Saturday, September 28, 2024

தரமான யுபிவிசி ஜன்னல்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் !

 தரமான யுபிவிசி ஜன்னல்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்!
புதிதாக வீடு கட்டுபவர்கள் அடிப்படை கட்டுமான பணிகள் முடியும் நிலையில் தான் ஜன்னல்கள் அமைப்பது தொடர்பாக கவனம் செலுத்துகின்றனர்.  இதில் வீட்டுக்கான வரைபடம் தயாரிக்கும் நிலையிலேயே ஜன்னல்கள் அமையும் இடம், அளவுகள் ஆகியவற்றை முடிவு செய்ய வேண்டும்.
 
குறிப்பாக, வீட்டில் பிரதான கதவு எந்த பக்கம் அமையும் என்று பார்த்து அதற்கு ஏற்ற வகையில் காற்றோட்டத்தை கணக்கிட்டு ஜன்னல்களை அமைக்க வேண்டும்.  அப்போது தான் வெளியில் வரும் காற்று முறையாக வெளியேறுவதற்கு வழி கிடைக்கும்.

இதில் ஜன்னல்களுக்கு கம்பிகள் அமைத்து, மரம் அல்லது கண்ணாடி கதவுகள் அமைப்பதே வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது.  இந்நிலையில், பிவிசி, யுபிவிசி என புதிய வகை பொருட்கள் வருகையால் ஜன்னல்கள் அமைப்பது தற்போது எளிதாக உள்ளது.

வீடுகளில் மரத்தால் ஜன்னல்கள் அமைப்பதை விட, யுபிவிசி முறையில் ஜன்னல்கள் அமைக்கும் போது ஓரங்களில் தேவையில்லாத இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கட்டுமான நிலையிலேயே ஜன்னல்கள் பிரேம்களுக்கான அளவு எடுக்கும் பணிகளை முடிக்க வேண்டும்.

பூச்சு வேலை முடிந்த நிலையில் ஜன்னல் பிரேம்களை பொருத்தினால், ஓரங்களில் இடைவெளி இருந்தாலும் அதை அடைத்து சரி செய்ய முடியும்.

குறிப்பாக, பழைய வீட்டில் மர ஜன்னலை அகற்றிவிட்டு, யுபிவிசி ஜன்னல் அமைக்கும் நிலையில் ஓரங்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மரம் அல்லது இரும்பு பிரேம்களால் தயாரிக்கப்பட்ட ஜன்னல்கள் அமைக்கப்பட்ட இடங்களில் தற்போது, அதை அகற்றிவிட்டு, யுபிவிசி ஜன்னல் அமைக்க மக்கள் விரும்புகின்றனர்.

அழகிய தோற்றம் மட்டுமல்லாது, பயன்படுத்துவதற்கும் எளிதாக இருப்பதால் யுபிவிசி ஜன்னல்களை அமைக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது போன்று, உங்கள் வீட்டில் யுபிவிசி ஜன்னல்கள் அமைக்க நீங்கள் திட்டமிட்டால் அதற்கான இடத்தை தயார் செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஜன்னல்களுக்கான கதவுகள் எந்த பக்கம் திறக்கப்பட வேண்டும் என்பதையும், அதில் பாதுகாப்பு காரணங்களையும் கவனிக்க வேண்டும்.

வீட்டின் வெளிப்புறத்தில் காலியிடம் இல்லாத நிலையில் உட்புறமாக திறந்து மூடும் வகையில் ஜன்னல்களை அமைப்பது நல்லது.  பயன்பாட்டு நிலையில் பிரச்னை ஏற்படும் என்று தெரிந்தால் ஸ்லைடிங் முறையில் திறக்கும் அமைப்புகளை தேர்வு செய்யலாம்.

யுபிவிசி ஜன்னல்களை வாங்கும் போது, விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமில்லாத தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தினால், அது உடல் நல பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.

எனவே, நீங்கள் என்ன வகை யுபிவிசி ஜன்னல்களை யாரிடம் இருந்து வாங்குவது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

கட்டுமான ஒப்பந்ததாரர் பார்த்துக்கொள்வார் என்று அலட்சியம் காட்டாமல் உரிமையாளர் இதில் நேரடியாக தலையிட வேண்டும்.

இவ்வகை ஜன்னல்களில், கண்ணாடிகள் அமைப்பது தொடர்பான விஷயங்களிலும் மிக மிக கவனமாக செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Friday, September 27, 2024

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவோர் பட்டா பெறுவது எப்படி?

 அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவோர் பட்டா பெறுவது எப்படி?

இன்றைய சூழலில், வீடு மனை வாங்குவோர் அது தொடர்பான பத்திரப்பதிவுக்கு பின் பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.

பட்டா மாறுதல் விஷயத்தில் மக்கள் கவனம் செலுத்த துவங்கியிருப்பது நல்ல விஷயம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


ஆனால், தனியாக நிலம் அல்லது வீடு வாங்குவோர் மட்டும் தான் பட்டா மாறுதல் விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர்.  அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கும் நபர்கள் பட்டா தொடர்பான விஷயங்களில் உரிய கவனம் செலுத்துவதில்லை.

இதனால், பெரும்பாலான பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின் பட்டா, அதன் பழைய உரிமையாளர் பெயரிலேயே தொடர்கிறது.

இதில் குறிப்பிட்ட சில விஷயங்களில் மக்கள் காட்டும் அலட்சியம் நடைமுறை ரீதியாக பல்வேறு புதிய சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

இன்றைய சூழலில், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், தங்கள் பெயரில் நிலத்தை கிரையம் பெறுவதில்லை என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.  ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் நிலங்களை ஒருங்கிணைத்து தான் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டங்களுக்கான நிலங்களை ஒருங்கிணைக்கும் நிலையில் அதன் பழைய உரிமையாளர்களிடம் இருந்து பொது அதிகாரத்தை மட்டுமே கட்டுமான நிறுவனங்கள் பெறுகின்றன.  இந்த பொது அதிகாரத்தின் அடிப்படையிலேயே கட்டுமான பணிகளை முடித்து வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இது போன்ற திட்டங்களில் வீடு வாங்குவோர் தங்களுக்கான வீட்டின் பரப்பளவு என்ன, நிலத்தின் பிரிபடாத பங்கான யுடிஎஸ் எவ்வளவு என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர்.

தனக்கான கிரைய பத்திரத்தில் யுடிஎஸ் அளவு சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதுடன் மக்களின் சரி பார்ப்பு முடிந்து விடுகிறது.

நீங்கள் வாங்கும் வீட்டுக்கு ஒதுக்கப்படும் யுடிஎஸ் பரப்பளவு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மட்டுமே அது உங்களுக்கு உரிமையானதாக மாறிவிடாது என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.  அந்த யுடிஎஸ் பரப்பளவுக்கு நீங்கள் முழுமையான உரிமையாளர் ஆக வேண்டும் என்றால் பட்டா மாற்றம் நடக்க வேண்டும்.

தனியாக வீடு, மனைகளுக்கு மட்டும் தான் பட்டா வழங்கப்படும், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கு பட்டா வழங்கப்படுகிறதா என்பதே பலருக்கும் குழப்பமாக உள்ளது.

இதனால், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு திட்ட நிலங்கள் சம்பந்தமே இல்லாமல் பழைய உரிமையாளர்கள் பெயரில் தொடர்கின்றன.

இதில் அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர் கூட்டாக தாலுகா அலுவலகத்தில்  விண்ணப்பித்தால், யுடிஎஸ் பாகத்துக்கான பட்டா வாங்க முடியும்.

கூட்டு பட்டா அல்லது தனி பட்டா என்ற அடிப்படையில் தங்களுக்கான யுடிஎஸ் பாகத்துக்கான பட்டாவை மக்கள் பெற முடியும்.

அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர் இது விஷயத்தில் உரிய கவனம் செலுத்தினால், எதிர்காலத்தில் அந்த நிலத்தை வேறு நிறுவனம் வாயிலாக மேம்படுத்தும் நிலையில் பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள். 

Monday, September 23, 2024

நில அளவை வரைபட ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

 நில அளவை வரைபட ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
வீடு, மனை வாங்கும் போது அதற்கான பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ்களை ஆய்வு செய்தால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர்.
உண்மையில் இதற்கு அப்பால் நில அளவை அடிப்படையில் வரைபடங்கள், ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
நிலம் தொடர்பான வருவாய் துறை ஆவணங்கள் என்றால் அதில் பட்டாவை வாங்கி பார்த்தால் போதும், அதில் யார் பெயர் இருக்கிறது என்பதை சரி பார்த்தால் அனைத்தும் முடிந்து விடும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
நிலத்தின் பட்டாவுக்கு அப்பால் அது தொடர்பான மேலும் சில விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, பத்திரத்தில் இருக்கும் சொத்தின் சர்வே எண்ணும், பட்டாவில் உள்ள சர்வே எண்ணும் சரியா என்பதை கவனிக்க வேண்டும். இதில், ஏதாவது உட்பிரிவு, பரப்பளவு மறைக்கப்பட்டு இருந்தால் அது குறித்த தகவல்களை கேட்டு பெற வேண்டியது அவசியம்.
பட்டாவுக்கும், பத்திரத்துக்கும் நிலத்தின் அளவு, சர்வே எண்ணில் வேறுபாடு பெரிதாக இருக்காது என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர்.
இதில், உண்மையில் சர்வே எண், நிலத்தின் பரப்பளவு தொடர்பான வேறுபாடுகள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
இதற்கு அடுத்தபடியாக, பட்டாவுடன் சேர்ந்து எப்.எம்.பி., எனப்படும் நில அளவை வரைபடத்தை மிகசரியாக பயன்படுத்த வேண்டும்.  சொத்து வாங்குவோரில் பலரும் நில அளவை வரைபடத்தை சரியான முறையில் பயன்படுத்த வில்லை என்று கூறப்படுகிறது.
ஒருநிலம் எப்படி அளக்கப்படுகிறது என்பதை சரியாக புரிந்து கொண்டால் நிலஅளவை தொடர்பாக தெளிவு பெறலாம்.  இன்றளவும், நில அளவை வரைபடத்தில் குறிப்பிடப்படும் தகவல்கள் மக்களுக்கு புரியாத புதிராகவே பலருக்கும் உள்ளது.  பத்திரத்தில் உள்ள நிலத்தின் பக்க அளவுகளை சரி பார்ப்பதில் நிலஅளவை வரைபடம் மிகமுக்கிய ஆவணமாக உள்ளது.  ஒரு எப்.எம்.பி., யில், நிலத்தின் சர்வே எண், உட்பிரிவுஎண், பக்க அளவுகள், பரப்பளவு, அக்கம் பக்கத்து சர்வே எண்கள் ஆகிய விபரங்கள் இருக்கும்.
நீங்கள் வாங்கும் நிலத்துக்கான நில அளவை வரைபடத்தில் எல்லை கோடுகள் என்னவாக குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை சர்வேயர்கள் உதவியுடன் கேட்டு தெளிவு பெற வேண்டும்.  இத்தகவல் தொழில்நுட்ப ரீதியாக, எப் மற்றும் ஜி என்ற ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடப்படுகின்றன.
எப்.எம்.பி., எனப்படும் நில அளவை வரைபடத்தில் நிலத்தில் நீளம், அகலம் ஆகியவை மீட்டரிலேயே குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. அதே நேரம், பரப்பளவை பொருத்தமட்டில், ஏக்கர், ஏர், எக்டேர் போன்ற அளவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
நீங்கள் வாங்கும் சொத்துக்கான பட்டாவில் உள்ள அளவுகள் பத்திரத்துடன் முழுமையாக ஒத்து போனாலும், நில அளவை வரைபட விபரங்களுடன் ஒத்து போகிறதா என்றும் பாருங்கள்.

பல இடங்களில் பட்டாவில் உள்ள விபரம் தவறாக இருக்கும் நிலையில் முந்தைய நில அளவை வரைபடங்கள் வாயிலாக மட்டுமே உண்மையை அறிய முடியும் நிலை ஏற்படுகிறது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.


அக்கம் பக்கத்து விலை நிலவரம் அறியாமல் வீடு, மனை வாங்காதீர்!

 அக்கம் பக்கத்து விலை நிலவரம் அறியாமல் வீடு, மனை வாங்காதீர்!
சொந்தமாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று திட்டமிடும் நிலையில் அதற்கான ஆவணங்கள் ரீதியான விஷயங்களுக்கு அப்பால் விலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  ஒரு சொத்துக்கு அதன் உரிமையாளர் சொல்லும் விலை எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது என்பதை கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒரு கட்டுமான நிறுவனத்தின் குடியிருப்பு திட்டத்தில் புதிய வீட்டை வாங்குவதாக இருந்தால், அதில் தெரிவிக்கப்படும் விலையின் உள்ளடக்கம் என்ன என்று கேட்க வேண்டும், நிலத்துக்கான விலை என்ன, கட்டுமான பணிக்கான செலவு என்ன என்பதை தெளிவாக விசாரிப்பது அவசியம்.

அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது நிலத்தின் விலைக்கும், கட்டடத்தின் மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு, 10 முதல், 20 சதவீதம் தான் இருக்கும். அதே நேரத்தில் பழைய அடுக்குமாடி திட்டத்தில் விற்பனைக்கு வரும் வீட்டுக்கு விலை எனும் போது, நிலத்தின் மதிப்பு அதிகரித்தும், கட்டட மதிப்பு குறைந்தும் இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்கும் போது, அதில் நிலத்துக்கான விலையாக குறிப்பிடப்படும் தொகை என்ன என்று பாருங்கள், அந்த பகுதியில் தற்போது நிலத்தின் விற்பனை விலை என்ன, சந்தை மதிப்பு, வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்.
இத்துடன் நிற்காமல், அப்பகுதியில் அக்கம் பக்கத்தில் நிலம், வீடு விற்பனை செய்யப்படும் நிலையில் அதன் விலை குறித்தும் விசாரிக்க வேண்டியது அவசியம். அதே போன்று, பழைய வீடு விற்கும் நிலையிலும், அப்பகுதியின் நிலத்தின் மதிப்பு என்ன என்று விசாரிப்பது அவசியம். இது போன்ற விசாரணையில் தெரியவரும் தகவல்கள் அடிப்படையில் தான் விற்பனையாளர் சொல்லும் விலையின் உண்மை தன்மையை சரி பார்க்க வேண்டும். சில இடங்களில் சம்பந்தம் இல்லாத வகையில் விலை அதிகமாகவும், மிக குறைவாகவும் இருந்தால் அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.


அக்கம்பக்கத்து நிலவரத்துக்கு சம்பந்தம் இல்லாத வகையில் விலை குறிப்பிடப்படும் நிலையில், சொத்து வாங்குவோர் கவனமாக செயல்பட வேண்டும். நீங்கள் வீடு வாங்கும் திட்டத்தில் வீடுகளுக்கான நிலத்தின் பிரிபடாத பங்கு அளவுக்கு தான் நிலத்தின் மதிப்பு சேர்க்கப்பட வேண்டும்.

வாகன நிறுத்துமிடம் போன்ற விஷயங்களுக்கு சதுர அடி அடிப்படையில் பணம் வசூலிக்க கூடாது, வாகன நிறுத்துமிடத்துக்கான கட்டணத்தை விலையுடன் சேர்த்து வசூலிப்பதற்கு சட்டப்பூர்வமாக எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதை புரிந்து செயல்படுங்கள்.


சொத்து வாங்கும் போது அதன் விலை தொடர்பான விஷயங்களை ஒன்றுக்கு பலமுறை தெளிவாக விசாரிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.


Saturday, September 21, 2024

Is Your Rental Property Insured?

 Is Your Rental Property Insured?

Often people skip taking insurance for their properties, which they rent out. Read on to understand why it is important?to have rental property insurance
Renting out property is considered one of the best ways to earn passive income while the underlying asset appreciates over time. But do you know how to ensure this ‘mailbox money’ keeps coming every month? The answer is Rental Property Insurance (RPI).

What is rental property insurance?
 “Rental property insurance, also known as landlord insurance, is designed to protect homeowners who rent out their properties, ensuring it remains a valuable asset and a long-term revenue-generating investment,” .

Who can take rental property insurance? 
“It is available to anyone who owns a property (residential or commercial) that is leased to others. The property owner needs to declare that the property is used for rental purposes and not as the primary residence” .

How does it help the property owner? 
From peace of mind to financially protecting yourself from a multitude of potential pitfalls, rental property insurance safeguards you in numerous ways. Elaborating on the same,

From peace of mind to financially protecting yourself from a multitude of potential pitfalls, rental property insurance safeguards you in numerous ways. Elaborating on the same,
Unforeseen events and costly repairs:
India is prone to natural disasters such as earthquakes, floods and cyclones. Fire or vandalism can also cause significant damage. Without insurance, the financial burden of repairs or rebuilding falls on the landlords’ shoulders.  
Navigating tenant issues:
Tenants can cause accidental or malicious damage such as a bursting a pipe or faulting with electrical connections, leading to both heavy bills and/or big repair costs. 
Loss of rental income:
If a disaster makes the property uninhabitable or the tenant absconds, your rental income stops. And if this rental income is the sole source of income, what would one do? Thus, some insurance policies offer loss of rent coverage, providing financial compensation during such periods, and ensuring your income stream remains stable. 
Liability protection:
Accidents involving tenants or guests can lead to lawsuits, which can be expensive. RPI with liability coverage covers legal expenses from such claims, protecting your finances. 
Peace of mind:
Knowing that you are financially protected allows you to manage your property without constant worry and helps you focus on other important things in your life. 

How is rental property insurance different from home insurance?
Though both share some similarities, they cater to different situations and offer distinct coverage options. Giving more information,

RPI is designed for landlords who own properties that are rented out to tenants, while home insurance is intended for homeowners who occupy the property themselves as their primary residence. 
RPI focuses on protecting the physical structure of the property, potential liabilities related to tenants and loss of rental income, while home insurance primarily covers the structure of the home, along with the owner’s personal belongings within the property. 
The difference in insurance premiums for both types of insurance will vary based on coverage options and specific circumstances. 

Friday, September 20, 2024

சொத்து வாங்கும்போது பவர் பத்திர பிரச்னையில் சிக்காமல் இருக்க!

 சொத்து வாங்கும்போது பவர் பத்திர பிரச்னையில் சிக்காமல் இருக்க!
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோர், ஆவண ரீதியாக பல்வேறு விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். ஒரு சொத்தை அதன் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும்.
பொதுவாக ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது என்றால், அதை விற்பவர் அதன் முறையான உரிமையாளரா என்று பார்க்க வேண்டியது அவசியம். சில சமயங்களில் சொத்தின் உரிமையாளர்கள் அதை விற்பதற்கு பொது அதிகார அடிப்படையில் முகவர்களை நியமிப்பது வழக்கம்.


இதில் சொத்தின் உரிமையாளர் நேரடியா முன்னின்று விலை பேசுவது உள்ளிட்ட பணிகளை முடித்தாலும், பத்திரப்பதிவுக்கு வர இயலாத நிலையில் இருக்கலாம். இத்தகைய சூழலில், அவர் தனது சார்பில், விற்பனை ஆவணத்தில் கையெழுத்திட்டு பதிவு பணிகளை முடிக்க பொது அதிகார அடிப்படையில் ஒரு முகவரை நியமிக்கலாம்.

இவ்வாறு நியமிக்கப்படும் முகவர் விஷயத்தில், அனைத்து விஷயங்களும் உரிமையாளரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால் பெரிய சிக்கல் ஏற்படாது. ஆனால், சில இடங்களில் உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு பொது அதிகாரம் அளித்துள்ள நிலையில் முகவர்கள் தான் விற்பனை செய்வர்.

இது போன்ற சொத்துக்களை வாங்கும் போது, அதற்கான பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர் உயிருடன் இருக்க வேண்டும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக, அந்த பொது அதிகார ஆவணத்தை உரிமையாளர் ரத்து செய்யாமல் இருக்கிறார் என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
பொது அதிகார பத்திரத்தை உரிமையாளர் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியும் என்பதால், நீங்கள் வாங்கும் சொத்துக்கான பொது அதிகார ஆவணம் ரத்து செய்யப்படாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


இதே போன்று, பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர் உயிருடன் இருப்பதும் மிக மிக அவசியம். சில இடங்களில் பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர், அதை ரத்து செய்யாமல், வேறு ஒரு நபரிடம் விலை பேசி சொத்தை விற்க முயற்சிக்கலாம்.

இதேபோன்ற சூழலில், சொத்து வாங்குவோர் அலட்சியமாக இருந்தால், பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

பொது அதிகாரம் பெற்ற நபர் இறந்துவிட்டால், அவரது சார்பில் வேறு நபர்கள் அந்த ஆவணத்தை பயன்படுத்த முடியாது. இது போன்று பொது அதிகார முகவர் இறந்த நிலையில் வேறு நபர்கள் சொத்தை விற்க முயற்சித்தால் அதை வாங்கும் நபர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.

அசையா சொத்துக்களை வாங்கும் போது பொது அதிகார முகவர்களை முழுமையாக நம்புவதில் ஏற்படும் பிரச்னைகளை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.

தவறினால், சில சமயங்களில் அந்த சொத்து மொத்தமாக பறிபோகும் நிலையும் ஏற்படலாம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

கூட்டு உரிமையில் உள்ள சொத்துக்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 

கூட்டு உரிமையில் உள்ள சொத்துக்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 தனி நபர்களின் பெயரில் உள்ள சொத்துக்களை வாங்குவதில் பெரும்பாலும் உரிமை சார்ந்த சிக்கல்கள் இருப்பதில்லைஆனால்,கூட்டு உரிமையில் உள்ள சொத்துக்களை பகுதியாக வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

      
               நம் நாட்டில் இந்து கூட்டு குடும்ப முறை தான் பரவலாக இருந்தது.  பல்வேறு தலைமுறைகளாக சொத்துக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன, தற்போது இத்தகைய சொத்துக்கள் உள்ளன.  இவ்வாறு, கூட்டு குடும்பத்தில் பரம்பரை சொத்துக்கள் பொதுவில் பராமரிக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களுக்கு பயன்கள் கிடைத்து வந்தன.  ஆனால், சமீபகாலமாக இத்தகைய கூட்டு குடும்ப பராமரிப்பில் உள்ள சொத்துக்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்பனைக்கு வருகின்றன.

                 இதில் கூட்டு குடும்ப உறுப்பினர் ஒருவர் தனக்கான பாகத்தை விற்பதற்கு உரிமை உள்ளவராகிறார்.  அவர் தனது சட்ட பூர்வ உரிமை அடிப்படையில் சொத்தில் தனக்கான பாகத்தை விற்கலாம்.  ஆனால், விற்பவர் நிலையில் பிரச்னைகள் இல்லை என்றாலும், அச்சொத்தை வாங்குபவர், இதில் கூடுதல் விஷயங்களை கவனிக்க வேண்டும்.  குறிப்பாக, கூட்டு பொறுப்பில் உள்ள சொத்தில், விற்பனைக்கு வரும் பாகத்தை தற்போதைய நிலை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

            அந்த சொத்தை வெளியார் வாங்கினால், அதை அவர் இயல்பு நிலையில், தன் விருப்பப்படி பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டும்.  பொதுவாக, கூட்டு பொறுப்பில் நிலத்தின் மைய பகுதி, இறுதி பகுதி போன்ற பாகங்களை அதற்கான பங்குரிமையாளர் விற்கின்றனர் என்றால், அதற்கு உரிய பாதை வசதி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

         மேலும், கூட்டு குடும்ப உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் தனி நபராக சொத்து வாங்கும் வெளியார் சிக்கிக் கொள்ள கூடாது.  இது போன்ற விஷயத்தில் விற்பவரின் சட்டபூர்வ உரிமையை சரி பார்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

           விற்பவர், அவருக்கு உரிய பங்கை தான் விற்கிறார் என்பதை முழுமையாக தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்இதில், தன்னுடைய பங்கு என்று அடுத்தவரின் பங்கை விற்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றனஇது போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு முன் சர்வே அதிகாரிகள் வாயிலாக ஆய்வு செய்வது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

Tuesday, September 10, 2024

சிறிய பிரச்னைகளை அலட்சியப்படுத்துவதால் பெரிய பாதிப்புகள்!

 சிறிய பிரச்னைகளை அலட்சியப்படுத்துவதால் பெரிய பாதிப்புகள்!
    பொதுவாக கட்டடங்களில் பிளம்பிங்கில் மின் இணைப்பு போன்ற அமைப்புகளில் அவ்வப்போது சிறு குறைபாடுகள் ஏற்படுவது உண்டுஇந்த குறைபாடுகளை சரி செய்ய உரிய பணியாளர்களை அழைப்பது அவசியம்.

     அதே நேரத்தில் இது போன்ற சிறிய பிரச்னைகள் ஏற்படும் சமயத்தில் உடனடியாக பணியாளர் வருகை என்பது பெரும்பாலும் சாத்தியப்படாது.  உதாரணமாக, உங்கள் வீட்டில், சமையலறை அல்லது குளியலறையில் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது.  இரவிலோ, அதிகாலையிலோ இது போன்ற பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக பிளம்பரை வரவழைக்க முடியாது.
     அதற்காக, குழாயை அப்படியே விட்டுவைக்க முடியாது.  இதில் முதலுதவி என்ற அடிப்படையில் விஷயங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.  இப்படி, குழாயில் உடைப்பு ஏற்பட்டால், அதற்கு தண்ணீர் வரும் பாதையை தடுக்க வேண்டும்.  இதற்காக மேல்நிலை தொட்டி அருகில் அமைக்கப்பட்டுள்ள வால்வுகளை மூடுவது நல்லது.
     இதனால், தண்ணீர் வீணாவது ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்படும்.  இதை விடுத்து பிளம்பர் வரும்வரை அப்படியே வைத்து இருப்பது நல்லதல்ல.  மேலும், மின் இணைப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை பொறுத்தவரை, பழுதுகள் ஏற்பட்டால் உடனடியாக வீட்டிற்கான பிரதான 'சுவிட்சை ஆப்' செய்துவிடவும்.  பழுது ஏற்பட்ட பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்து விட்டு மற்ற பகுதிகளில் மின் இணைப்புகளை பயன்படுத்தலாம்.  இது போன்று கட்டடங்களில் பழுதுகள் ஏற்படும் நிலையில் அதற்கான பணியாளர் வருவதற்கு முன் முதலுதவியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வேண்டும்.  இது விஷயத்தில் பதற்றப்பட்டு எதையாவது செய்து பிரச்னையை பெரிதாக்காமல் இருக்க வேண்டும்.
     கட்டடங்களில் இத்தகைய சிறிய பிரச்னைகளை சரி செய்ய வழக்கமாக சில பணியாளர்களை தொடர்பில் வைத்து இருப்பது நல்லது.  அப்போது தான் பிரச்னையின் போது என்ன வகையான முதலுதவி செய்வது என்ற வழிகாட்டுதல்கள் பெறமுடியும்.
      எனவே, கட்டடங்களில் சிறிய அளவில் ஏற்படும் பிரச்னைகளை அலட்சியப்படுத்தாமல் சமாளிப்பதில் தெளிவான நடைமுறையை வகுக்க வேண்டும்கட்டட உரிமையாளர்கள் மட்டுமின்றி, கட்டடத்தை பயன்படுத்தும் அனைவரும் இது போன்ற வழிமுறைகளை அறிந்து இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

Virtual home tours beyond ease and convenience

  Virtual home tours beyond ease and convenience Digital tours are also contributing to a greener planet by minimising the number of resourc...