Wednesday, November 22, 2023

கட்டுமான செலவை குறைக்க பைபர் சிமென்ட் ஷீட்களை பயன்படுத்தலாம்!

 கட்டுமான செலவை குறைக்க பைபர் சிமென்ட் ஷீட்களை பயன்படுத்தலாம்!
  மனை வாங்கி, பதிவு செய்து முடிப்பதற்குள் பாதி ஆயுள் நமக்கு முடிந்திருக்கும்.  இதில், வீடாக, கடையாக, கட்டடமாக அந்த மனையை கட்டி முடிப்பதற்குள் மீதி ஆயுளும் குறைந்து விடும்.

                இதில் நாம் எங்கே வாழ்வது என அலுத்துக் கொள்ளாதீர்.  ஒவ்வொரு கட்டடத்தையும் கவனத்துடன் விழிப்புணர்வோடு கடந்து வந்தால் மிக எளிதாய் வீடு கட்ட முடியும்.


                மனை வாங்கிய பின், மிகப் பெரிய செலவே கட்டுமானப் பொருட்கள் வாங்குவது தான்.  அதிலும், கட்டடங்கள் கட்டுவதில் செலவை குறைப்பதற்கான வழிமுறைகளை தேடுவதில், மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும்.


                 எந்த பொருள் எங்கு தரமாக, விலை குறைவாகக் கிடைக்கும் என்பதில், துவங்கி, பொறியாளர், வேலையாட்கள் வரை குறைந்த செலவில் எங்கு கிடைப்பர் வரை தேடியபடியே இருப்போம்.


                இதில், தனி நபர்கள் நிலையில் மட்டுமல்லாது பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்களும் இதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.


                 கட்டுமான துறையில், தற்போதைய நிலவரப்படி, சிமென்ட் பிரதான பொருளாக உள்ளது.  இதன் தயாரிப்பிலும், பயன்பாட்டிலும் பல்வேறு மாறுதல்கள் செய்து செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  சிமென்ட் என்ற சொல் லத்தின் மொழியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


                 ‘வேதியியல் ரீதியாக வினைபுரிவது’ என்பதே இச்சொல்லின் பொருளாக கூறப்படுகிறது.


                  இந்த அடிப்படை புள்ளியில் இருந்தே பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  கம்பிகளை உள்ளீடாக வைத்து சிமென்ட் கலவையை பயன்படுத்தி தளம் அமைப்பதில் ஏற்படும் செலவை குறைப்பதே முதல் நோக்கமாக இருந்தது.  சாலிட் பிளாக் கல்லைப் பயன்படுத்தினால், விரைவில் வேலை முடியும்.  பணியாளர் எண்ணிக்கையும் குறைவாகவே தேவை.


                    கீழ்தளம் மட்டும் போதும் என்றால் கூரையிலும் செலவை குறைக்கலாம்.  ‘சன்சைட்’ அமைத்த பின் சிலாப் தொழில் நுட்பம் மூலம் கூரையை காஸ்டிங் செய்து கொள்ளலாம்.  மேலே இன்னொரு தளம் கட்ட போகிறோம் என்றால் அடித்தளத்துக்கு போட்ட அதே முறையில் மோல்டிங் டெக்னாலஜியில் பிளிந்த் பீம் போட்டு எழுப்பலாம்.  மேலே எழுப்பலாம்.  மேலே எழுப்பப்படும் எடைக்கு ஏற்ப கூரை தடிமன் இருக்க வேண்டும்.  இது போன்ற பல தொழில் நுட்பங்களை பயன்படுத்த முன் வரவேண்டும்.


                 இதன் பலனாக பைபர் கலந்த சிமென்ட் ஷீட்கள் தயாரிக்கப்படுகின்றன.  நமக்கு விருப்பப்பட்ட அளவுகள் தடிமன் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம்.


                சிமென்ட் அடிப்படையிலான கான்கிரீட்டை பயன்படுத்தி தளம் அமைப்பதற்கு ஆகும் செலவில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு ஆகும்.  செலவு குறைவு என்பதுடன் பயன்படுத்த எளிது என்பதாலும் இது கட்டுமான துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


                கீற்று பயன்படுத்தி குடிசைகள் அமைத்தால் தீ விபத்துகளுக்கு ஆபத்து ஏற்படும்.  அதே இடத்தில் பைபர் சிமென்ட் ஷீட்களை பயன்படுத்தினால் இந்த அபாயம் இல்லை.


                 ஒரு இடத்தில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஷீட்களை வேறு இடத்திலும் எடுத்து சென்று மறுமுறை பயன்படுத்த முடியும்.  மறு சுழற்சியிலும் இதை பயன்படுத்த இயலும் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள்.   


வீடுகளில் பிளம்பிங் அமைப்புகளுக்கான, சரியான திட்டமிடலுக்கு சில ஆலோசனைகள்!

 வீடுகளில் பிளம்பிங் அமைப்புகளுக்கான, சரியான திட்டமிடலுக்கு சில ஆலோசனைகள்!
  கட்டடம் கட்டுவது என்பது அஸ்திவாரம், தூண்கள், பீம்கள், தளம் அமைத்து, சுவர்கள் எழுப்புவது போன்ற பணிகளோடு கட்டுமானப் பணிகள் முடிந்து விடாது.  இதில், மனிதர்கள் வாழ தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும்.

               கதவு, ஜன்னல், கட்டில், பீரோ, அலங்காரச் சாமான்கள் இல்லாமல் கூட, ஒரு கட்டடத்தை வீடாக பாவித்துக் கொள்ளலாம்.


               ஆனால், குறிப்பாக, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு போன்ற வசதிகளை சரியான முறையில் செய்ய வேண்டும்.  நீர் உள்ளே வருவதற்கும், பயன்படுத்திய கழிவுநீர் வெளியேறுவதற்கும் குழாய்கள் பதிக்க வேண்டும்.


              இதில், ஏதாவது சிறு குறைபாடு ஏற்பட்டாலும் அது ஒட்டுமொத்த நிம்மதியையும் குலைத்து விடும்.


              பொதுவாக, வீடு கட்டுவோர், குடிநீர் இணைப்பு, கழிவுநீர் வடிகால் விஷயங்களில் அலட்சியம் காட்டுவது வழக்கமாக உள்ளது.


               குடிநீர் குழாய்கள் பதிப்பது, பிளம்பிங் பணி, ப்ளம்பரின் வேலை இவையாவும் சரியான முறையில் இருத்தல் மிக அவசியம்.  குடிநீர் குழாய்கள் பதிப்பதில் வைக்கும் கவனத்தை கழிவுநீர் வெளியேறும் குழாய்களின் மீதும் வைக்க வேண்டும்.


              கழிவுநீர் எப்படி போனால் என்ன, வீட்டின் உள் பகுதியில் இருந்து வெளியேறினால் போதும் என்ற எண்ணம் பரவலாக நம் மக்களிடம் காணப்படுகிறது.


              இந்த அலட்சியம் காரணமாக, குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வீட்டில் வசிப்போரின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.  எனவே, இது போன்ற சிக்கல்களை தவிர்க்க ஆரம்பத்திலேயே சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும்.

              

         மேல்நிலை தொட்டியில் இருந்து வீட்டின் அறைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய் எவ்வித சிக்கலும் இல்லாமல், நிறைய வளைவுகள் இல்லாமல் அமைய வேண்டும்.  அதே போன்று சாலையில் இருந்து வீட்டுக்கு பெறப்படும் தண்ணீர் குழாயும் எவ்வித குறுக்கீடும் இன்றி வர வேண்டியது அவசியம்.


              சாலையில் இருந்து வீட்டுக்கு வரும் தண்ணீர் குழாய் வழியில், கழிவுநீர், மழைநீர் வடிகால் குழாய்கள் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  சில இடங்களில், சாலையில் உள்ள பொதுக் கழிவுநீர் குழாயின் குறுக்கீடு கழிவுநீரின் கசிவாய் நம் வீட்டு குடிநீர் குழாயுடன் சேர்ந்து, மொத்தமாய் கெடுத்து விடும்.


              தப்பான பின், அதை சரி செய்வதை விட இந்த தவறுகள் நடக்கா வண்ணம் முதலிலேயே தெளிவாய் கவனம் எடுத்து செய்து விடுவது முக்கியம்.


               வீட்டில், கழிவுநீர் தனியாகவும், குளியல் அறை, சமையலறை நீர் தனியாகவும் வெளியேற்றப்பட வேண்டும்.


                இப்படி வெளியேறும் நீர், மண்ணில் உறிஞ்சும் படி வெளியேற்றுவது நல்லது.


                கழிவறையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தனி குழாய்கள் வழியாக, அதற்கான தொட்டி அல்லது பாதாள சாக்கடை இணைப்புக்கு செல்ல வேண்டும்.  இதே போன்று மற்ற அறைகளில் இருந்து வரும் நீர் முறையாக தனி வழியில் வெளியேற்றப்பட வேண்டும்.


                இப்படி வெளியேறும் நீர், மண்ணில் உறிஞ்சும் படி வெளியேற்றுவது நல்லது.


                 கழிவறையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தனி குழாய்கள் வழியாக, அதற்கான தொட்டி அல்லது பாதாள சாக்கடை இணைப்புகளுக்கு செல்ல வேண்டும்.


                    இதற்கான குழாய்கள் கட்டடத்தின் வெளிப்புற சுவரில் இருந்து, 4 அடி இடைவெளியில் இருக்க வேண்டும்.  கட்டடத்தின் மேற்பகுதியில் இருந்து மழை நீரை வெளியேற்றும் குழாய் கழிவுநீர் வழியில் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


                   கட்டுமான பணிகளை துவங்கும் நிலையிலேயே இது போன்ற பணிகளுக்கான திட்டமிடல் துவங்க வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.  


காணாமல் போன நபரின் நிலத்தை ஆக்கிரமித்தவர் பட்டா பெற முடியுமா?

 காணாமல் போன நபரின் நிலத்தை ஆக்கிரமித்தவர் பட்டா பெற முடியுமா?
அரசு துறைகள் பயன்படுத்தாத நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வருவோருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  இதே போன்று நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்கப்படுகிறது.

                பட்டா ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக் காட்டும் ஆவணம்.  இந்த ஆவணத்தை வருவாய் துறை வழங்குகிறது.  தமிழகத்தில், பட்டா வழங்குவது மற்றும் மாற்றத்துக்கு ஒன்லைன் வழியே விண்ணப்பிக்க வழி செய்யப்பட்டிருக்கிறது.


               இதில், யாரும் உரிமை கோராத நிலங்களை மக்கள் தங்கள் நிலையில் அதை புறம்போக்கு நிலமாக கருதி ஆக்கிரமிக்கின்றனர்.  இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா கோரும் நிலையில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.


                அரசு துறைகளுக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா கோருவது எளிதல்ல.  இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.


               தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலத்தை, அவர் தலையீடு இன்றி வேறு ஒருவர் தொடர்ந்து, 12 ஆண்டுகள் அந்த நிலத்தை எவ்வித வாடகையும் செலுத்தாமல் பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.


               இத்துடன், அந்த நிலத்துக்கான வரிகளை ஆக்கிரமிப்பாளர் செலுத்தி இருந்தால், அதற்கான ஆதாரங்களையும் அளிக்க வேண்டும்.  இத்தகைய சூழலில், வருவாய் ஆவணங்கள் அடிப்படையில், பட்டாதாரர் கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.


              அவர் தரப்பில் இருந்து எவ்வித ஆட்சேபனையும் வராத நிலையில், ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இதில், உண்மையான பட்டாதாரர் காணாமல் போய் விட்டார், அவர் எங்கு எப்படி இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா கோர முடியும்.

       

               இந்த நிலையில், உரிமையாளர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.  இது போன்ற சூழலில், அந்த நிலத்துக்கு சட்டபூர்வமாக  பட்டாதாரர் உரிமை கோரவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற முடியும்.


                இது போன்ற சூழலில் பட்டதாரர் தன் கருத்தை தெரிவிக்க, சட்ட ரீதியான வாய்ப்புகளை வருவாய் துறை அளிக்கும்.  இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, அவர் ஆட்சேபனையை தெரிவிக்காத நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் பெயருக்கு பட்டா வழங்கப்படும்.


               தங்களின் பூர்வீக நிலங்களை அதற்கென்று நேரம் ஒதுக்கி, அதை பார்வையிட்டு, வீட்டில் இருக்கும் ஆவணங்களை நிதானமாக படித்து பார்த்து, கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வட்ட அலுவலகம் சென்று தேவையான குறிப்புகளை பெற்று பிழைகள் ஏதாவது இருக்கின்றதா என்று சோதித்து அதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால், அதை பற்றி மனு செய்தல் தொடர்ச்சியான அழுத்தம் மூலமாக அரசு எந்திரத்தை பின் தொடர்தல், போன்றவற்றை செய்வதன் மூலம் அதை சரி செய்து கொள்ளுதல் வேண்டும். 


              ஆனால், பெரும்பாலான நபர்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை அல்லது அதற்கு கவனமும் கொடுப்பது இல்லை.


              சில சமயங்களில் குறிப்பிட்ட நிலத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை என்பதை நீதிமன்ற உத்தரவு வாயிலாக நிரூபித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற முயற்சிப்பர்.  எனவே, நிலம் வாங்கி வைத்துள்ளவர்கள் அதன் மீதான உரிமையை உறுதி செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

Tuesday, November 21, 2023

மைனர் பெயரில் கொடுக்கப்பட்ட சொத்துக்களை வாங்குவோர் கவனிக்க

 மைனர் பெயரில் கொடுக்கப்பட்ட சொத்துக்களை வாங்குவோர் கவனிக்க

   சொத்து வாங்குவது என்று இறங்கி விட்டால் அதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.  குறிப்பாக, விற்பவர் யார், அவருக்கு அந்த சொத்து எப்படி வந்தது என்பது தொடர்பான விஷயங்களை சட்ட ரீதியாக சரி பார்ப்பது அவசியம்.
          இதில், பெரும்பாலும் விற்பவர் சுய சம்பாத்திய அடிப்படையில் வாங்கிய சொத்தாக இருக்கும்.  அதில் எந்த பிரச்னையும் இல்லை என்று நினைக்காதீர்கள்.
          அதற்கான சரிபார்ப்பு ஆய்வுகள் தனியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.  இதில் விற்பவர், பரம்பரை வாயிலாக பெற்ற சொத்து எனில் அது குறித்த ஆய்வுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
           உதாரணமாக, கந்தசாமி என்பவர் என்பவர் உரிமையாளர் என்று குறிப்பிட்டு ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது.அதை வாங்குவதற்கான நிலையில் நீங்கள் இருந்தால், முதலில் கந்தசாமிக்கு அந்த சொத்து எப்படி வந்தது என்று பார்க்க வேண்டும்.
           குறிப்பாக கந்தசாமி சிறுவனாக இருக்கும் போது அவருக்கு அந்த சொத்து எழுதி கொடுக்கப்பட்டது என்றால், அது மைனர் சொத்து வரையறையில் வரும்.  அப்போது, அதன் காப்பாளர் யார், அவருக்கான பொறுப்புகள் என்ன என்பதை விசாரிக்க வேண்டும்.
          தற்போது கந்தசாமி வளர்ந்து சுயமாக முடிவு எடுக்கும் நிலையில் இருக்கலாம்.  ஆனால், அவர் மைனராக இருக்கும் போது அந்த சொத்து தொடர்பாக காப்பாளர் ஏதாவது விற்பனை அல்லது பரிமாற்ற நடவடிக்கை எடுத்தாரா என்பதை விசாரிக்க வேண்டும்.
          பல இடங்களில் மைனர் சொத்துக்களை பாதுகாக்க அமர்த்தப்படும் பாதுகாவலர்கள் நெருங்கிய சொந்தமாக இருப்பார்கள்.  இதனால், அவர்கள் அந்த சொத்தை பயன்படுத்தி கடன் வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கி இருக்கலாம்.
          இது போன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.  எனவே, மைனர் சொத்துக்களை வாங்கும் போது, அதில் காப்பாளரின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.
           சொத்து தொடர்பான நிலுவை தாவாக்கள் எதுவும் இருப்பின், அதை தீர்த்த பின், பத்திரம் பதிவது பாதுகாப்பானதாக இருக்கும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.

நேரில் ஆஜராகாமல் பத்திரப்பதிவு செய்வது சாத்தியமா?

 நேரில் ஆஜராகாமல் பத்திரப்பதிவு செய்வது சாத்தியமா?
தமிழகத்தில் சொத்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு பத்திரங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் வசதி சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. இதில் பத்திர தகவல்களை உள்ளீடு செய்வது, அதன் உண்மை தன்மையை சரி பார்ப்பது, மதிப்பீடு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

ஆன்லைன் முறையில் உள்ளீடு செய்யப்பட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் பத்திரப்பதிவுக்கான நேரம் ஒதுக்கப்படும். அந்த சமயத்தில், விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் அடையாள சான்றுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும்.

இவர்களை நேரில் பார்த்து சார்-பதிவாளர் விசாரித்து உறுதி செய்த பின் தான் பத்திரப்பதிவு நடக்கும். இதில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பத்திரப்பதிவு பணிகளை முடிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக, பள்ளிகளில் பாடம் நடத்துவது, பொது மருத்துவ சிகிச்சை, அரசு ஆய்வு கூட்டங்கள், நீதிமன்ற வழக்கு விசாரணைகள் வீடியோ கான்பரன்ஸ் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பதிவுத்துறை மட்டும் இதற்கு விதிவிலக்காக நேரில் ஆஜராக வேண்டியதை கட்டாயமாக்கி உள்ளது.

இந்நிலையில் டில்லி உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் முறையில் ஆஜராகி பத்திரங்களை பதிவு செய்யும் முறை குறித்து அரசின் நிலைபாடு என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கும், டில்லி மாநில அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்ற நிலை இருக்கும் போதே சிலர் ஆள்மாறாட்டம் செய்கின்றனர், ஆன்லைன் முறையை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக பதிவாளர்கள் கவலைப்படுகின்றனர்.

தற்போதைய சூழலில், பெரும்பாலான நபர்கள் ஆதார் அட்டை வைத்துள்ளனர். இது போன்ற அடையாள ஆவணங்களை பயன்படுத்தி உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

நீதிமன்ற விசாரணையில் ஆன்லைன் முறை சாத்தியப்படும் நிலையில் பத்திரப்பதிவு பணியில் விர்ச்சுவல் முறை வசதியை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. டில்லி உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் இதற்கு விடையை பெற்றுத்தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது போன்ற ஆன்லைன் முறை அமலுக்கு வந்தால், பொது அதிகாரம் அளிப்பது குறைந்து உரிமையாளர்கள் நேரடியாக சொத்து பரிமாற்றத்தில் இறங்குவர். மேலும், சொத்து வாங்குவோர் பத்திரப்பதிவுக்காக வெளியூர் செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் இது போன்ற நடைமுறை அமலுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.

Writing A Will? Here’s All You Need To Know

 Writing A Will? Here’s All You Need To Know

“A Will is a document that expresses a person’s desire as to how their property is to be distributed after their death. The person making the Will is known as a testator. Any person of a sound mind above the age of 18 years can make a Will,” says Adv. Rajan Hiranandani.

Elaborating on the steps involved in making a Will, Adv. Dharmin Sampat explains:

Will is an instrument that falls under Section 18 of the Indian Registration Act. Section 18 of the Indian Registration Act enlists the documents where registration is optional, which means that a “Will” need not be registered; 

A Will can be handwritten by the testator, which means that the testator can write the Will in his/her mother tongue too. The testator can make more than one Will, but the latest Will be treated as the final one;


The testator may choose to go to a lawyer to draft his/her Will. The lawyer will help the testator in making a detailed Will and guide correctly in terms of the process and documents required;


Requirements for a valid Will:

  1. Details of assets
  2. Beneficiary details (list of legal heirs and relationship with the testator)
  3. Distribution of assets to beneficiaries (e.g. mention the percentage of the asset, which will be inherited and by which beneficiary after the demise of the testator)
  4. Appoint an executor in the Will
  5. Two witnesses
  6. Residual clause
  7. Any last wishes
  8. Doctor’s certificate (certifying that the testator is of sound mind to make his/her Will) 

Once the testator has the entire list collated, he/she should write it down on a piece of paper and also mention after the demise who would be inheriting these assets; 

The testator should appoint an executor in the Will itself who will execute the wishes of the testator after his/her death. The executor can be a friend, relative, or Chartered Accountant of the family who the testator can rely on blindly. The executor may or may not be the beneficiary of the assets; 

The testator will also require two people who will sign as witnesses when the testator executes (signs) the Will. The witnesses should typically not be the beneficiaries. Also, the witnesses don’t have to know the exact content of the Will. They should be present only when the testator is signing the Will. Please note that the executor is not required while signing the Will; 
If the testator visits a lawyer, he/she should opt for registration of the Will so that in case the original Will is lost, the beneficiaries or the witnesses of the Will can always apply for a Certified True Copy of the Will and submit the same for probate after the demise of the testator.


Some more important points to remember:

Probate of the Will needs to be obtained only after the demise of the testator from the respective High Courts. Obtaining a probate order is mandatory in Mumbai, Chennai and Kolkata High Court. Probate means an order of Will enforcement from the High Court. For obtaining a probate grant from High Court, the executor should approach a lawyer who practises in High Court and then file the petition under his/her name for enforcing the Will of the testator; 

Funeral receipts should be maintained by the legal heirs; 
Original Death Certificate should also be maintained by the legal heirs as the same is required at High Court for obtaining probate grant; 
Executor should preferably file in for probate after 14 days of demise; 
In case a person has not made a Will and has expired intestate, then the legal heirs will need to approach the court and obtain a Letter of Administration or Succession Certificate or Heirship Certificate. 

  • — Adv. Dharmin Sampat.

Thanks,
Times Property

கிரைய பத்திரம் தயாரிப்பில் ஆவண எழுதர்களை தேர்வு செய்வது எப்படி?

 கிரைய பத்திரம் தயாரிப்பில் ஆவண எழுதர்களை தேர்வு செய்வது எப்படி?
 சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான பத்திரங்களை தயாரிப்பதில் ஆவண எழுத்தர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  இவர்களை முறைப்படுத்த பதிவுத்துறை தேர்வுகள் நடத்தி, சரியான நபர்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது.
 
தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, பதிவுத்துறை உரிமம் பெற்ற, 3,000க்கு மேற்பட்ட ஆவண எழுத்தர்கள் உள்ளனர்.  இவர்கள் பதிவு சட்டம், முத்திரை சட்டம் திருமண பதிவு சட்டம் போன்றவற்றின் அடிப்படை கூறுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
 
புதிதாக சொத்து வாங்கும் போது, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகில் கடை வைத்து செயல்படும் ஆவண எழுத்தர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்கிறோம்.  இதில் பத்திரம் தயாரிப்பில் ஆவண எழுத்தர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதாக உள்ளது.
சொத்து பரிமாற்றத்துக்கான ஒரு பத்திரம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு அடிப்படை வரையறை உள்ளது. இதற்கான மாதிரிகளை பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதில், விற்பவர், வாங்குபவர் குறித்த குறிப்புகளுடன், அந்த சொத்து எங்குள்ளது, அது யாரிடம் இருந்து, தற்போதைய விற்பனையாளருக்கு எப்படி கிடைத்தது என்பதை குறிப்பிட வேண்டும்.
சொத்தின் மதிப்பை குறிப்பிடுதல், அளவுகளை குறிப்பிடுதல் ஆகியவற்றில் எதிர்காலத்தில் சிக்கல் வராமல் எழுத வேண்டும்.

சமீபகாலமாக வழக்கறிஞர்கள் ஆவண எழுத்தர்களாக செயல்படுகின்றனர். முறையான உரிமம் பெற்ற ஆவண எழுத்தர், கல்வி தகுதி ரீதியாக வழக்கறிஞராக இருப்பதில் பிரச்சனை இல்லை.ஆனால், வழக்கறிஞராக தொழில் தொடங்கிய நபர், ஆவண எழுத்தர்கள் செயல்படும் நிலையில் தான் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.இவ்வாறு, அவசர கோலத்தில் ஆவணம் எழுத வந்தவர்கள், தயாரிக்கும் பத்திரங்கள் மிக சுருக்கமாக முடிக்கப்படுகிறது.
 
பத்திரத்தில் அதிக தகவல்களை சேர்த்தால், பதிவின் போது தேவையில்லாத கேள்விகள் எழும். அதனால், பத்திரப்பதிவு பணிகள் தாமதமாகவும் வாய்ப்புள்ளது.
 
விரைவாக வேலையை முடிக்க சிக்கல் இன்றி சுருக்கமாக பத்திரம் எழுதுவது சிறந்தது என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. பொது மக்களும் விரைந்து முடித்து கொடுக்கிறார் என்பதற்காக இவர்களை அணுகுகின்றனர்.
 
வழக்கறிஞர் பத்திரத்தை படித்து அதில் வில்லங்கம் இருக்கிறதா என்று சரி பார்த்து ஆலோசனை வழங்கலாம். அவரே ஆவண எழுத்தராகவும் செயல்படும் போது நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
  
எனவே, உங்கள் கிைரய பத்திரம் தயாரிக்க அனுபவம் வாய்ந்த, உரிமத்துடன் செயல்படும் ஆவண எழுத்தர்களை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள். 

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...