Showing posts with label ASSOCIATION. Show all posts
Showing posts with label ASSOCIATION. Show all posts

Thursday, September 7, 2023

ஆபத்தான தொழில்கள் நடக்கும் இடங்களில் வீடு, மனை வாங்காதீர்!

 ஆபத்தான தொழில்கள் நடக்கும் இடங்களில் வீடு, மனை வாங்காதீர்!



            பொதுவாக வீடு, மனை வாங்கும் போது அதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பகுதி குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.  விற்பவர், தரகர்கள் வாய் வழியாக வரும் செய்திகளில் அவர்களது நோக்கம் பிரதானமாக இருக்கும்.


             எனவே, அதை அப்படியே ஏற்பது என்பதைவிட உண்மைநிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  உதாரணமாக ஒரு புதிய மனைப்பிரிவு, குடியிருப்பு திட்டம் குறித்து விசாரிக்கும் போது, விற்பனை நிறுவனங்கள் கூறுவதில் பெரும்பாலான விஷயங்கள் அவர்களுக்கு சாதகமான விஷயங்களாகவே இருக்கும்.


             இதை அப்படியே நம்பினால், வீடு, மனை வாங்குவோர் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, தொழிற்பேட்டை பக்கத்திலேயே மனைப்பிரிவு இருக்கிறது என்பார்கள்.


             நாமும் பரவாயில்லை, வேலைக்கு விரைவாக சென்று வரலாம் என்று நினைத்து வாங்கிவிடுவோம்.  அங்கு குடியேறிய பின் தான் தொழிற்பேட்டையில் இருந்து வரும் பிரச்னைகள் தெரியவரும்.


           குறிப்பாக, நீங்கள் வீடு வாங்கும் பகுதி எத்தகைய நிலையில் உள்ளது என்பதை தன்னிச்சையாக ஆய்வு செய்ய வேண்டும்.  அதிலும், அதன் அருகில் தொழில் நிறுவனங்கள் இருந்தால் அதன் தன்மை, மாசு ஏற்படுத்துமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


              சில இடங்களில், குடியிருப்பு பகுதியாக இருக்கும், ஆனால், வீட்டிலேயே வைத்து குறுந்தொழில் செய்வார்கள்.  இதில் எத்தகைய தொழில் நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.


             குறிப்பாக, அக்கம் பக்கத்து வீடுகளில் குறுந்தொழில்கள் நடக்கின்றன என்றால் அது குறித்த கூடுதல் ஆய்வு தேவை.  உள்ளூர் நுகர்வோரை சார்ந்த தொழில்கள் என்றால் அதில் எத்தகைய அச்சமும் தேவையில்லை.


              அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் நடக்கும் குறுந்தொழில் பெரிய நிறுவனங்களை சார்ந்தது என்றால், அதனால் மாசு ஏற்படுமா என்பதை ஆராய வேண்டும்.  இதில் தோல் தொழில், சாயத் தொழில், மருந்து தயாரிப்பு போன்ற தொழில்களில் வெளிப்படும் மாசு உடனடியாக தெரியாது.


            இது போன்ற விஷயங்களில், அக்கம் பக்கத்து வீட்டுக்காரரை வெளியேற்ற முடியாது.  எனவே, வீடு வாங்கும் நிலையிலேயே கவனமாக இருந்து இப்பகுதிகளில் குடியேறுவதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.  


Friday, August 25, 2023

அபார்ட்மென்ட் வீடு வாங்குவோர் தீ தடுப்பு சான்றிதழை சரி பார்ப்பது அவசியம்!

 அபார்ட்மென்ட் வீடு வாங்குவோர் தீ தடுப்பு சான்றிதழை சரி பார்ப்பது அவசியம்!


   மக்கள் தொகை அதிகரிப்பால், கட்டுமான நிறுவனங்கள் அதிக தளங்கள், சிறப்பு வசதிகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றன.


         பொதுவாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், நில உரிமை பத்திரம், திட்ட அனுமதி வரைபடம் போன்றவற்றையே பார்க்கின்றனர்.  இதில், திட்ட அனுமதி வரைபடத்தின் அடிப்படையில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்பதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை.


        சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சிறப்பு வகைக் கட்டடங்கள், தொகுப்புக் கட்டடங்கள் மற்றும் குழுமத்தின் சிறப்பு அதிகாரங்களின் கீழ் பரிசீலனை செய்யப்படவுள்ள கட்டடங்களுக்குத் திட்ட அனுமதி வழங்குகிறது மற்றும் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு அரசின் ஒப்புதலுடன் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.


          இதனால், கட்டுமான நிறுவனங்களில் தவறுகளால் வீடு வாங்குவோர் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

          

          குறிப்பாக, திட்ட அனுமதி வரைபடத்தில் உள்ள அளவை காட்டிலும் கூடுதலாக அறைகள் இருந்தால், அது லாபம் என்று நினைப்பது தவறு.  பல இடங்களில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கூடுதல் பரப்புகளை விலையில் சேர்க்காமல் கொடுப்பதாக கட்டுமான நிறுவனங்கள் கூறும்.


           வணிக ரீதியில், கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், கூடுதலாக கட்டப்பட்ட பகுதிகளை, உங்களுக்கு இலவசமாக கொடுப்பது நடைமுறையில் சாத்தியமா என்று யோசிக்க வேண்டும்.  இது போன்ற சில சலுகைகளை பார்த்து மற்ற விஷயங்களை விசாரிப்பதில் பலரும் சமரசம் செய்துக் கொள்கின்றனர்.  குறிப்பாக, கட்டடத்தின் திட்ட அனுமதி வரைபடத்துக்கு அப்பால், பணிகள் முறையாக முடிந்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.  இத்துடன், அந்த கட்டடம் பாதுகாப்பானது என்பதற்காக, தீயணைப்பு துறை தரும் தடையின்மை சான்று இருக்க வேண்டும்.


             இதனால் என்ன பயன் என்று பலரும் அலட்சியமாக இருக்கின்றனர்.


             நீங்கள் குடியிருக்கப் போகும் கட்டடத்தில் முறையாக தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வழங்கப்படும் சான்று இது.  இந்த சான்று இல்லாத வீட்டை வாங்குவோர், பிற்காலத்தில், பிரச்னை ஏற்படும் நிலையில் பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழல் வரலாம்.  எனவே, தீ தடுப்பு சான்று, போன்ற அடிப்படை ஆவணங்கள் விஷயத்தில் துளியும் சமரசம் செய்துக்கொள்ளாதீர்.


              இது போன்ற அடிப்படை விஷயங்களில் கட்டுமான நிறுவனத்திடம் கடுமையாக நடந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.  முக்கியமாய் சொத்தை பதிவு செய்யும் போது கட்டடம் முடித்ததற்கான சான்றிதழ் தேவையில்லை, ஆனால், அது அவசியமில்லை என்று அர்த்தமல்ல, விதிகளின்படி, கட்டடப் போட்டிச் சான்றிதழ் சொத்தை சட்டபூர்வமாக்குகிறது.


              சம்பந்தப்பட்ட உள்ளூர் அரசு அல்லது குடிமை நிறுவனங்களிடமிருந்து டெவலப்பர் ஆக்கிரமிப்புச் சான்றிதழைப் பெறாத வரை, யாரும் கட்டடத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.     


Monday, September 26, 2022

அடுக்குமாடி உரிமையாளர் சங்கத்துக்கு வீடு விற்க அதிகாரம் உள்ளதா?

 அடுக்குமாடி உரிமையாளர் சங்கத்துக்கு வீடு விற்க அதிகாரம் உள்ளதா?

        சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக வந்துவிட்டனஇதில், குடியிருப்பு பராமரிப்பு பொறுப்பை ஏற்க சங்கங்கள் அமைக்கப்படுகின்றன.

        பல இடங்களில், கட்டுமான நிறுவனமே இத்தகைய சங்கங்களை ஏற்படுத்தி பதிவு செய்ய உதவுகின்றனஇதில் சம்பந்தப்பட்ட குடியிருப்புகளில் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பு என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.


#realestate #investment #propertyowners #apartment #rwa #society

         ஒரு குடியிருப்பில், 100 வீடுகள் இருக்கிறது என்றால் அங்கு பொது இட பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனைத்து உரிமையாளரும் வர முடியாதுஇதற்காகத்தான், உரிமையாளர்களில் ஒருவர் சங்க நிர்வாகியாக நியமிக்கப்படுகிறார்இவ்வாறு நியமிக்கப்படும் நிர்வாகிகள் முறையாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான் சங்க துணை விதிகள், சட்ட விதிகள் உள்ளனசில இடங்களில் சங்க நிர்வாகிகளாக வருவோர், எல்லை தாண்டி செயல் படுவதாக புகார் எழுகிறது.

         குறிப்பாக, குடியிருப்பு வளாகத்தில் பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள் முறையாக நடப்பதை உறுதி செய்வது, அதற்கான பணியாளர்களை நியமிப்பது, பொருட்களை வாங்குவது போன்றவையே அடிப்படை பணியாக உள்ளது.

           ஆனால், சில இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் அங்குள்ள விற்கப்படாத வீடுகளை விற்பது உள்ளிட்ட தரகர் வேலையிலும் இறங்குகின்றனர்இவ்வாறு செய்வது சங்கத்தின் அடிப்படை நோக்கத்துக்கு மாறானதாகும்மேலும், குடியிருப்பு வளாகத்தின் மறு கட்டுமான திட்டத்துக்காக வரும் கட்டுமான நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதிலும் சில சங்க நிர்வாகிகள் ஈடுபடுகின்றனர்இவ்வாறு செயல்படும் நிர்வாகிகளை அசாதாரண பொதுக்குழு கூட்டம் நடத்தி விசாரிக்க வேண்டும்அதில் உரிய பொறுப்பான பதில் கிடைக்காத நிலையில் நிர்வாகிகளை நீக்குவதை தவிர்த்து வேறு வழியில்லை.

            குடியிருப்பு வளாகத்தில் உரிமையாளர்களின் அடிப்படை நலனுக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளையும் அசாதாரண பொதுக்குழு கூட்டம் நடத்தி விசாரிக்கலாம்கணக்கு வழக்கில் முறைகேடுகள் செய்து இருப்பது உறுதியானால், அவர்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதுஇதை உணர்ந்து சங்க நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்கின்றனர் பதிவுத் துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Thursday, September 22, 2022

Real Estate Investment Consultant


Real Estate Investment Consultant


 https://www.youtube.com/channel/UCrf-_u-WQTuDth5vJ4Et1rg
https://www.facebook.com/VVPCHENNAI/
https://www.linkedin.com/in/dr-prabhu-venkataraman-87a73915b/
Twitter @prabhuvvp
#realestate #investment #propertysale #chennai #tamilnadu #india #consultant #homeloan #sbi #hdfc #kvb #icicibank #lichfl #socialservice #gatedcommunity #apartments #flats #villas #plots #commercialshops #internationalsales #interiors #homelane #squareyards #township #highrise #service #integratedtownship #lifestyle #luxuryapartments #security&safety

An emerging real estate service provider established in Chennai, dealing in properties and everything covered under the realm of the word to say plots, villas, apartments, etc. We believe in not just settling deals but in educating our customers about every minute detail that effects the real estate market and can influence their decision-making. Always making the customer’s needs our prime concern. We teach, we lead we suggest and test until you find what you wished for providing a one-stop for all property solutions

TN Govt. RERA Certified Property Consultant
Branded Interiors
International Sales
No Brokerage / Commissions
Transparency and Accountability
End-to-End Solution
Team of Professionals
Financial Services : We are empaneled with all the leading banks were all the required service will be at the doorstep.

யு.டி.எஸ்., சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள்!

    யு.டி.எஸ்., சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள்!

         அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவோர், அதற்கான நிலம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்இதில் நிலம் யாருடையது, அது கட்டுமான நிறுவனத்தால் எந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை வீடு வாங்குவோர் அறிய வேண்டியது அவசியம்.

          நீங்கள் வீடு வாங்க தீர்மானித்துள்ள அடுக்குமாடி திட்டம் அமைந்துள்ள நிலம் யாருடையதுஅதில், கட்டுமான நிறுவனத்தின் உரிமை என்ன என்பதை முன்பணம் கொடுக்கும் நிலையிலேயே விசாரிக்க வேண்டும்.


                            #uds #apartment #investment #propertysale #gatedcommunity

         இன்றைய சூழலில், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் நிலத்தை தங்கள் பெயருக்கு கிரையம் செய்து கொள்வதில்லைஉரிமையாளரிடம் பவர் வாங்கி அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துகின்றன.

          இதில், பெரிய பரப்பளவு நிலங்களை வாங்கி அதிக எண்ணிக்கையில் வீடு கட்டுவது ஒரு வகைஇரண்டு வெவ்வேரு நபர்களின் பெயரில் உள்ள தலா அரை கிரவுண்ட் நிலத்துக்கு பவர் பெற்று, அதில் வீடு கட்டுவது ஒரு வகை.

          இவ்வாறு சிறிய அளவில் நிலத்தை மேம்படுத்தும்போது, அதில் குறிப்பிட்ட அளவு வீடுகள் உரிமையாளர்களுக்கே கொடுக்கப்படும்இவர்களுக்கு போக மீதியுள்ள வீடுகள் வெளியாருக்கு விற்கப்படும்.

         இப்படி வெளியாருக்கு விற்கப்படும் வீடுகளுக்கு யு.டி.எஸ்., பங்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றனகுறிப்பாக, இது போன்ற திட்டங்களில், 50 சதவீத யு.டி.எஸ்., பழைய உரிமையாளர்களுக்கு சென்றுவிடும்மீதியுள்ள, 50 சதவீத  யு.டி.எஸ்., வீடு வாங்குவோருக்கு வழங்கப்படும்இதில் எத்தனை வீடுகள் வருகிறதோ அவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும்.

          ஆனால், சில இடங்களில், மொத்தமாக, 50 சதவீத  யு.டி.எஸ்., பங்கை வைத்துள்ள பழைய நில உரிமையாளர்கள் புதிதாக வீடு வாங்குவோரை சிறுபான்மையாக கருதி பல்வேறு தொல்லைகள் கொடுப்பது தொடர்பான புகார்கள் எழுகின்றன.

           சில இடங்களில் வழக்கு வரை செல்லும் அளவுக்கு இப்பிரச்னை செல்கிறதுபழைய உரிமையாளர், புதிய உரிமையாளர் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் முறையான யு.டி.எஸ்., பங்கு அளிக்கப்பட வேண்டும் என்கின்றனர், நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Tuesday, June 1, 2021

TNRECA ( Tamil Nadu Real Estate Consultants Association) 21.12.2017

Formed in the year 2017, TNRECA ( Tamil Nadu Real Estate Consultants Association) has revolutionized the practice of real estate consulting and marketing in Tamil Nadu. TNRECA members are predominantly engaged in the primary real estate market (New Projects). All TNRECA members are registered with TNRERA. TNRECA already comprises of 36 registered members in a very short period of time. TNRECA excels on the virtues of ethics, transparency, accountability, rule of law, good governance and above all, professionalism.





VV PROPERTIES Proprietor PRABHU VENKATARAMAN - TNRECA -RECON EVENT 02.04.2019


            @ Hotel Taj Coromandel - Chennai





TNRECA ELECTION 07-02-2020

Elected As a TNRECA 
-Vice President 

Election Officers: Mr.Ajay Kumar
Mr.Vijay  &  Mr.Sankara Pandian










With Mr. Sam Udhaya Kumar 
With Mr.Srinivasan

With Mr. Shah Nawaz Khan

With Mr. Robert















Sunday, May 30, 2021

VV PROPERTIES - TNRECA




    TNRECA - RECON GROUP PHOTO



                              TNRECA - CASA GRAND 



CASA GRAND AWARD

            TNRECA  MEMBERS - RECON @ HOTEL TAJ COROMANDEL CHENNAI

அடுக்குமாடி குடியிருப்புகளில் தேவைப்படும் புதிய பொது வசதிகள் என்ன?

  அடுக்குமாடி குடியிருப்புகளில் தேவைப்படும் புதிய பொது வசதிகள் என்ன?  இன்றைய சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர்க்க முடியாத அளவுக்கு ம...