Monday, September 9, 2024

நேரில் சென்று பார்க்காமல் சொத்து வாங்கினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

நேரில் சென்று பார்க்காமல் சொத்து வாங்கினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
சொந்தமாக வீடு, மனை வாங்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் பரவலாக காணப்படுகிறது. இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான வழிமுறையை தேர்வு செய்வதில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு தவறுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக முதன்முதலில், ஒரு வீடு அல்லது மனை வாங்குவது என்றால் அதற்கான தேடலில் ஈடுபடும் நிலையில் மக்கள் அதிக ஆர்வத்துடன் செயல்படுவர்.

பிரதான நகரத்தில் வீடு வாங்கி குடியேறிய நிலையில் எதிர்கால தேவைக்கு, குறைந்த விலையில் வீட்டு மனை வாங்கலாம் என்று நினைக்கின்றனர்.

இவ்வாறு முதலீட்டு நோக்கத்தில் மனை வாங்குவது எந்த விதத்திலும் தவறு இல்லை. ஆனால், இதற்கான செயல்பாடுகளில் முழுமையான விழிப்புடன் நடந்துகொள்ள தவறினால், உங்கள் முதலீடு உரிய பயனை அளிப்பதற்கு பதில் ஏமாற்றத்தை அளிக்கும் நிலை ஏற்படும்.


பொதுவாக, நமக்கு தெரிந்தவர்கள் மத்தியில் குறைந்தபட்சம் ஒருவர் அல்லது இரண்டு பேராவது, வெளியூரில் மனை வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், நான் வாங்கிய மனையை இதுவரை நேரில் சென்று பார்த்ததே இல்லை என்று பரவலாக கூற கேட்டு இருப்போம்.

இத்தகைய நபர்கள், வாங்கிய மனை என்பது அவர்களிடம் இருக்கும் பத்திரத்தில் மட்டுமே காணப்படும். நேரில் சென்றால், அந்த குறிப்பிட்ட ஊரில் அவர் வாங்கிய மனையை அடையாளம் கூட தெரியாத அளவுக்கு தான் பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்.

தவணை முறையில் பணம் கட்டினேன், மனை கொடுப்பதாக கூறினார்கள், பத்திரப்பதிவுக்கு என்று ஒரு குறிப்பிட்ட ஊருக்கு அழைத்தார்கள் சென்று பதிவு முடித்தோம். பத்திரம், பட்டா அனைத்தையும் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனமே கொண்டு வந்து கொடுத்துவிட்டது.

அந்த பத்திரங்களை வாங்கி, அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறோம், ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள நிலம் எங்கு, எப்படி இருக்கும் என்று தெரியாது என்ற நிலையில் பலரும் வலம் வருகின்றனர்.

உண்மையில் இது போன்று முறையான பத்திரங்கள் கையில் இருக்கிறது என்று அமைதியாக இருக்கும் நபர்களின் வாரிசுகள், பின்னர் நிலத்தை தேடி செல்லும் போது தான் பிரச்னையே தெரியவரும். 

பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள கிராமத்தில் சர்வே எண் மற்றும் மனை எண் விபரங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து தேடினால் நிலம் எங்கு இருக்கிறது என்று தெரியாது.

இது போன்று நிலத்தை நேரில் பார்க்காத நிலையில், நீங்கள் வாங்கிய சில ஆண்டுகளிலேயே அது வேறு நபர்களால் அபகரிக்கப்பட்டு இருக்கும்.


எதிர்காலத்தில் அந்த நிலத்தை பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைத்து காத்திருந்தால், அங்கு வேறு நபர்கள் வீடு கட்டி வசிப்பார்கள்.

முதலீட்டுக்கான இப்படி நேரில் பார்க்காமல் சொத்து வாங்கினால், அதை இழப்பதற்கு நீங்களே தயார் என்று தான் பிறர் பொருள் கொள்வார்கள்.

மனை வாங்கும் போது அதை நேரில் சென்று பார்த்து வாங்குவது மட்டுமல்லாது, குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்வையிடுவதும் அவசியம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

மாடிப்படி கைப்பிடிகள் விஷயத்தில் கவனம் தேவை!

 மாடிப்படி கைப்பிடிகள் விஷயத்தில் கவனம் தேவை!

வீடுகளில் சுவர்கள் எப்படி தரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அது போன்று, மாடிப்படி, அதற்கான கைப்பிடி சுவர் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

நீங்கள் கட்டும் வீட்டின் ஒட்டுமொத்த அமைப்பு என்ன, அளவு என்ன என்பதை கருத்தில் வைத்து மாடிப்படிக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக, மேல் தளத்துக்கு செல்வதற்கான மாடிப்படிகளை அமைப்பதற்கான திட்டமிடலில், பல்வேறு தவறுகள் நடக்கின்றன.  குறிப்பாக, ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் தனி வீடு எனில் அதற்கான மாடிப்படி அமைக்கும் விஷயத்தில் அதிகபட்ச அலட்சியம் காட்டப்படுகிறது.

குறைந்த பரப்பளவு மனைகளில் தனி வீடு கட்டுவோர், வரைபட நிலையில் மாடிப்படிக்கான இடத்தை முறையாக ஒதுக்குவதில்லை.

இதனால், கட்டுமான பணிகள் முடியும் நிலையில் அவசர கோலத்தில் இருக்கும் காலியிடத்தில் ஒரு பகுதியை பயன்படுத்தி மாடிப்படி அமைக்கின்றனர்.

இவ்வாறு கிடைக்கும் சிறிதளவு இடத்தில் மாடிப்படி அமைக்கும் போது அதற்கான தரத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  குறிப்பாக, படிகளின் எண்ணிக்கை, அகலம், உயரம் தொடர்பான விஷயங்கள் சீராக இல்லாத சூழல் ஏற்படுவதை பரவலாக பார்க்க முடிகிறது.

இதில்  தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் கட்டடத்தின் பிரதான சுவரை ஒட்டி மாடிப்படிகள் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறு பிரதான சுவரை ஒட்டி மாடிப்படி அமைக்கும் போது, அதில் ஒரு பக்கம் மட்டுமே கைப்பிடி சுவர் அமைக்க வாய்ப்பு இருக்கும்.  முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் இந்த படிகளை பயன்படுத்தும் போது, ஒரு பக்கம் மட்டும் கைப்பிடி சுவர் இருப்பதால் மறு பக்கத்தில் பிடிமானம் கிடைக்காமல் நிலைத்தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுவதாக பரவலாக புகார்கள் எழுகின்றன.

இது போன்ற இடங்களில் பிரதான சுவரில் இரும்பால், ‘ஹேண்ட்ரயில்’ எனப்படும் கைப்பிடிகளை அமைப்பது பரவலாக அதிகரித்துள்ளன.  இதில் மாடிப் படிகளில் உலோக கைப்பிடி அமைக்கும் போது, அதற்கு முந்தைய நுழைவுப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று படிகள் மட்டும் அமையும் இடங்கள் மிகவும் ஆபத்தானதாக உள்ளது.

மாடிப்படி துவங்கும் இடத்தில், 2 அல்லது 3 படிகள் அமையும் இடத்தில், சிறிய அளவில் கைப்பிடிகளை அமைப்பதால் விபத்துகளை தடுக்கலாம்.

அடுக்கு மாடி திட்டங்களில் புதிதாக வீடு வாங்கும் போது இது போன்ற கூடுதல் கைப்பிடி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Thursday, September 5, 2024

அரசு ஒதுக்கீட்டில் வீடு, மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

 அரசு ஒதுக்கீட்டில் வீடு, மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!
பொதுவாக வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், தேடலில் ஈடுபடும் மக்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  இதில் பெரும்பாலும் தனி நபர் பெயரில் உள்ள சொத்துக்களை தான் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


விற்பனைக்கு வரும் வீடு அல்லது மனை, அந்த நபருக்கு எப்படி வந்தது என்பது தொடர்பான விபரங்களை ஆவண அடிப்படையில் ஆராய வேண்டும்.  குறிப்பாக, தனி நபரிடம் இருந்து அந்த சொத்து வாங்கப்பட்டதா என்பது தொடர்பான விஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.


ஆனால், பல இடங்களில் அரசு துறையில் இருந்து ஒதுக்கீடு வாயிலாக, வீடு, மனை பெற்றவர்கள் அதை விற்க முன்வருகின்றனர்.  அரசு திட்டத்தில் உள்ள சொத்து என்பதால், பெரிய அளவில் வில்லங்கம் இருக்காது என்று மக்கள் நினைக்கின்றனர்.


சாதாரணமாக, தனியார் நிறுவனத்தின் திட்டத்துக்கும், அரசு நிறுவனத்தின் மனைப்பிரிவு திட்டத்துக்கும் பல்வேறு நிலைகளில் வேறுபாடுகள் இருக்கும்.  அரசு நிறுவனத்தின் திட்டம் என்றால் அதில் விதிமீறல்கள் இருக்காது, அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்னைகள் இருக்காது என்று மக்கள் நினைக்கின்றனர்.


இது போன்ற சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது அதை வாங்குவதற்கு மக்கள் இயல்பாகவே முன்னுரிமை கொடுப்பதை பார்க்க முடிகிறது.  ஆனால், இத்தகைய சொத்துக்கள் எந்த வழிமுறையில் அந்த நபருக்கு அரசால் ஒதுக்கப்பட்டது என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.  பொதுவாக, அரசு நிறுவனங்களில் வீடு, மனை ஒதுக்கீட்டில் சமூக ரீதியான இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு இருக்கும்.  இதில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு சலுகை வலையில், வீடு, மனை ஒதுக்கப்படுகிறது என்றால், அதை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது.


ஆனால், பொருளாதார தேவை என்ற அடிப்படையில் அரசு ஒதுக்கிய வீடு, மனையை அதை பெற்றவர்கள் விற்க முற்படுகின்றனர்.  வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை வாயிலாக பட்டியலினத்தவர், பழங்குடியினர் பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட வீடு, மனையை வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.


தவணைகளை முழுமையாக செலுத்தி விற்பனை பத்திரம் பெற்ற நிலையில் உரிமையாளர் அதை விற்பதில் தவறு என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம்.  உண்மையில் இது போன்ற சொத்துக்களை ஒதுக்கும் போது, அதற்கான உத்தரவில், 10 ஆண்டுகளுக்கு அவர் வெளியாட்களுக்கு விற்க கூடாது என்ற அடிப்படையில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கும்.


எனவே, இது போன்ற சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது, அதை வாங்க முற்படும் நபர்கள், 10 ஆண்டு நிபந்தனைகள் முடிந்துள்ளதா  என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.  நிபந்தனை காலத்தில் அந்த சொத்து வேறு பிரிவை சேர்ந்தவர்கள் வாங்கினால், அது விதிமீறலாக பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள்.

சொத்து வாங்குவோர் பத்திரப்பதிவின் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 சொத்து வாங்குவோர் பத்திரப்பதிவின் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதற்கான கிரைய பத்திரத்தை தயாரிப்பது, பதிவுக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இந்த விஷயங்களில் மிக கவனமாக இருந்தாலும் நம்மை அறியாமல் சில விஷயங்கள் தவறாக போவதற்கு வாய்ப்பு உள்ளது.

பதிவுக்கு பின் பத்திரத்தில் தவறுகள் தெரிய வந்தால், அதை சரி செய்வதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் இருக்கின்றன.  ஆனால், இதற்காக தவறுகள் நடந்தால் பரவாயில்லை என்ற ரீதியில் பத்திர விஷயத்தில் அலட்சியம் காட்டினால், அது பெரிய இழப்புகளை ஏற்படுத்தி விடும்.

குறிப்பாக, நீங்கள் வாங்கும் சொத்து தொடர்பாக என்னென்ன பத்திரங்களின் பிரதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும்.  விற்பனை செய்பவர் பெயரில் உள்ள பத்திரம், யார் பெயரில் இருந்து அவருக்கு வந்தது என்பதை குறிப்பிடும் பத்திரம் ஆகியவற்றை கேட்டு வாங்க வேண்டும்.

இந்த பத்திரங்களில் சொத்து குறித்த விபரங்கள் சரியாக இருக்கிறதா, ஒன்றுக்கொன்று ஒத்துபோகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.  இவற்றில் உள்ள விபரங்கள் அடிப்படையில், தற்போதைய சொத்து பரிமாற்றத்துக்கான புதிய கிரைய பத்திரத்தை தயாரிக்க வேண்டும்.

ஒரு சொத்தின் பழைய ஆவணங்களின் அசல் பிரதி இல்லாமல் புதிய கிரைய பத்திரத்தை பதிவு செய்ய செல்லாதீர்கள்.  சில இடங்களில் பழைய பத்திரங்கள் வங்கியில் கடனுக்கு ஈடாக கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தால், கடனை முடித்து பத்திரங்களை வாங்க வேண்டும்.

குறிப்பாக, சொத்தின் தாய் பத்திரம் எது என்பதை அறிந்து, அதன் அசல் பிரதியை வாங்குவது அவசியம்.  தற்போது நீங்கள் வங்கிக்கடன் வாயிலாக சொத்து வாங்குவதாக இருந்தாலும், அதற்கான கிரைய பத்திரம் மட்டுமே வங்கிக்கு செல்லும், அதற்கு முந்தைய அசல் பத்திரங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்.

விற்பனைக்கு வரும் சொத்தின் தாய் பத்திரம் என்று காட்டப்படும் பத்திரம் உண்மையானது தானா என்பதை நீங்கள் சரி பார்ப்பது அவசியம்.  சில சமயங்களில் போலியான பத்திரங்களை தயாரித்து, அது தான் அசல் தாய் பத்திரம் என்று குறிப்பிட்டு சொத்தை சிலர் விற்பனை செய்கின்றனர்.

பொது அதிகார முகவரிடம் இருந்து சொத்து வாங்குவதாக இருந்தால், அவருக்கு பவர் எப்போது, எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும்.  அந்த குறிப்பிட்ட சொத்தின் பொது அதிகாரம் கொடுத்தவர் தற்போது உயிரோடு இருக்கிறாரா என்பதை விசாரிக்காமல் பரிமாற்றத்தில் ஈடுபடாதீர் என்கின்றனர் சொத்து மதிப்பீட்டாளர்கள்.

Wednesday, September 4, 2024

சொத்தின் தாய் பத்திரம் எது என்பதை அறியும் வழிமுறைகள் என்ன?

 சொத்தின் தாய் பத்திரம் எது என்பதை அறியும் வழிமுறைகள் என்ன?
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அது தொடர்பான என்னென்ன பத்திரங்களை சரி பார்க்க வேண்டும் என்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.  குறிப்பாக, விற்பவருக்கு அந்த சொத்து எழுதி கொடுக்கப்பட்ட பத்திரம் சரியாக இருந்தால் மட்டும் போதும் என்று பலரும் நினைக்கின்றனர்.

 

இதற்கு அப்பால், அவருக்கு முன் அந்த சொத்து எப்படி கைமாறியது என்பதை அறிய சொத்துக்கான தாய் பத்திரத்தை கேட்டு வாங்கி ஆய்வு செய்ய வேண்டும்.  ஒவ்வொரு சொத்துக்கும் தாய் பத்திரம் எது என்பதை கேட்டு வாங்கி பார்க்காமல், பரிமாற்றம் தொடர்பான நடவடிக்கையில் இறங்க கூடாது.

சரி, விற்பனைக்கு வரும் சொத்தின் உண்மை தன்மை அறிய அதன் தாய் பத்திரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை, அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.  ஆனால், ஒவ்வொரு சொத்துக்கும் எது தாய் பத்திரம் என்பதை தெளிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் தெரியாதது தான் இங்கு பிரச்னையாக உள்ளது.

இன்றைய சூழலில் ஒரு வீடு அல்லது மனை விற்பனைக்கு வருகிறது என்றால், அதை விற்பவர் பெயரில் ஒரு கிரைய பத்திரம் இருக்கும்.

அந்த பத்திரம் எதன் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதற்கான பூர்வாங்க ஆதாரமாக ஒரு பத்திரம் இருக்கும் அல்லவா அது தான் அடிப்படையில் தாய் பத்திரம் என்று கருதப்படும்.

அதாவது, தற்போது விற்கும் உரிமையாளர் பெயருக்கு நேரடியாக கிரையம் கொடுக்க எழுதப்பட்ட, இதற்கு முந்தைய முழுமையான ஆவணம் தான் தாய் பத்திரம் என்று குறிப்பிடப்படும்.

இதில் பல இடங்களில் தற்போது, விற்பவர் பொது அதிகார முகவராக இருக்கலாம், அவருக்கு முந்தைய நபர் முழுமையான உரிமையாளராக இருக்கலாம்.

இதில் இந்த உரிமையாளர் பெயருக்கு சொத்து கொடுக்கப்பட்ட பத்திரத்தை தாய் பத்திரம் என்று பலர் நம்பி ஏமாறுகின்றனர்.  இதே போன்று கடைசி கிரைய பத்திரம் வைத்துள்ள உரிமையாளருக்கு முன், பொது அதிகார பத்திரம், செட்டில்மென்ட், உயில் போன்ற பத்திரங்கள் இருந்தால் அவை தாய் பத்திரம் ஆகாது.

நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து தொடர்பான, முந்தைய முறையான கிரைய பத்திரம் எது என்பதை தேடி பார்த்து, அது தான் தாய் பத்திரம் என்று வரையறுக்கப்படும்.  சில சமயங்களில், பாகப்பிரிவினை, செட்டில்மென்ட், உயில், விடுதலை போன்ற ஆவணங்கள் வழியே சொத்து பெறப்பட்டு இருக்கும்.

இந்த ஆவணங்கள் தாய் பத்திரங்கள் ஆகாது என்பதால், இதற்கு முந்தைய நிலையில் கிரையம் நடந்த முறையான பத்திரம் எது என்பதை தேடி பார்த்து வாங்கி ஆய்வு செய்ய வேண்டும்.

இதில், முறையான தாய் பத்திரம் பார்க்காமல் சொத்து வாங்கினால் அது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் பதிவுத்துறை அலுவலர்கள்.

சொத்துக்குள் நுழையும் வெளியாட்களை வகைப்படுத்தி அறிவது அவசியம்!

 சொத்துக்குள் நுழையும் வெளியாட்களை வகைப்படுத்தி அறிவது அவசியம்!
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கினால் மட்டும் போதாது, அதை முறையாக பாதுகாப்பதற்கான அடிப்படை வழிமுறைகள் தெரிந்து இருக்க வேண்டும்.  நீங்கள் வாங்கிய சொத்துக்குள் யார், எதற்காக வரலாம் என்பதை முடிவு செய்வது நீங்கள்தான். 


சொத்தின் முழுமையான உரிமையாளர் என்ற அடிப்படையில், அதற்குள் யார் எந்த நோக்கத்துக்காக வருவது என்பதை நீங்கள்தான் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.  உங்களுக்கு சொந்தமான சொத்தை பத்திரப்பதிவு செய்து வாங்கினால் மட்டும் போதாது, அதன் முறையான கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்க வேண்டும்.


ஒரு நபர் வாங்கிய சொத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் உரிமையுடன் உள்ளே வருவர் என்பதால், இதில் எவ்வித பிரச்னையும் இல்லை.  அதே நேரம் தவறான நோக்கத்தில் சிலர், சொத்துக்குள் அத்துமீறி நுழைந்து பிரச்னை செய்வதை தவிர்க்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு தான்.


இதில், ஒருவருக்கு சொந்தமான சொத்துக்குள் வரும் வெளியார் குறித்த வரையறை என்ன, வகைபாடு என்ன என்பதை அறிய வேண்டும்.  சொத்துக்குள் வருவோரை, விருந்தினர்கள், உரிமம் பெற்ற நபர்கள், அத்துமீறி நுழைபவர்கள் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.


விருந்தினர்கள் என்றால், உரிமையாளரால் விரும்பி அழைக்கப்படும் நபர்கள் என்று பொருள்.  இதில் உரிமையாளரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பணி நிமித்தம் உரிமையாளரால் அழைக்கப்பட்ட தொழிலாளர்களும் இந்த வரையறைக்குள் அடங்குவர்.


நீங்கள் வாங்கிய சொத்துக்குள் அலுவலர் நிமித்தமாக குறிப்பிட்ட சில நபர்கள் நுழைய வேண்டிய தேவை இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.  மின்சார இணைப்பு, தொலைபேசி இணைப்பு, குடிநீர், வடிகால் இணைப்பு, தபால்காரர், உணவு டெலிவரி நபர்கள், சொத்து வரி மதிப்பீட்டாளர், கட்டட அனுமதி தொடர்பாக ஆய்வு செய்பவர்கள், காவல்துறையினர் போன்றோர் உரிமம் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் நுழைவர்.


இந்த இரண்டு வகைப்பாட்டிலும் அடங்காத சிலர், உங்கள் சொத்துக்குள் வேண்டுமென்றே நுழைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.  உங்களுக்கு தெரியாமல், உங்கள் வீட்டில் இருந்து ஏதாவது பொருட்களை களவாடும் நோக்கத்தில் சிலர் நுழையலாம்.  மேலும் இதில், வேறு சில குற்ற எண்ணத்துடன் சிலர் உங்களுக்கு தெரியாமல் சொத்துக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.


குறிப்பாக, உங்களுக்கு வேண்டுமென்றே பாதகம் ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் இன்றி, குறிப்பாக அது உங்கள் சொத்து என்பதையும் அறியாமல் சிலர் சொத்தின் வழியே கடந்து செல்வர்.  இதுவும் ஒரு வகையில் அத்துமீறிய நுழைவு என்று தான் வகைப்படுத்தப்படும்.


இவ்வாறு வெளியாட்களை வகைப்படுத்தி, அதில் யாரை அனுமதிக்க கூடாது என்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்கி உரிமையாளர்கள் செயல்படுத்த வேண்டும்.  அப்போதுதான் சொத்து பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Monday, September 2, 2024

Is your home located near a waterlogged area?

 Is your home located near a waterlogged area?
The initial joy of monsoon is often overshadowed by the dread of waterlogging.  This year was no different with various areas across the country experiencing severe waterlogging and flooding, thus shifting the focus once again to homebuyers’ due diligence before purchasing a property.  While the reasons for waterlogging are plenty, one of the easiest ways to avoid it is by paying extra attention during the homebuying process.

Thus, before buying a home, conducting a preliminary check is important.  For starters, speak to people residing in the locality and scout through newspapers to see if any water logging or flooding incidents were reported in the recent years.

Proper drainage systems:

Ensure the area has effective drainage systems to prevent waterlogging.  This includes well-constructed storm-water drains, regular cleaning and maintenance and features like slope gradients;

Waterproofing:

Confirm with the builder if high-quality waterproofing materials were used during construction, which are important to protect buildings from water ingress.  This includes waterproof membranes, sealants, and coatings applied to walls, roofs and foundations;

Elevated plinth levels:
Buildings with elevated plinth levels help minimise the risk of water entering the living spaces during flooding or heavy rains.  Verify if this feature is in place.

Landscaping and green infrastructure:


Look for green infrastructure such as rain gardens, permeable pavements, and retention ponds, which help absorb excess water and reduce surface runoff, thereby mitigating the risk of waterlogging.


Be ready for emergency:


Check if there are emergency response plans and necessary resources such as sandbags, pumps, and emergency evacuation routes, which can help residents mitigate the impact of waterlogging during extreme weather events.


Do not compromise:


Homebuyers come with varied budgets in mind.  At times, when a home fits their budget, they are compelled to buy a home in that area.  “Usually, the water-logging issues persist only for a few weeks or a month at the most; the rest of the year goes by without any problem like this.  I am not implying that it is a comfortable stay or that I am used to issues such as waterlogging.  On the contrary, it becomes difficult to drop my child off to school as there is a large waterlogged pool right in front of our main gate.  Even going to the office becomes quite difficult as I have to move my vehicle around to avoid it being damaged due to the water.  That being said, when I purchased the home, I was running short on budget and as my home is close to the railway station, this was a deal I did not want to let go of.  Additionally, I wasn’t informed about this aspect when I purchased the home back in 2012; this issue came up during the monsoons of the following year, in 2013.  Real estate agents must practice transparency when it comes to issues such as these.”  “Look for signs of poor drainage, such as standing water in the yard, water stains on the foundation, and the presence of sump pumps or French drains, which signal recurring water problems.”  The best that one can do is to visit the site during monsoons to identify cracks, seepages or other drainage-related issues within the flat.

Virtual home tours beyond ease and convenience

  Virtual home tours beyond ease and convenience Digital tours are also contributing to a greener planet by minimising the number of resourc...