Friday, March 17, 2023

அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு செயற்கை சீலிங் அமைப்பது ஏன்?

 

அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு செயற்கை சீலிங் அமைப்பது ஏன்?

    வீடு கட்டுவதில் காலம் தோறும் பல்வேறு மாற்றங்கள் வருகின்றனஇதில் அந்தந்த காலத்து சூழலுக்கு ஏற்ப புதிய மாற்றங்கள் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

    பழைய நிலை மாறி செய்யப்படும் பல பாரம்பரிய கட்டுமான பணி வேலைகளுக்கு இப்போது அத்தனை மவுசு இல்லையென்றே சொல்ல தோன்றுகிறது.  புதுப்புது நவீன தொழிற்நுட்பங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    இதில், நம் வீட்டில் எத்தகைய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதில், நாம் கவனமாக இருக்க வேண்டும்.  சரியான சமயத்தில் உரிய முடிவுகள் எடுப்பதில், வீட்டு உரிமையாளர்களுக்கு தான் பொறுப்பும், கவனமும் அதிகம்.  எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என கட்டுமான இஞ்சினியர்களை கைக்காட்டி விட்டுச் செல்ல முடியாது.  சமீபகாலமாக வீடு கட்டுவதில், உள் அலங்காரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

    முக்கியமாய் எந்தெந்தப் பொருட்களை எங்கெங்கு பயன்படுத்த வேண்டும், எந்த அளவில் அது இருக்க வேண்டும் என்பதிலிருந்து அனைத்து உள் அலங்கார வேளைகளில் உரிமையாளரின் தலையீடும், வழிக்காட்டுதலும் இருக்கிறது.

    இதன் ஒரு வழிமுறையாக, வீடுகளுக்குள் செயற்கை 'சீலிங்' அமைக்கும் பணி மிகப் பெரியதாய் பார்க்கப்படுகிறது.

     வீடுகளில் தரையில் இருந்து மேற்கூரை வரையிலான உயரத்தை குறைத்து காட்ட பலரும் விரும்புகின்றனர்.  பொதுவாக, வீட்டின் உட்புற உயரம் அதிகமாக இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் மக்கள் விரும்பினர்.  அப்போது தான் ஊஞ்சல், அலமாரி, தொங்கும் விளக்குகள், மின்விசிறி என, பல பயன்பாடு அதில் அமைக்க முடியும் என மக்கள் நம்பினர்.  ஆனால், பயன்பாடு ரீதியாகவும், காற்றோட்டத்தை உறுதிபடுத்தவும் உயரம் குறைவான உள்கூரையே அத்தியாவசியமானதாக உள்ளது.

      ஆனால், காலப்போக்கில் அதிக தளங்களை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டின் உட்புற உயரம் கட்டுமான நிலையிலேயே குறைக்கப்படுகிறது.  இருப்பினும், ஒன்பது அடி வரை வீடுகளின் உட்புற உயரம் வரையறுக்கப்படுகிறது.  இதில் 'ஏசி' உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துவதால், உயரத்தை குறைக்க பலரும் முற்படுகின்றனர்.  இதற்கான வழிமுறைகளை பொறியாளர் மேற்பார்வையில் கடை பிடிக்க வேண்டும்.  இதற்கு செயற்கை சீலிங் அமைப்பது வழக்கமாகி உள்ளது.  இது தொடர்பான பணியில் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும்.

     வீட்டின் உயரத்தை குறைத்து காட்ட செயற்கை சீலிங்குகள் வெகுவாக பயன்படுகின்றன.  இதில் எத்தகைய பொருட்களை பயன்படுத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

     தரமான பொருட்களை பயன்படுத்தி செயற்கை சீலிங்குகளை அமைக்க வேண்டும்.  இதில், அதன் வெளிப்புற தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பல்வேறு மாதிரிகளை பயன்படுத்தி ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கலாம்.

    அசல் சிமென்ட் வேலைபாடு செயற்கை சீலிங் அமைத்து விட்டோம் என்று அமைதியாக இருந்து விட முடியாது.

    அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக பராமரிக்க வேண்டும் என்கின்றனர் உள் அலங்கார வல்லுனர்கள்.

Wednesday, March 15, 2023

பாகப்பிரிவினை வாயிலாக பெற்ற நிலத்துக்கு பட்டா மாற்றம் அவசியம்!

 பாகப்பிரிவினை வாயிலாக பெற்ற நிலத்துக்கு பட்டா மாற்றம் அவசியம்!

           நம்மில் பலரும் பரம்பரை வழியாக சொத்து கள் பெற்று இருப்போம்.  இவ்வாறு சொத்துக்கள் பெறுவோர், அதற்கான பட்டாவை மாற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை.

          குறிப்பாக, பரம்பரை சொத்துக்களை பாகப்பிரிவினை வாயிலாக பங்கிட்டுக்கொள்வோர், பட்டா விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை.  பாகப்பிரிவினை முடிந்ததும் அதற்கான பத்திரத்தை முறையாக பதிவு செய்கின்றனர்.



           அதன் பின், அந்த சொத்துக்கு பட்டா எந்த நிலையில் உள்ளது, அதை நம் பெயருக்கு மாற்றுவது எப்படி என்பதில் பலரும் அலட்சியம் காட்டுகின்றனர்.  பொதுவாக, பரம்பரை சொத்துக்கள் ஒருவரின் பெயரில் இருந்து பலரது பெயருக்கு பங்கிடப்படும்.

            உதாரணமாக, கந்தசாமி என்பவரின் பெயரில், 10 ஏக்கர் நிலம் இருக்கிறது.  பட்டாவும் அவர் பெயரில் தெளிவாக இருக்கிறது.  அவரது மறைவுக்கு பின் வாரிசுகள் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்துக்கொள்கின்றனர்.

           பங்கிடும் பணிகள் சுமுகமாக முடிந்துவிடுகின்றன.  அதற்கான பத்திரங்களும் முறையாக பதிவு செய்யப்படுகின்றன.  ஆனால், பட்டா கந்தசாமி பெயரிலேயே தொடர்கிறது.

            தந்தை பெயரில் தானே பட்டா உள்ளது.  அதை யார் என்ன செய்துவிட முடியும் என்று வாரிசுகள் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர்.

             சில ஆண்டுகள் கழித்து, பாகம் பெற்றவர்களில் ஒருவர் தன் பங்கை வெளியாருக்கு விற்க நினைக்கிறார்.  அதை வாங்குபவர் வங்கிக்கடனுக்கு செல்கிறார்.

            அப்போது விற்பவர் பெயரில் பட்டா இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.  தனி பட்டாவாக உள்ளது, பாகம் பிரித்தவர்கள், பட்டாவையும் பிரிக்காமல் விட்டுவிட்டனர்.

             பட்டாவையும் பிரித்து கொண்டு வந்தால் தான் கடன் கிடைக்கும் என்ற சூழல் ஏற்படுகிறது.  இதன் பின், விற்பவர் தாலுகா அலுவலகம் சென்று, பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால், பாகப்பிரிவினை செய்தவர்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

             இது போன்ற அலைச்சல்களை தவிர்க்க, பாகப்பிரிவினை செய்த உடனே பட்டாவில் பெயர் மற்றம் செய்துவிட வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.


புதிய வீடு கட்ட சதுர அடி விலையை முடிவு செய்யும் முன் பெற வேண்டிய விபரங்கள்!

 புதிய வீடு கட்ட சதுர அடி விலையை முடிவு செய்யும் முன் பெற வேண்டிய விபரங்கள்!

                நீங்கள் எத்தகைய கட்டுமான ஒப்பந்ததாரரை தேர்வு செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.  நம்பகமான, அனுபவம் வாய்ந்தவராக இருந்தால் அதிலேயே பாதி வேலை முடிந்துவிட்டதாக நினைக்கலாம்.

          இதற்கு அடுத்தபடியாக, 1 சதுர அடிக்கான கட்டுமான செலவு என்ன என்பதற்கு கட்டுமான ஒப்பந்ததாரரிடம் இருந்து 'கொடேஷன்' எனப்படும் செலவு பட்டியலை பெற வேண்டும்.  இதில், 1 சதுர அடிக்கு, 1 , 400 ருபாய், 1 , 800 ருபாய் என கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.



          தொழில் போட்டி காரணமாக கூட சில நிறுவனங்கள் மிக குறைந்த தொகையை கொடேஷனில் குறிப்பிடுகின்றன.  இதில் எது நியாயமான தொகை என்பதை மேலோட்டமாக பார்த்து முடிவு செய்துவிடாதீர்கள்.

          முதலில், சதுர அடிக்கு இவ்வளவு என்று கட்டுமான நிறுவனம் குறிப்பிடும் விலையில் எந்தெந்த வேலைகள் அடங்கும் என்பதை விபரம் பெறுங்கள்.  சில நிறுவனங்கள் மிக மிக குறைவான தொகையை குறிப்பிடுகின்றன.

         அதை நம்பி சென்றால், அஸ்திவாரம், சுவர்கள், அறை பிரிப்புகள், மேல் தளம், தரை அமைப்பது ஆகிய வேலை மட்டுமே செய்வேன் என்று கூறுவர்.  மீதி வேலைகள் இந்த விலையில் அடங்காது என்பர்.

         இத்தகைய விபரங்களை பணியை பெறும்வரை அவர்கள் தெளிவுபடுத்தமாட்டார்கள்.  கட்டுமான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்ட பின் தான் இது குறித்து வாய் திறப்பர்.

         கட்டுமான நிறுவனங்கள் கூறும் சதுர அடி செலவு தொகை குறித்து, தன்னிச்சையாக சில கட்டுமான பொறியாளர்களிடம் விசாரித்து பாருங்கள்.  அவர்கள் அதில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள முடியும் என்று கூறுவர்.

         குறிப்பாக, பெரும்பாலான கட்டுமான ஒப்பந்ததாரர்கள், பால்கனி கிரில் அமைப்பது, குளியலறை சுவர்களில் டைல்ஸ் பதிப்பது, மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டுவது, கழிவு நீர் தொட்டி கட்டுவது போன்ற பணிகளை சதுர அடி செலவில் சேர்க்க மாட்டார்கள்.

        பிரதான வாயிலில் கிரில் கேட் அமைப்பது போன்ற பணிகளையும் சதுர அடிக்கான செலவில் ஒப்பந்ததாரர்கள் சேர்க்க மாட்டார்கள்.  இது போன்ற விபரங்களை தெரிந்து கட்டுமான பணிகளை ஒப்படைப்பது நல்லது.

       நீங்கள் தேர்வு செய்யும் கட்டுமான நிறுவனத்திடம் இது தொடர்பான விஷயங்களை ஆரம்பத்திலேயே  தெளிவாக விசாரிக்க வேண்டும்.  இதை எழுத்துப்பூர்வமாக பெற்று, அதை கட்டுமான ஒப்பந்தத்தில் இணைப்பாக சேர்க்கலாம்.

       இப்படி தெளிவாக செயல்பட்டால் வீடு கட்டும்போது கட்டுமான நிறுவனத்துடன் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.


Tuesday, March 14, 2023

சொத்து பத்திரங்களை 'லேமினேட்' செய்தால் வீட்டுக்கடன் சிக்கலாகும்!

 சொத்து பத்திரங்களை 'லேமினேட்' செய்தால் வீட்டுக்கடன் சிக்கலாகும்!

    சொந்தமாக வீடு வாங்க வங்கிகடன் திட்டங்களை மக்கள் நாடுகின்றனர்.  இதில் வங்கிகள் கடன் தருவதற்கு சில விதிமுறைகளை வைத்துள்ளன.

    வீட்டுக்கடன் வழங்க வங்கிகள் என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி சில வரையறைகளை வைத்துள்ளது.  இதில் சொத்தின் உண்மை தன்மை, மதிப்பு, விண்ணப்பதாரரின் அடையாள சான்று போன்ற விதிகள் கடுமையாக உள்ளன.



    இதன் பின், ஆட்சேபகரமான சொத்துக்களுக்கு வங்கிகள் கடன் வழங்காது.  குறிப்பாக, பட்டா இல்லாத சொத்துக்கள், விதிமீறல் உள்ள கட்டுமான திட்டங்களுக்கு வங்கிக்கடன் கிடைக்காது.

     இவை கடன் வழங்குவதற்கு பொதுவான விதிமுறைகளாக உள்ளன.  இதற்கு மேல் சில சிறப்பு கட்டுப்பாடுகளையும் வங்கிகள் கடைப்பிடிக்கின்றன.

     அதாவது, கடன் கோரி வரும் விண்ணப்பதாரர் தாக்கல் செய்யும் பத்திரங்கள் துல்லிய ஆய்வுக்கு உட்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும்.  பத்திரம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதில் வங்கிகள் எதிர்பார்ப்பு பூர்த்தியாக வேண்டும்.

    இதில் சில நடைமுறை தவறுகளால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.  நம்மில் பலரும், ஆவணங்களை பத்திரப்படுத்தி வைப்பதில் கவனமாக இருக்கிறோம்.

     இதில் சிலர் அதிக ஆர்வத்தின் காரணமாக, சொத்து பத்திரங்களை லேமினேட் செய்து விடுகின்றனர்.  இவ்வாறு லேமினேட் செய்த பத்திரங்களை துல்லிய ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

     இதனால், பத்திரத்தின் உண்மை தன்மையை மிக துல்லியமாக சரி பார்க்க முடியவில்லை என்ற அடிப்படையில் கடன் விண்ணப்பத்தை வங்கிகள் நிராகரிப்பது உண்டு.  இதற்காக, லேமினேட் கவரை பிரித்தால் பத்திரம் சேதமடையும்.

     எனவே, வீட்டுக்கடன் உள்ளிட்ட வாய்ப்புகள் பாதிக்கும் என்பதை கருத்தில் வைத்து பத்திரங்களை லேமினேட் செய்வதை தவிருங்கள் என்கின்றனர் பதிவாளர்கள்.


பழைய அபார்ட்மெண்ட் வீட்டை மதிப்பீடு செய்வதில் வேறுபடும் விஷயங்கள்!

 பழைய அபார்ட்மெண்ட் வீட்டை மதிப்பீடு செய்வதில் வேறுபடும் விஷயங்கள்!

      புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவதற்கும், பழைய வீட்டை வாங்குவதற்கும் பத்திர நிலையில் பல்வேறு விஷயங்கள் வேறுபடுகின்றன.  இதை சரியாக புரிந்து செயல்பட்டால் தான் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

      குறிப்பாக, புதிய வீட்டை வாங்கும்போது, விலை என்பது மொத்த பரப்பளவு அடிப்படையில் கணக்கிடப்படும்.  அது நிலத்தின் பங்குக்கு ஒரு தொகையாகவும், கட்டுமான மதிப்பு ஒரு தொகையாகவும் பிரித்து தனித்தனி பத்திரங்களாக பதிவு செய்யப்படும்.


       நிலத்தின் பங்கான யு.டி.எஸ்., அளவுக்கு வழிகாட்டி மற்றும் சந்தை மதிப்பு அடிப்படையில் தொகை நிர்ணயிக்கப்படும்.  கட்டுமான பணியின் மொத்த மதிப்பு, கூடுதல் வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னொரு பத்திரம் பதிவு செய்யப்படும்.  இவ்வாறு வாங்கப்படும் வீட்டை சில ஆண்டுகளில் அந்த உரிமையாளர் விற்கிறார் என்றால், அதற்கு ஒரே பத்திரம்தான் எழுதப்படும்.  இவ்வாறு எழுதப்படும் நிலையில், யு.டி.எஸ்., மதிப்பு, கட்டடத்தின் மதிப்பு இரண்டும் சேர்க்கப்பட்டு மொத்த மதிப்பு வரையறுக்கப்படும். 

       இந்த மொத்த மதிப்பு அடிப்படையிலேயே விற்பனை பத்திரம் எழுதப்படும்.  இதில் நிலத்தின் மதிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை சரியாக கணக்கிட வேண்டும்.

       பதிவுத்துறையால் ஒவ்வொரு இடத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு அடிப்படையிலேயே இது கணக்கிடப்படுவது வழக்கம்.  அதே நேரத்தில், தற்போது மதிப்பு நிலவரத்தை சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகத்தை அணுகி கெரிந்து கொள்வது அவசியம்.

       இதன் பின் கட்டடத்தின் மதிப்பை குறிப்பிடுவதிலும் தெளிவாக இருக்க வேண்டும்.  பழைய கட்டுமான ஒப்பந்தத்தில் உள்ள மதிப்பை அப்படியே குறிப்பிட்டுவிடக் கூடாது.

        கட்டப்பட்டதில் இருந்து கட்டடத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறையும்.  இதற்கு மதிப்பீட்டாளர்கள் சில கணக்கீடுகளை வைத்துள்ளனர்.

         அதன் அடிப்படையில் மதிப்புகளை முடிவு செய்ய வேண்டும்.  விற்பனைக்கு வரும் வீட்டிற்கான யு.டி.எஸ்., அதன் மொத்த பரப்பளவில், 50 சதவீதமாவது இருக்க வேண்டும்.

         அப்போது தான் அதற்கு ஓரளவுக்கு சரியான விற்பனை மதிப்பு இருக்கும். யு.டி.எஸ்.,  30 அல்லது அதற்கு குறைவான சதவீதத்தில் இருக்கும் போது, கட்டடத்தின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி காட்டக் கூடாது.

          இவ்வாறு, கட்டடத்தின் மதிப்பு செயற்கையாக உயர்த்தி பத்திரத்தில் குறிப்பிட்டது கண்டு பிடிக்கப்பட்டால் பதிவுக்கு ஏற்கப்படாமல் போகலாம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.


வீடு விற்பனையில் 'கார்ப்பெட் ஏரியா' அடிப்படையில் விலை நிர்ணயம் நடைமுறையில் சாத்தியமாகுமா?

 வீடு விற்பனையில் 'கார்ப்பெட் ஏரியா' அடிப்படையில் விலை நிர்ணயம் நடைமுறையில் சாத்தியமாகுமா?

     வீடு விற்பனையில் பெரும்பாலான நிறுவனங்கள்  'கார்ப்பெட் ஏரியா' எனப்படும் கட்டட உட்பகுதி பரப்பளவு விபரத்தை துல்லியமாக தெரிவிப்பது இல்லை.  சூப்பர் பில்டப் ஏரியா என்று, இதர வசதிகளுடன் சேர்த்து மொத்தமாக பரப்பளவை கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

     இதனால், மக்கள் விலையாக செலுத்தும் தொகைக்கு குறிப்பிடப்படும் பரப்பளவுக்கும் வேறுபாடு இருக்கிறது.  சதுர அடிக்கான விலை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் இதில் மக்கள் விழிப்படைய துவங்கியுள்ளனர்.


      இந்நிலையில், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம் வந்த பின், வீடுகள் விற்பனையில், கார்ப்பெட் ஏரியா எனப்படும் கட்டட உள்பரப்பளவு குறிப்பிடப்படுகிறது.  ஆனால், மொத்த விலை என்று வரும்போது, சூப்பர் பில்டப் ஏரியா அடிப்படையிலேயே விலை நிர்ணயம் நடப்பதாக கூறப்படுகிறது.  ரியல் எஸ்டேட் ஆணையத்தில் கட்டுமான திட்டங்களை பதிவு செய்யும்போது, கார்ப்பெட் ஏரியா குறிப்பிடப்படுகிறது.  ஆணையத்தில் இணையதளத்திலும் இது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படுகின்றன.

       இருப்பினும், வீடு வாங்குவோர், கார்ப்பெட் ஏரியா அடிப்படையில் மட்டுமே விலை பேச வேண்டிய நிலை தொடர்கிறது.  பத்திரத்திலும், சூப்பர் பில்டப் ஏரியா அடிப்படையில் கணக்கிடப்பட்ட தொகை குறிப்பிடப்படுகிறது.

        இது விஷயத்தில், கட்டுமான நிறுவனங்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ரியல் எஸ்டேட் சட்டப்படி, விலை நிர்ணயம் என்பதற்கான விதிமுறைகளை ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.

        ஒரு வீட்டை கட்டி விற்பவர், எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.  குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில், வாகன நிறுத்துமிடம், பொது பயன்பாட்டு இடங்கள் ஆகிகியவற்றுக்கான கட்டுமான செலவை வீடுகளின் விலையில் எப்படி பிரிப்பது என்பதில் தெளிவு தேவை.

         புதிய வீட்டுக்கான பத்திரப்பதிவில், யு.டி.எஸ்., குறிப்பிடப்பட்டு அதற்கான விலை என்ன என்பதை கட்டுமான நிறுவனங்கள் தெளிவு படுத்த வேண்டும்.

         பத்திரங்கள் தயாரிப்பு நிலையில் இத்தகைய விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டால் மக்கள் குழப்பம் இன்றி வீடு வாங்க முடியும் என்கின்றனர் நுகர்வோர் நல ஆர்வலர்கள்.


கட்டுமான ஒப்பந்தத்தில் இழப்பீடு விதியை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

 கட்டுமான ஒப்பந்தத்தில் இழப்பீடு விதியை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

     அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனையின் போது, மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது.  இதற்காக ஆணையம் அமைக்கப்பட்டு மக்கள் மனுக்கள் மீது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

      இதன் காரணமாக, கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் விதிமுறைகளுக்கு சட்ட பாதுகாப்பு கிடைத்துள்ளது.  இது வீடு வாங்கும் மக்களுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

      சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்டுமான ஒப்பந்தங்கள் பதிவு செய்யப் படாத நிலை இருந்தது.  தற்போது, கட்டுமான ஒப்பந்தங்களையும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


      இதனால், அதில் குறிப்பிடப்படும் ஷரத்துகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய முடிகிறது.  தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டத்தில் விற்பனை பத்திரம், கட்டுமான ஒப்பந்த ஷரத்துகள் அடிப்படையிலேயே பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

       குறிப்பாக, கட்டுமான ஒப்பந்தங்களில் குறிப்பிட்டக் கால கெடுவுக்குள் வீட்டை கட்டி ஒப்படைப்போம் என கட்டுமான நிறுவனம் உறுதி அளிக்கும்.  இதன் மீது மக்களின் நம்பிக்கையை பெற, காலக்கெடு தாண்டினால் தாமத காலத்துக்கு இழப்பீடாக இன்ன தொகையை அளிப்பதாகவும் கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

        குறிப்பிட்ட காலத்தில் வீடு ஒப்படைக்கபடாவிட்டால்  தானே இழப்பீடு என்ற கோணத்தில் சில நிறுவனங்கள் அதிக படியான தொகையை குறிப்பிட்டு விடுகின்றன.  எதிர்பாராத காரணத்தால் கட்டுமான பணிகள் தாமதமாகும் நிலையில் பணம் செலுத்தியவர் இழப்பீடு கேட்பார்.

        அப்போது, கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்டு விடுகின்றன.  எதிர்பாராத காரணத்தால் கட்டுமான பணிகள் தாமதமாகும் நிலையில் பணம் செலுத்தியவர் இழப்பீடு கேட்பார்.

        அப்போது, கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை கட்டுமான நிறுவனங்கள் தர மறுப்பது பரவலாக காணப்படுகிறது.  இது போன்ற நிகழ்வுகளில் கூட பாதிக்கப்பட்டவர்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகலாம்.

        கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட இழப்பீட்டை பெற்று தருவதற்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் உதவுகிறது.  எனவே, பொது மக்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தின் வழிமுறைகளை சரியாக பயன்படுத்தி பயன்பெறலாம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.


Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...