Thursday, September 22, 2022

உரிமையாளர் ஆட்சேபத்தால் பத்திரப்பதிவில் ஏற்படும் சிக்கல்கள்!

 உரிமையாளர் ஆட்சேபத்தால் பத்திரப்பதிவில் ஏற்படும் சிக்கல்கள்!

     சொத்து பரிவர்த்தனைக்கான பத்திரப்பதிவில் விற்பவர், வாங்குபவர் இருவரும் சார்-பதிவாளர் முன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்ஆனால், சில தவிர்க்க முடியாத சூழலில், விற்பவர் அல்லது வாங்குபவர் யாராவது ஒருவர் நேரில் ஆஜராக முடியாத நிலை ஏற்படலாம்.

       இத்தகைய சூழலில், சம்மந்தப்பட்டவர் இருப்பிடத்துக்கே பதிவாளர் வந்து பத்திரப்பதிவை மேற்கொள்வார்இந்த சலுகையை அனைவரும் பயன்படுத்த முடியாது.


                                            #documentation #propertysale #sale 

        உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், சிறையில் இருப்பவர்கள், நீதிமன்ற தடை காரணமாக பொது இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தலாம்இதில், வழக்கமான கட்டணத்துடன் கூடுதல் தொகை வசூலிக்கப்படும்.

           இந்த சலுகை நியாயமான காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை சம்மந்தப்பட்ட சார் பதிவாளர் தான் முடிவு செய்ய வேண்டும்குறிப்பாக, ஆள்மாறாட்டம் செய்வோர், இதை பயன்படுத்திட வாய்ப்புகள் உள்ளதால் சார் பதிவாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

         இத்துடன், சில சமயங்களில் விற்பவர் பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்து இருப்பார்இதை சொத்து பெறுபவர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்து பதிய முனைவார்.

         இது போன்ற சமயங்களில் சார்-பதிவாளர் சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளருக்கு கடிதம் அனுப்பி, அவர் தரப்பில் ஆட்சேபம் உள்ளதா என்பதை அறிய வேண்டும்இதில் பதில் வராத நிலையில், சார்-பதிவாளர் அந்த பத்திரத்தை தாக்கல் நிலையிலேயே நிராகரிப்பார்.

          இவ்வாறு நிராகரிக்கப்படும் நிலையில், பதிவுக்கு சென்றவர், மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்வார்இந்த மேல் முறையீட்டிலும் நிராகரிப்பு உறுதியானால், அவர் நீதிமன்றம் செல்லவும் வாய்ப்புள்ளது.

          உரிமையாளர் நேரில் வராமல் பத்திரங்களை பதிவு செய்வதை பெரும்பாலான சார் பதிவாளர்கள் தவிர்க்கின்றனர்ஆனால், சில இடங்களில் பிரச்னை குறித்து தெரிந்த நிலையிலும் சார்-பதிவாளர்கள் இதற்கு துணை போகின்றனர்.

           உரிமையாளர் இல்லாமல், அவர் சார்பில் பணியாளர்கள் இத்தகைய ஏற்பாடுகளை செய்து சொத்து பரிவர்த்தனை செய்தால் பணம் கொடுத்து வாங்குவோர் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்எனவே, எந்த அடிப்படையிலும், உண்மையான உரிமையாளர் நேரில் வராமல் பதியப்படும் சொத்துக்களை வாங்காதீர் என்கின்றனர், பதிவுத்துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

யு.டி.எஸ்., சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள்!

    யு.டி.எஸ்., சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள்!

         அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவோர், அதற்கான நிலம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்இதில் நிலம் யாருடையது, அது கட்டுமான நிறுவனத்தால் எந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை வீடு வாங்குவோர் அறிய வேண்டியது அவசியம்.

          நீங்கள் வீடு வாங்க தீர்மானித்துள்ள அடுக்குமாடி திட்டம் அமைந்துள்ள நிலம் யாருடையதுஅதில், கட்டுமான நிறுவனத்தின் உரிமை என்ன என்பதை முன்பணம் கொடுக்கும் நிலையிலேயே விசாரிக்க வேண்டும்.


                            #uds #apartment #investment #propertysale #gatedcommunity

         இன்றைய சூழலில், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் நிலத்தை தங்கள் பெயருக்கு கிரையம் செய்து கொள்வதில்லைஉரிமையாளரிடம் பவர் வாங்கி அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துகின்றன.

          இதில், பெரிய பரப்பளவு நிலங்களை வாங்கி அதிக எண்ணிக்கையில் வீடு கட்டுவது ஒரு வகைஇரண்டு வெவ்வேரு நபர்களின் பெயரில் உள்ள தலா அரை கிரவுண்ட் நிலத்துக்கு பவர் பெற்று, அதில் வீடு கட்டுவது ஒரு வகை.

          இவ்வாறு சிறிய அளவில் நிலத்தை மேம்படுத்தும்போது, அதில் குறிப்பிட்ட அளவு வீடுகள் உரிமையாளர்களுக்கே கொடுக்கப்படும்இவர்களுக்கு போக மீதியுள்ள வீடுகள் வெளியாருக்கு விற்கப்படும்.

         இப்படி வெளியாருக்கு விற்கப்படும் வீடுகளுக்கு யு.டி.எஸ்., பங்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றனகுறிப்பாக, இது போன்ற திட்டங்களில், 50 சதவீத யு.டி.எஸ்., பழைய உரிமையாளர்களுக்கு சென்றுவிடும்மீதியுள்ள, 50 சதவீத  யு.டி.எஸ்., வீடு வாங்குவோருக்கு வழங்கப்படும்இதில் எத்தனை வீடுகள் வருகிறதோ அவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும்.

          ஆனால், சில இடங்களில், மொத்தமாக, 50 சதவீத  யு.டி.எஸ்., பங்கை வைத்துள்ள பழைய நில உரிமையாளர்கள் புதிதாக வீடு வாங்குவோரை சிறுபான்மையாக கருதி பல்வேறு தொல்லைகள் கொடுப்பது தொடர்பான புகார்கள் எழுகின்றன.

           சில இடங்களில் வழக்கு வரை செல்லும் அளவுக்கு இப்பிரச்னை செல்கிறதுபழைய உரிமையாளர், புதிய உரிமையாளர் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் முறையான யு.டி.எஸ்., பங்கு அளிக்கப்பட வேண்டும் என்கின்றனர், நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

காலியாக உள்ள வீட்டுமனைகளுக்கு சொத்து வரி விதிக்கப்படுமா?

 காலியாக உள்ள வீட்டுமனைகளுக்கு சொத்து வரி விதிக்கப்படுமா?

      நமது நாட்டில் நில வரி என்பது வருவாய் துறை சார்ந்த விஷயமாக இருந்து வருகிறதுஇதில் விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்காக நிலம் பயன்படுத்தப்பட்டால் அதில் கிடைக்கும் லாபம் அடிப்படையில் வரி விதிப்பு இருக்கும்.

        ஆனால், நிலம் வீட்டு மனையாக மாற்றப்பட்டு, அதில் வீடுகள் கட்டப்படும் நிலையில், அப்பகுதியின் அடிப்படை வசதி மேம்பாட்டுக்காக உள்ளாட்சி அமைப்புகள் வரி விதிக்கும்இதற்காக நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

                                                    #propertytax #vacantplot #investment

         இவ்வாறு சொத்து வரி விதிப்பதற்கு சட்ட ரீதியாக வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளனஇருப்பினும், சில சமயங்களில் சொத்து வரி சார்ந்த சிக்கல்கள் எழுகின்றன.

         தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி, கட்டடம் கட்டப்பட்டு இருந்தால் மட்டுமே சொத்து வரி விதிக்க முடியும்ஆனால், கூரை வீடுகளுக்கு சொத்து வரி விதிக்க முடியாது.

          இதில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளவர்கள், நிலங்களை முறையாக மதிப்பீடு செய்து வரியை நிர்ணயம் செய்ய வேண்டும்ஆனால், பல இடங்களில் நிலங்களை நேரில் ஆய்வு செய்யாமல் சொத்து வரி நிர்ணயம் நடப்பதாக கூறப்படுகிறது.

            இதனால், காலியாக உள்ள மனைகளுக்கு சொத்து வரி விதிக்கப்படுகிறதுஇவ்வாறு வரி விதிப்பு குறித்து தகவல் வரும்போது உரிமையாளர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

             இது குறித்து நேரில் சென்று விசாரித்தால் உள்ளாட்சி அமைப்புகளில் முறையான பதில் கிடைப்பதில்லைஇதனால், எதிர்காலத்தில் வீடு கட்டுவதற்காக மனை வாங்கி வைத்தவர்கள் கடுமையான அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.

             காலியாக உள்ள மனைக்கும் சேர்த்து தான் அந்தந்த பகுதிகளில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனஅப்படி இருக்கும்போது, காலியாக உள்ள மனைகளின் உரிமையாளர்களுக்கு வரி விதிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

              இதில், நகர்ப்புற பகுதிகளில் இத்தகைய நிலங்களுக்கு காலி மனை வரி விதிக்க தனியான வழிமுறை உள்ளதுஅதை கடைபிடிக்க உள்ளாட்சி அமைப்புகள் முன் வர வேண்டும்.

              அதைவிடுத்து விதிகளை மீறி சொத்து வரி விதிப்பதால் சட்ட சிக்கல் தான் ஏற்படுகிறதுஇது விஷயத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகளுக்கு அரசு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Monday, September 19, 2022

பஞ்சமி நிலத்தில் வீட்டுமனை வாங்கினால் ஏற்படும் சிக்கல்கள்!

 பஞ்சமி நிலத்தில் வீட்டுமனை வாங்கினால் ஏற்படும் சிக்கல்கள்!

  வீடு மனை வாங்குவோர் பொதுவான சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம்.

    இதில், வீட்டு மனையாக உள்ள நிலம் எத்தகைய பிரிவை சேர்ந்தது என்பதில் கவனம் தேவை.

      குறிப்பாக, நீங்கள் மனை வாங்கும் லே-அவுட் அமைந்துள்ள நிலம் வருவாய் நிர்வாக அடிப்படையில் எப்படி வகைபடுத்தப்பட்டுள்ளது என்ற விபரங்களை அறிய வேண்டும்.

       இதில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகைப்பாட்டில் உள்ள நிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

         தமிழகத்தில் வருவாய் நிர்வாக அடிப்படையில் குறிப்பிட்ட சில வகைபாட்டு நிலங்களை எந்த வகையிலும், விலைக்கு வாங்க கூடாதுசமுதாயத்தில் நிலமற்ற ஏழைகளாக உள்ள குறிப்பிட்ட சில பிரிவினரின் பயன்பாட்டுக்காக, நிலம் ஒதுக்கப்பட்டது.

         ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு, 1892 ல் விவசாய நிலங்கள் குறிப்பிட்ட சில பிரிவினரின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டனஇவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலங்கள் பஞ்சமி நிலங்கள் என்ற வகைப்பாட்டில் உள்ளனஅதாவது, பஞ்சமி நிலம் என்பது நிலமற்ற பட்டியல் இன ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, 1892 ல் பிரித்தானியாவின் இந்திய அரசால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளை நிலங்கள் ஆகும்.

          இவ்வாறு, ஏழை மக்களின் பயன் பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை வசதி படைத்தவர்கள் விலைக்கு வாங்கி விட கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுஇந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம்.

           முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கோ விடக் கூடாதுஅதன்பின், அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பை சார்ந்தவர்களிடம் தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டதுவேறு வகுப்பினரிடம் விற்றால், அந்த விற்பனை செல்லாதுமீறி வாங்கினால், எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம்அதற்கு நஷ்ட ஈடு கிடையாது என்று ஆதிதிராவிட மக்களை யாரும் ஏமாற்றி விடக் கூடாது என்ற காரணத்தால், ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது.

      பிரித்தானிய இந்திய அரசின், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், புறம்போக்கு என்று வகைப்படுத்தியுள்ளது.

        இந்த கட்டுப்பாடுகள் தற்போதும் அமலில் உள்ளன.

        ஆனால், பல இடங்களில், நிலத்தின் உண்மையான வகைப்பாடு மறைக்கப்பட்டு லே-அவுட்கள் உருவாக்கப்படுகின்றனஇத்தகைய லே-அவுட்களில் விபரம் தெரியாத மக்கள் மனை வாங்கி விடுகின்றனர்நமக்கு முன் பலரும் இத்தகைய மனைகளை வாங்கி உள்ளதால், நமக்கும் பிரச்னை வராது என்று மக்கள் நினைக்கின்றனர்உண்மையில் அடுத்தவருக்கு பிரச்னை வரவில்லை என்று யாரும் தவறுகளை தொடர கூடாது.

        நீங்கள் வாங்கும் மனை அமைந்துள்ள நிலம் தொடர்பான முந்தைய பத்திரப்பதிவு விபரங்களையும், பட்டா எப்படி வழங்கப்பட்டது என்பதையும் ஆய்வு செய்தால் பிரச்னைகளை தவிர்க்கலாம்உரிய வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்பட்டால், பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Friday, September 16, 2022

வீடு வாங்குவோர் கவனமாக இருக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்!

 வீடு வாங்குவோர் கவனமாக இருக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்!

         புதிதாக வீடு வாங்குவதில் ஆரம்ப நிலையிலேயே சில அடிப்படை விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வது அவசியம்நீங்கள் வாங்க விரும்புவது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டையா அல்லது தனியாக கட்டப்பட்ட வீட்டையா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

           இதில் பெரும்பாலானோர் தனி வீட்டைத்தான் வாங்க விரும்புவார்கள்.  ஆனால், வேறு வழி இல்லாததால், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கி குடியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

#apartment #individualhouse #villa #propertyinvestment #realestate

           அடுக்குமாடி குடியிருப்பு என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அல்லது அதிகபட்சமாக, 100 க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து வீடு வாங்குவார்கள்இதில் மோசடி செய்யும் நிறுவனம் பதில் சொல்லியாக வேண்டும்.

              இது போன்ற சூழலில் கட்டுமான நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஏமாற்ற முடியாதுஆனால், தனி வீடு என்று வரும்போது, மோசடி செய்யும் நிறுவனத்திடம் நீங்கள் தனியாக போராட வேண்டியிருக்கும்.

                குறிப்பாக, ஒரு மனையில் வீடு கட்டி விற்கும் நிறுவனத்திடம், மக்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளனவீடு விற்கப்படும் மனை இதுவரை அடிப்படையில் உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

                 மேலும், புதிதாக உட்பிரிவுகள் செய்யும் நிலையில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்தெரு எல்லைக்கும், மனை எல்லைக்கும் நடுவில் வேறு எதுவும் இருக்க கூடாது.

                  இங்கு ஏதாவது காரணத்துக்காக இடைவெளி விடப்படுகிறது என்றால் அது பிற்காலத்தில் பெரிய பிரச்னைக்கு வழிவகுத்துவிடும்மனையில் கட்டடத்தை சுற்றி குறைந்தபட்சமாக, ஐந்து அடி அகலத்துக்கு இடைவெளி இருக்க வேண்டும்.

                   மனையின் மொத்த பரப்பில், தரை மட்டத்தில், 50 சதவீதத்துக்கு மேல் கட்டுமானம் இருக்க கூடாதுஅப்போது தான் கட்டடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் போதுமான வெளிச்சம், காற்றோட்டம் இருப்பதாய் உறுதி செய்ய முடியும்.

                     தெரு எல்லையை ஒட்டி வீட்டின் சுவர் இருப்பது நடைமுறையில் பாதுகாப்பானதாக இருக்காதுஇதில் தெரு எல்லைக்கும், வீட்டுக்கும் மனைக்குள் இடைவெளி இருப்பதை உறுதி செய்யாமல் வீடு வாங்காதீர்கள் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க

  புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என...