள் கூட, அலங்காரம் கெட்டு விட கூடாது என்பதற்காக தடை செய்யப்படும்.  மூச்சு விடக் கூட பயந்து, மூச்சை பொறுமையாய் விடுவது போல் ஆகி விடும்.



                    வீடு என்பது உங்கள் பயன்பாட்டுக்காக தான்.  அதில், எந்த இடத்தை, எப்படி பயன்படுத்த வேண்டும், எந்தெந்த பொருட்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதில் ஒரு வழிமுறையை உருவாக்குவதே உள் அலங்காரம்.


                     இந்த அடிப்படை நோக்கத்தை புரிந்து, அதன் அடிப்படையில், வீட்டை நெறிப்படுத்தினால் போதும்.  புதிய வீட்டில், எந்தெந்த இடத்தில் அலமாரி இருக்க வேண்டும்.  அதன் அடுக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.  வரவேற்பறை சோபா, பர்னீச்சர்கள், சாப்பாட்டு மேஜை, அலங்கார விளக்குகள், வளைவுகள் என ஒவ்வொன்றிலும் இவையெல்லாம் தேவையா என்பதில் துவங்கி கவனம் வையுங்கள்.


                    உதாரணமாய், அலமாரிக்கு கதவுகள் வேண்டுமா என்பதை முடிவு செய்யும் நிலையில், அது தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்று பாருங்கள்.  அலமாரியென்றாலே கதவுகள் போட்டு மூடி வைக்க வேண்டுமென்றில்லை.


                     என் வீடு, என் விருப்பம் என்பதற்காக, பொருட்களை எங்கு வேண்டுமானாலும் போட்டு வைக்கலாம் என்பதல்ல.


                    அதை ஒரு நெறிக்கு உட்பட்டு செயல்படுத்துவதில் தான் வீட்டின் அலங்காரம் அமையும் என்கின்றனர் உள் அலங்கார வல்லுனர்கள்.  


Friday, September 8, 2023

அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்கு பாதுகாவலர் நியமிப்பதில் எழும் சிக்கல்கள்!

 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்கு பாதுகாவலர் நியமிப்பதில் எழும் சிக்கல்கள்!



                     

                           தனி வீடு வாங்குவோர், அதில் பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும்.  நேரடியாக கவனிக்கும் போது இப்பணிக்கான முழு செலவும் உரிமையாளர் பொறுப்பில் வந்துவிடும்.  ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பாதுகாப்பு, பராமரிப்பு விஷயங்களில் சங்கம் வாயிலாகவே நடவடிக்கை எடுக்க முடியும், தனிப்பட்ட முறையில் உங்கள் வீட்டுக்கான பாதுகாவலரை நீங்கள் நியமிக்க முடியாது.


                          அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பாதுகாவலர்களை நியமிப்பதில் தனியார் பாதுகாவல் சேவை வழங்கும் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.  இதில் எத்தகைய நிறுவனங்களை தேர்வு செய்வது என்பதில் கவனம் தேவை.


                          குறிப்பாக, உங்கள் குடியிருப்பின் மொத்த வருவாய், செலவுக்கான பட்ஜெட் அடிப்படையிலேயே இதை முடிவு செய்ய வேண்டும்.  உங்கள் வளாகத்துக்கு பட்ஜெட்அடிப்படையிலேயே பாதுகாவல் பாதுகாவல் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்.


                          இதில் தொழிற்சாலைகள், அலுவலக வளாகங்கள் அளவுக்கு அதிக திறமை உள்ள பாதுகாவலர்களை பயன்படுத்த அனைவருக்கும் விருப்பம் இருக்கும்.  ஆனால், அதற்கு உங்கள் பட்ஜெட் இடம் கொடுக்க வேண்டும்.


                            குறைந்த செலவுக்கு ஆட்களை நியமித்தால், சேவையின் தரம் மோசமாக இருக்கும்.  இதனால், அபார்ட்மென்ட் வளாகத்துக்கு யார் வந்து செல்கின்றனர் என்பதை தெளிவாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.


                          இன்னும் சில இடங்களில் நேரடி நியமனம் முறையில் பாதுகாவலர்களை அமர்த்துவது குறித்து சங்க நிர்வாகங்கள் பரிசீலிக்கின்றன.  இதில் பாதுகாவல் சேவை நிறுவன தலையீடு இருக்காது என்று நினைக்கின்றனர். 


                         ஆனால், பாதுகாவல் பணிக்கு வருவோரை தினமும் கண்காணிப்பதே சங்க நிர்வாகத்துக்கு தலைவலியை ஏற்படுத்தும்.  ஒவ்வொரு பாதுகாவலரும் பணிக்கு வருகிறாரா இல்லையா, திடீரென விடுப்பில் சென்றால் என்ன செய்வது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பெரிய தொல்லையாக அமையும்.


                          எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிய பாதுகாவல் நிறுவனங்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாக உள்ளது.  இதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.   


                            


                           

Thursday, September 7, 2023

ஆபத்தான தொழில்கள் நடக்கும் இடங்களில் வீடு, மனை வாங்காதீர்!

 ஆபத்தான தொழில்கள் நடக்கும் இடங்களில் வீடு, மனை வாங்காதீர்!



            பொதுவாக வீடு, மனை வாங்கும் போது அதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பகுதி குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.  விற்பவர், தரகர்கள் வாய் வழியாக வரும் செய்திகளில் அவர்களது நோக்கம் பிரதானமாக இருக்கும்.


             எனவே, அதை அப்படியே ஏற்பது என்பதைவிட உண்மைநிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  உதாரணமாக ஒரு புதிய மனைப்பிரிவு, குடியிருப்பு திட்டம் குறித்து விசாரிக்கும் போது, விற்பனை நிறுவனங்கள் கூறுவதில் பெரும்பாலான விஷயங்கள் அவர்களுக்கு சாதகமான விஷயங்களாகவே இருக்கும்.


             இதை அப்படியே நம்பினால், வீடு, மனை வாங்குவோர் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, தொழிற்பேட்டை பக்கத்திலேயே மனைப்பிரிவு இருக்கிறது என்பார்கள்.


             நாமும் பரவாயில்லை, வேலைக்கு விரைவாக சென்று வரலாம் என்று நினைத்து வாங்கிவிடுவோம்.  அங்கு குடியேறிய பின் தான் தொழிற்பேட்டையில் இருந்து வரும் பிரச்னைகள் தெரியவரும்.


           குறிப்பாக, நீங்கள் வீடு வாங்கும் பகுதி எத்தகைய நிலையில் உள்ளது என்பதை தன்னிச்சையாக ஆய்வு செய்ய வேண்டும்.  அதிலும், அதன் அருகில் தொழில் நிறுவனங்கள் இருந்தால் அதன் தன்மை, மாசு ஏற்படுத்துமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


              சில இடங்களில், குடியிருப்பு பகுதியாக இருக்கும், ஆனால், வீட்டிலேயே வைத்து குறுந்தொழில் செய்வார்கள்.  இதில் எத்தகைய தொழில் நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.


             குறிப்பாக, அக்கம் பக்கத்து வீடுகளில் குறுந்தொழில்கள் நடக்கின்றன என்றால் அது குறித்த கூடுதல் ஆய்வு தேவை.  உள்ளூர் நுகர்வோரை சார்ந்த தொழில்கள் என்றால் அதில் எத்தகைய அச்சமும் தேவையில்லை.


              அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் நடக்கும் குறுந்தொழில் பெரிய நிறுவனங்களை சார்ந்தது என்றால், அதனால் மாசு ஏற்படுமா என்பதை ஆராய வேண்டும்.  இதில் தோல் தொழில், சாயத் தொழில், மருந்து தயாரிப்பு போன்ற தொழில்களில் வெளிப்படும் மாசு உடனடியாக தெரியாது.


            இது போன்ற விஷயங்களில், அக்கம் பக்கத்து வீட்டுக்காரரை வெளியேற்ற முடியாது.  எனவே, வீடு வாங்கும் நிலையிலேயே கவனமாக இருந்து இப்பகுதிகளில் குடியேறுவதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.  


Wednesday, August 30, 2023

பட்டா பெயர் மாற்ற விவகாரத்தில் முட்டிக்கொள்ளும் அரசு துறைகள்!

 பட்டா பெயர் மாற்ற விவகாரத்தில் முட்டிக்கொள்ளும் அரசு துறைகள்!




சொத்து விற்பனையில் பத்திரப்பதிவுக்கு பின் பட்டா பெயர் மாற்றம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.


                 இதில், பத்திரப்பதிவு முடித்த பலரும் பட்டா மாறுதலுக்கு செல்லாமல் அலட்சியமாக உள்ளனர்.


                 வீடு மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கான பத்திர பதிவு முடிந்த பின், அவற்றிற்குரிய பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கான படிவம் பத்திர பதிவு துறை வாயிலாக வருவாய் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.


                 அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டா பெயர் மாறுதல் படிவம் (படிவம்-6) அனுப்பும் வசதி கணினி மூலம் செய்யப்படுகிறது.


                 குறிப்பிட்ட ஒரு பத்திர பதிவுக்குப் பின், அதற்கான பட்டா பெயர் மாற்றம் செய்யும் படிவத்தை இணைய வழி மூலம் வருவாய் துறைக்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.


                 அவ்வாறு அனுப்பப்பட்டதற்கு சான்றாக ஒப்புகை சீட்டு எண்ணுடன் பத்திராதரருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும் வசதியும் இருந்தது.


                  வீடு, மனை போன்ற சொத்துக்களை முழுமையாகவோ, பகுதியாகவோ வாங்கினால், அது தொடர்பான பட்டாவில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.  நீங்கள் யாரிடம் சொத்து வாங்குகிறீர்கள் என்று பார்க்கும் போது அவர் பெயரில் பட்டா இருப்பதை உறுதி செய்வது அவசியம்.


                  ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, விற்பவர் பெயரில் பட்டா இருந்தால் மட்டுமே பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.  ஆனால், சில நடைமுறை சிக்கல்களால் இதில் சார்-பதிவாளர்கள் கடுமை காட்டாமல் இருக்கின்றனர்.


                  இதனால், பல இடங்களில் பட்டா பெயர் மாற்றத்துக்கு மக்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.



                  இந்நிலையில், முழுமையாக விற்பனையாகும் சொத்துக்களின் பட்டாக்களில் தானியங்கி முறையில் பெயர் மாற்றத்துக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.   


                   இது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தரும் என்பதில் சந்தேகமில்லை.  அதே நேரத்தில் உட்பிரிவு விஷயத்தில் சில பிரச்னைகள் எழுகின்றன.


                   இதில், தனியார் சர்வேக்களை உரிமம் அளித்து பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இதற்காக, தனியார் சர்வேயர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன.


                   இத்துடன், கிராம நிர்வாக அலுவலர்களையும், உட்பிரிவு பட்டா வழங்கும் பணியில் ஈடுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான அறிவிப்பு பட் ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.  அரசின் இந்த அறிவிப்புக்கு நில அளவை துறையினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு போதிய அனுபவம் இருக்காது என்று நில அவையாளர்கள் கூறுகின்றனர்.


                   ஆனால், நடைமுறையில் நில அளவையாளர்களை காட்டிலும், கிராம நிர்வாக அலுவலர்கள்தான் பல விஷயங்களில் தேர்ந்தவர்களாக உள்ளனர்.  நில அளவை துறை சார்ந்த சில தொழில்நுட்பங்கள் வேண்டுமானால், அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.


                   நடைமுறையில் கிராமங்களில் எந்த நிலம் எப்படி உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது என்பதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நன்றாகவே புரிதல் இருப்பது மக்களுக்கு தெரியும்.  எனவே, இது விஷயத்தில் மோதலை தவிர்த்து, நில அளவை துறையினர் அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பதே நல்லது என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Friday, August 25, 2023

அபார்ட்மென்ட் வீடு வாங்குவோர் தீ தடுப்பு சான்றிதழை சரி பார்ப்பது அவசியம்!

 அபார்ட்மென்ட் வீடு வாங்குவோர் தீ தடுப்பு சான்றிதழை சரி பார்ப்பது அவசியம்!


   மக்கள் தொகை அதிகரிப்பால், கட்டுமான நிறுவனங்கள் அதிக தளங்கள், சிறப்பு வசதிகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றன.


         பொதுவாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், நில உரிமை பத்திரம், திட்ட அனுமதி வரைபடம் போன்றவற்றையே பார்க்கின்றனர்.  இதில், திட்ட அனுமதி வரைபடத்தின் அடிப்படையில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்பதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை.


        சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சிறப்பு வகைக் கட்டடங்கள், தொகுப்புக் கட்டடங்கள் மற்றும் குழுமத்தின் சிறப்பு அதிகாரங்களின் கீழ் பரிசீலனை செய்யப்படவுள்ள கட்டடங்களுக்குத் திட்ட அனுமதி வழங்குகிறது மற்றும் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு அரசின் ஒப்புதலுடன் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.


          இதனால், கட்டுமான நிறுவனங்களில் தவறுகளால் வீடு வாங்குவோர் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

          

          குறிப்பாக, திட்ட அனுமதி வரைபடத்தில் உள்ள அளவை காட்டிலும் கூடுதலாக அறைகள் இருந்தால், அது லாபம் என்று நினைப்பது தவறு.  பல இடங்களில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கூடுதல் பரப்புகளை விலையில் சேர்க்காமல் கொடுப்பதாக கட்டுமான நிறுவனங்கள் கூறும்.


           வணிக ரீதியில், கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், கூடுதலாக கட்டப்பட்ட பகுதிகளை, உங்களுக்கு இலவசமாக கொடுப்பது நடைமுறையில் சாத்தியமா என்று யோசிக்க வேண்டும்.  இது போன்ற சில சலுகைகளை பார்த்து மற்ற விஷயங்களை விசாரிப்பதில் பலரும் சமரசம் செய்துக் கொள்கின்றனர்.  குறிப்பாக, கட்டடத்தின் திட்ட அனுமதி வரைபடத்துக்கு அப்பால், பணிகள் முறையாக முடிந்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.  இத்துடன், அந்த கட்டடம் பாதுகாப்பானது என்பதற்காக, தீயணைப்பு துறை தரும் தடையின்மை சான்று இருக்க வேண்டும்.


             இதனால் என்ன பயன் என்று பலரும் அலட்சியமாக இருக்கின்றனர்.


             நீங்கள் குடியிருக்கப் போகும் கட்டடத்தில் முறையாக தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வழங்கப்படும் சான்று இது.  இந்த சான்று இல்லாத வீட்டை வாங்குவோர், பிற்காலத்தில், பிரச்னை ஏற்படும் நிலையில் பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழல் வரலாம்.  எனவே, தீ தடுப்பு சான்று, போன்ற அடிப்படை ஆவணங்கள் விஷயத்தில் துளியும் சமரசம் செய்துக்கொள்ளாதீர்.


              இது போன்ற அடிப்படை விஷயங்களில் கட்டுமான நிறுவனத்திடம் கடுமையாக நடந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.  முக்கியமாய் சொத்தை பதிவு செய்யும் போது கட்டடம் முடித்ததற்கான சான்றிதழ் தேவையில்லை, ஆனால், அது அவசியமில்லை என்று அர்த்தமல்ல, விதிகளின்படி, கட்டடப் போட்டிச் சான்றிதழ் சொத்தை சட்டபூர்வமாக்குகிறது.


              சம்பந்தப்பட்ட உள்ளூர் அரசு அல்லது குடிமை நிறுவனங்களிடமிருந்து டெவலப்பர் ஆக்கிரமிப்புச் சான்றிதழைப் பெறாத வரை, யாரும் கட்டடத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.     


சொத்து நிர்வாகத்தில் குடும்ப ஏற்பாட்டுக்கும், பாகப் பிரிவினைக்கும் வேறுபாடு என்ன?

 சொத்து நிர்வாகத்தில் குடும்ப ஏற்பாட்டுக்கும், பாகப் பிரிவினைக்கும் வேறுபாடு என்ன?


 சொத்துக்கள் இருந்தால் எதிர்காலத்தில் குடும்பத்துக்கு நல்லது என அனைவரும் நம்புகின்றோம்.

     ஆனால், சொத்துக்களை, ஒவ்வொருவருக்கும் பங்கு பிரித்துக்கொடுப்பதில் ஆயிரமாயிரம் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

     இப்படியான பரம்பரை சொத்துக்களை பங்கிட்டு கொள்வதில் ஏற்படும் சச்சரவுகளில் குடும்பத்தின் கவுரவம் பாதிக்காமல் இருக்க வேண்டும் என சிலர் நினைப்பர்.

      இதற்கான தீர்வாய் தான் இந்த பேமிலி அக்ரிமென்ட்எனப்படும் குடும்ப ஏற்பாடு முறை வந்தது.  இதுபோன்ற பல சொத்து பிரச்னைகளுக்கு இந்த முறை கைக்கொடுக்கிறது.  குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் வகையிலான ஒப்பந்தம் செய்து கொள்வதே இதன் அடிப்படை.

      தங்கள் குடும்பத்துக்குள் ஏற்படும் சொத்துப் பிரச்னையை குடும்ப உறுப்பினர்களே பேசி சரி செய்து, பங்கிட்டுக் கொள்வதை சட்டம் நேரிடையாக அங்கீகரிக்காது.  அதாவது, குடும்ப ஏற்பாட்டை ஒரு சொத்து பரிமாற்றமாக சட்டம் கருதாது.  ஆனால், ஒருவர் தனக்கான உரிமையை இன்னொருவருக்கு விட்டு கொடுப்பதை சட்டம் இதன் வாயிலாக அங்கீகரிக்கிறது.

      குடும்ப ஏற்பாடு என்பது, சிறியோர், பெரியோர் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் உள்ளடக்கியதாக அமையும்.  குறிப்பாக, மைனர்களையும், கருவில் இருக்கும் சிசு உள்பட, அனைத்து நிலையிலும் யார் யாருக்கு உரிமை கோர வாய்ப்பு இருக்கிறதோ அனைவரையும் உள்ளடக்கியதாக உள்ளது.

       நம் நாட்டில் குடும்ப ஏற்பாடு, ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிமுறையாக இல்லாமல் அதற்கு அப்பாற்பட்ட நிலையில் அனைவருக்கும் பொதுவானதாக அமைந்துள்ளது.  எனவே, சட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் குடும்ப ஏற்பாடு சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

        இது பாகப்பிரிவினை ஆவணத்தை விட, சில குறிப்பிட்ட அம்சங்களில் வேறுபடுகிறது.  குறிப்பாக, தகராறு ஏற்படும் என்ற யூகத்தின் அடிப்படையில், அதை தவிர்க்க, சுமுகமாக பங்கீட்டுக்கு குடும்ப ஏற்பாடு மேற்கொள்ளலாம்.

    சொத்துக்காக, தகராறு ஏற்பட்டு, பல ஆண்டுகளாய் நிலுவையில் இருக்கும் பல வழக்குகளை நம் நீதி மன்றமும், நாமும் அறிவோம்.  அப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க, இந்த குடும்ப சொத்து ஏற்பாடு உதவுகிறது.

    சொத்து பங்கீடு உயில் மூலம் நடக்கும் போது, பல வரையறைகள் உண்டு.  உயிலில் இல்லாத நபர்கள் அடங்கியிருக்காது.  இதற்கு பஞ்சாயத்து பேச வெளியாட்கள் உள் நுழைவர்.  குடும்பத்து ஆட்களை தாண்டி சொத்து வெளியாட்களிடமும் செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.  உயில் வாயிலான பாகப்பிரிவினையில், குடும்பத்துக்கு வெளியில் உள்ளவர்களும் சில சமயம் உள்ளே வருவர்.  ஆனால், குடும்ப ஏற்பாடு என்ற வழிமுறையில், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வருவர்.

    குடும்ப ஏற்பாடு என்பதில் உறுப்பினர்கள் ஒட்டுமொத்த பொது நலன் அடிப்படையில் சொத்து மீதான தன் உரிமையை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க வாய்ப்புகள் உண்டு.இதில், ஒரு முறை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தேவை அடிப்படையில் திருத்த வாய்ப்பு உள்ளது.

    ஆனால், பாகப்பிரிவினையில் இத்தகைய வழிமுறைகள் இல்லை.  இதனால், பாகப்பிரிவினை அடிப்படையில் சொத்துக்களை பங்கிடுவதை காட்டிலும், குடும்ப ஏற்பாடு என்ற பெயரில் உரிமையை தாமாக முன்வந்து பகிர்ந்து கொள்ளலாம் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.


The hidden details while buying an under-construction property

 The hidden details while buying an under-construction property

         Here are some vital ways through which you can safeguard your interests while purchasing an under-construction property from a real estate developer

               Before one even begins their home buying journey, homebuyers must make a crucial decision - purchase a home in an under-construction project or look for a ready-to-move-in (RTMI) home.  And more often than not, this decision is influenced by the finances at hand.  If a homebuyer has more than 20 percent of the total property amount ready to pay as a down payment upfront, chances are they would pick an RTMI home.  However, under-construction homes offer the flexibility of paying the down payment in tranches, i.e., the payment is linked to project completions, and thus you can pay in phases.  This convenience often leads one to pursue an under-construction project and if you are one of them, read on to know the key things you must check before investing.

The floor formula

          In a bid to ensure that the project is completed on time, and you get your possession on the promised date, invest in a project that is already 50 percent completed.

         “If a project is supposed to be 10-storey tall, then buy only if the developer has finished constructing at least five floors.  You can easily ask the developer about the number of floors or check the RERA website to know the project details.  This rule works well because once the project is 50 percent complete, the completion generally does not take more than two years.”

Who is your developer?

      Although this is the most obvious thing to check, many people barely scratch the surface when it comes to researching the developer’s background.

Conduct a social experiment by asking your friends and family who recently bought a house with the same developer the following questions:

1.       How many projects has your builder previously completed?

2.       Are there any litigations going on against your developer?

3.       How is the construction quality of his other projects? Do residents have any complaints?

4.       Has your developer explained the difference between super built-up, built-up, and carpet area?

5.       What is the importance of a sales agreement when you buy a home?

    Regardless of whether your friends and family were able to answer the above questions, you must ensure that you know all the answers before investing in the project.

    In the age of the Internet and easy access to the RERA website, not conducting a background check on the developer is almost inexcusable.  “Check the state’s RERA website and read up on all the available information.  Go through all the data available on the previous projects delivered by the developer.  If possible, get in touch with someone who already stays in one of the developer’s past projects.  This will give you additional information about the developer”.

The per-floor calculation

     A floor-rise premium is an industry norm, and developers slash this premium usually during the festive season or when they are trying to negotiate a deal.  “However when it comes to under-construction projects, as each floor is completed, the cost of the property is hiked by around one percent.  Thus, when you are negotiating the price, do take into consideration at what stage the project currently is at”.


Thursday, May 25, 2023

வீடு வாங்குவோர் பரப்பளவு தொடர்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 வீடு வாங்குவோர் பரப்பளவு தொடர்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்....

       ரியல் எஸ்டேட் சட்டத்தால், அதற்கான ஆணையத்தில் பதிவு செய்யும்போது மட்டும் கட்டுமான நிறுவனங்கள் 'கார்பெட் ஏரியா' வை சொல்கின்றனமற்றபடி, விற்பனை நிலையில் வாடிக்கையாளர்களிடம் இதை சொல்லாமல் விட்டுவிடுகின்றன.

      சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதியை மட்டும்தான் வீட்டின் அளவாக கருதி விலை நிர்ணயிக்க வேண்டும் என்கின்றனர்நடைபாதை, மாடிப்படி, வாகன நிறுத்துமிடம் போன்ற பொது இடங்களுக்கான கட்டுமான செலவு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது.

       பொது பயன்பாட்டு இடங்களுக்கான கட்டுமான செலவு அத்திட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் எண்ணிக்கை அடிப்படையில் பிரிக்கப்பட்டு விலையில் சேர்க்கப்படலாம்ஆனால், பல கட்டுமான நிறுவனங்கள் கார்பெட் ஏரியாவில் சதுர அடி, 4 , 000 ருபாய் என்ற அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கின்றனஇதனால், வீடு வாங்குவோர் மிக துல்லியமான முறையில் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் நடக்கின்றனஇதில், மொத்த பரப்பளவு என்ற அடிப்படையில் பொது இடங்களையும் சேர்த்து சூப்பர் பில்டப் ஏரியா வுக்கே விலை பேசப்படுகிறது.

       இது விஷயத்தில் வீடு வாங்குவோர் விழிப்புடன் இருந்து பொது பயன்பாட்டு இடங்களுக்கான விலை என்ற வகையில் எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது என விசாரிக்க வேண்டும்கார்பெட் ஏரியா வுக்கான விலையே பொது இடங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தால், அங்கு ஆட்சேபிக்கலாம்.

       இதில் வீடு வாங்குவோருக்கு சட்ட பூர்வ உரிமைகள் உண்டுஅதை மக்கள் பயன்படுத்துகின்றனரா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

      வீடு வாங்குவோர், நமக்கு கிடைக்கும் வீட்டின் பரப்பளவு என்ன, அதில் கார்பெட் ஏரியா எவ்வளவு என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்பின், அதன் அதன் விலையில் என்ன நடந்து இருக்கிறது என்பதை ஆராய்ந்தால் பல்வேறு உண்மைகள் தெளிவாக தெரிந்து விடும் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்

புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க

  புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என...