Saturday, June 29, 2024

Three key features that make a township flat worth the investment

Three key features that make a township flat 

worth the investment

From sports, recreation, and retail Centre’s to 

top-notch security, transit systems, and ample 

parking space – residential townships provide 

an all-in-one community that charts the course 

for a fulfilling lifestyle



    In the past couple of years, luxury has taken the top spot on the checklist of homebuyers.  Due to the pandemic, it is becoming  common to have an uncompromising approach towards comfort while shopping for a home among other things.  Today, a dream home is not only defined by its outdoor amenities, but also the outdoor offerings that come with it and give way to a more holistic lifestyle.  Given these consumer sentiments, residential townships invite homebuyers to venture into a way of living that offers unparalleled convenience, and accessibility to amenities.
      Here are the key reasons why homebuyers should consider investing in a residential township.
   
 
Well-planned and self-sustaining
        
     What makes township different is that the residents can rely on them for diverse needs.  “The pandemic has inspired a paradigm shift in consumer lifestyles, changing the core principles of how home buying used to work.  More people are now realizing the importance of a self-sustaining, and self-reliant society.  As a result, residential townships make for an attractive investment option since they provide an ecosystem, and lifestyle that stand-alone buildings cannot offer.”
         After all, townships boast of all the factors that enhance the liveability quotient for its residents, be it state-of-the-art amenities, security systems, high-street retail, ample parking spaces, or expansive open areas.  “Gone are the days when people had to drive to the gym just to use a treadmill.  In a way, many residential townships embody similar characteristics as that of well-planned cities and hence, pose as smaller yet highly functional replicas of metro cities”.


Holistic and healthy lifestyle

   Besides a world-class residence, townships offer a unique lifestyle to their residents.  “Ample greenery, and beautiful gardens, running tracks, swimming pools, tennis courts, and other such facilities are available in townships; charting the course of a healthy lifestyle.  Most importantly, open areas in townships allow people to rejuvenate when needed.  Having these provisions at close distance assists people in being more active and invested in their well-being.  Townships also offer modern, and fully furnished apartments, proving that style and comfort can go in hand,“.
     Moreover, many townships also feature top-notch security systems, hospitals, schools, and shopping centres that make the daily life of its residents convenient.  “Additionally, some townships also contain mass transit systems that transport residents to the nearest bus or train station, thus making their daily commute easy.  The accessibility to these modern facilities makes townships truly unmatched and sought-after among homebuyers” .

A sense of community

    Many families inhabit residential townships and become a part of well-knit communities that foster a sense of belongingness.  Agarwal opines, “Residential townships serve as great rental options for not only joint families but also nuclear ones and young couples as they provide a robust sense of community.”

       Amit Jain (name changed), an entrepreneur, recently moved into a township with his family of five.  He expresses, “While this was a huge financial commitment for us, life has become more comfortable.  My parents are able to interact with like-minded people; my daughter enjoys more freedom, and safety in terms of going out to play with other kids.  The move has brought some much-needed social change in our lives.  While in apartment buildings, most people chose to remind closed off in their homes, here, we enjoy better interaction with our community.”

Tuesday, June 11, 2024

புதிய வீட்டுக்கான முன்பதிவு செய்வதில் கவனிக்க வேண்டியவை !

 புதிய வீட்டுக்கான முன்பதிவு செய்வதில் கவனிக்க வேண்டியவை !


சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில் தங்களுக்கான வீட்டை முன்பதிவு செய்வது வழக்கம். இதில், மக்களை ஈர்க்க கட்டுமான நிறுவனங்கள் முதலில் வரும் நபர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. 



சில ஆண்டுகள் முன்பு வரை புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் நாட்களில், அதில் வீடு வாங்க முன்பதிவு செய்வதில் மக்களிடம் கடும் போட்டி இருந்தன. இதை ஊக்குவிக்கும் வகையில் கட்டுமான நிறுவங்கள் சலுகைகளை வாரி வழங்கி வந்தன.



பொதுவாக, இப்படி புதிய திட்டம் அறிவிக்கப்படும் போது முன்பதிவு செய்தால், அப்போது, அடையாளமாக 1 லட்சம் ரூபாய் வரை மக்கள் செலுத்துவர். அதன் பின் நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., பத்திரப்பதிவு முடிந்த பின், வங்கிக்கடன் வாயிலாக வீட்டின் விலை தொகை கட்டுமான நிறுவனத்துக்கு வரும். 


இவ்வாறு வரும் தொகையை அடிப்படையாக வைத்து தான் கட்டுமான பணியில் ஏற்படும் பல்வேறு செலவுகளை கட்டுமான நிறுவனங்கள் சமாளிக்கும்.



இதில் ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், கட்டுமான திட்டம் அறிவிக்கப்படும் போதும், கட்டுமான பணிகள் நடக்கும் நிலையில் விற்பனையாகும் வீட்டுக்கு ஐந்து சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. 



ஆனால், கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு உரிய சி.சி,, சான்றிதழ் பெற்ற நிலையில், அந்த வீட்டை வாங்கும் போது ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படாது. இதனால், பெரும்பாலான மக்கள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் வரை காத்திருந்து அதன் பின் அந்தந்த திட்டங்களில் வீடு வாங்க முன்வருகின்றனர்.



இதனால், கட்டுமான நிறுனங்களுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்படுவதுடன், வீடுகள் விற்பது உறுதியாகாத நிலையில் அவர் வங்கியில் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டியுள்ளது. 


இது புதிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவதில், கட்டுமான நிறுவனங்களுக்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும். 


எனவே, புதிய வீடு வாங்கும் மக்கள் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளை வாங்க முன்வந்தால் தான் அடுத்தடுத்த புதிய திட்டங்கள் வருவதற்கு ஏற்ற சூழல் உருவாகும்.  குறிப்பாக, ஜி.எஸ்.டி., தொடர்பாக சில விஷயங்களை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.


கட்டுமான பணி முடிந்து, சி.சி. சான்று வாங்கிய வீடுகளுக்கு ஜி.எஸ்.டி., வரி இல்லை என்றாலும், அதில் பல்வேறு நிலைகளில் கட்டுமான நிறுவனம் செலுத்திய ஜி.எஸ்.டி., வரி தொகை, விலையில் தான் சேர்க்கப்படும் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.


மேலும், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய பதிவு விதிகளின்படி, கட்டுமான பணி முடியும் நாள் குறித்த விபரங்களை, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.



ஏலத்தில் வரும் வீட்டின் முழு ஆவணங்களையும் ஆய்வு செய்வது அவசியம் !

 ஏலத்தில் வரும் வீட்டின் முழு ஆவணங்களையும் ஆய்வு செய்வது அவசியம் !

பொதுவாக, சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்போர், புதிதாக கட்டப்படும் வீடுகளை வாங்க வேண்டும் என்று தான் திட்டமிடுகின்றனர். புதிய வீடுகள் விலை மிக மிக அதிகமாக இருக்கும் நிலையில், பொது மக்கள் பழைய வீடு கிடைத்தால் கூட பரவாயில்லை என்று வாங்க முற்படுகின்றனர்.


இவ்வாறு, பழைய வீடு வாங்கும் நிலையில், உரிமையாளர் நல்ல முறையில் பயன்படுத்தி வரும் வீடு என்றால் மட்டுமே அதை வாங்குவர். இதில் அடுத்த கட்டமாக, வங்கிகள் ஏலத்தில் விற்கும் வீடுகளை வாங்க மக்கள் மத்தியில் பரவலாக ஆர்வம் அதிகரித்துள்ளது.


உதாரணமாக, சென்னையில் ஒரு இடத்தில் புதிதாக கட்டப்படும், 600 சதுர அடி வீடு, 35 லட்சம் ரூபாய் என்று விலை இருக்கும் இடத்தில் வங்கி ஏலத்தில், 22 லட்சம் ரூபாய்க்கு வீடு கிடைத்தால், அதை வாங்குவது லாபகரமானது தான்என்ற முடிவுக்குமக்கள் வருகின்றனர்.


வீட்டுக்கடனை முறையாக செலுத்தாத நபர்களின் வீடுகளை வங்கிகள் இவ்வாறு ஏலம் வாயிலாக விற்பனை செய்யும். இதில் பெரும்பாலான வங்கிகள் உரிய சந்தை மதிப்பை ஆராய்ந்து அத்தொகைக்கு ஏலம் விடுவதைவிட, தங்கள் நிலுவைத் தொகை வந்தால்போதும் என்று நினைக்கின்றன. 


இதனால், குறைந்த விலையில் வீடுகள் ஏலத்துக்கு வருவதை பார்க்க முடிகிறது. இத்தகைய வீடுகளை வாங்க வேண்டும் என்று நினைப்போர் வங்கிகளை முறையாக அணுகி, ஏலத்தில் பங்கேற்று அந்த வீடுகளை வாங்கலாம்.


இவ்வாறு, ஏலத்தில் அறிவிக்கப்படும் வீட்டை வாங்க நினைப்போர், முதலில் ஏல அறிவிப்பில் உள்ள முகவரி, சர்வே எண் விபரங்கள் அடிப்படையில் அந்த சொத்து தொடர்பான வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். 


அதன் பின் அந்த முகவரிக்கு நேரில் சென்று கட்டடத்தின் தற்போதைய நிலை, அது அமைந்துள்ள பகுதியின் நிலை ஆகியவற்றை ஆராய வேண்டும். அதன் பின் ஏலத்தில் பணம் செலுத்தி பங்கேற்று, வீட்டை வாங்கும் போது, அது தொடர்பாக கடன் தாரர் என்னென்ன ஆவணங்களை ஒப்படைத்தார் என்ற பட்டியலை கேட்க வேண்டும்.


அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் பிரதிகளையும், அசலையும் கேட்டு வாங்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் சட்ட ரீதியான வில்லங்க சரிபார்ப்புக்கான ஆவணங்கள், கிரைய பத்திரங்கள், கட்டட வரைபடம், தாய் பத்திரம், பட்டா பிரதி ஆகியவற்றை மட்டுமே வங்கிகள் கொடுக்கின்றன. 


இந்த வீட்டின் மின்சார இணைப்பு, சொத்து வரி, குடிநீர் வடிகால் இணைப்புக்கான ஆவணங்களையும் மக்கள் கேட்டு வாங்க வேண்டும், இதை தவறவிட்டால், வீடு வாங்கியபின் இந்த இணைப்புகளை தங்கள் பெயருக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

முன்னோர் சொத்துக்களை பெற விரும்பும் வாரிசுகள் கவனத்துக்கு…

 முன்னோர் சொத்துக்களை பெற விரும்பும் வாரிசுகள் கவனத்துக்கு…


வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் பெரும்பாலும் சுய சம்பாத்தியத்தில் சேர்த்த பணத்தை கொடுத்து உரிய நபரிடம் இருந்து கிரையம் பெறுவது வழக்கம். இவ்வாறு கிரையம் வாயிலாக பெறப்படும் சொத்துக்கு அந்த நபர் தான் முழுமையான உரிமையாளர் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.


சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்குவது ஒரு பக்கம் என்றால், முன்னோர் சேர்த்து வைத்த சொத்துக்களை முறையாக திரட்டி, அதன் வாரிசாக இருப்பது ஒரு ரகம். இதில் முன்னோர் சொத்துக்களை அடைய வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


குறிப்பாக, ஒரு குடும்பத்தில் தந்தை வாங்கி வைத்த சொத்துக்கள் அவரது மகன், மகள்களுக்கு சேரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தந்தை இறந்த நிலையில் சொத்துக்களுக்கு நாம் உரிமையாளர் ஆகிவிடுவோம் என்று தான் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.


தந்தை அல்லது அவருக்கு முந்தைய தலைமுறையினர் சேர்த்த சொத்துக்களுக்கு நீங்கள் வாரிசாக இருந்தால், அதை முறைப்படி ஆவண ரீதியாக நிரூபிக்க வேண்டும். இதற்கு, சொத்தின் உரிமையாளராக இருந்த நபர்கள் இறந்து விட்டதாக வாய்மொழியாக சொல்வது போதாது.


சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர் எப்போது, எப்படி இறந்தார் என்பதற்கான ஆவண ஆதாரங்கள் முறையாக பெற வேண்டியது அவசியம். 


குறிப்பாக, சொத்து உரிமையாளர் இறந்தது குறித்த இறப்பு சான்றிதழ், அவருக்கு நீங்கள் எந்த விதத்தில் வாரிசு என்பதை உறுதி செய்யும் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்து தான் சொத்தை உங்கள் பெயருக்கு மாற்ற முடியும்.



இந்த ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருந்தால் போதுமா என்றால் இத்துடன் கூடுதலாக மேலும் சில ஆவணங்களையும் அளிக்க வேண்டும். சம்பந்தபட்ட சொத்து குறித்து அதன் உரிமையாளர் உயில் எதுவும் எழுதி வைத்திருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.


இதே போன்று, அந்த சொத்து அவர் பெயருக்கு எப்படி வந்தது என்பதற்கான பத்திரம், அதற்கு முந்தைய உரிமையாளரிடம் இருந்ததற்கான பத்திரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.


இதில் பழைய பத்திரங்கள், பட்டா, நில அளவை வரைபடம் ஆகியவற்றை முறையாக அளித்தால் தான் உங்கள் பெயருக்கு சொத்து வரும். 


பல இடங்களில் தந்தை இறந்த நிலையில் ஒரு மகன் அல்லது ஒரு மகள் இருக்கும் குடும்பத்தில், சொத்து தானாக தங்கள் பெயருக்கு வந்துவிட்டதாக நினைத்துக்கொள்கின்றனர். இதனால், பல ஆண்டுகளாக அப்படியே அனுபவித்தும் வருகின்றனர். இதில் ஆவண ரீதியாக உரிய கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.

வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் பணிகளுக்கு கட்டுப்பாடு வருமா?

 வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் பணிகளுக்கு கட்டுப்பாடு வருமா?



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக மனை வாங்கி அதில் வீடு கட்டும் போது அப்பகுதி சாலையைவிட, 2 அடி உயரத்தில் தான் வீட்டின் தரை மட்டம் அமைக்கப்படும். இத்தகைய பகுதிகளில், சாலையின் தரைமட்டம் கடந்த, 20 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து வருவதால் வீட்டின் தரைமட்டத்தைவிட சாலை உயர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக புதிதாக சாலை அமைக்கும் போது அங்கு தரைமட்டத்தை உயர்த்தி அதன் மேல் தார் சாலை அமைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு தார் சாலை அமைக்கப்பட்ட பின், அடுத்து வரும் ஆண்டுகளில் புதுப்பித்தலின் போது, மேல் பகுதி தார் சாலை மில்லிங் முறையில் சுரண்டி எடுக்கப்பட்டு அதன் பின் புதிய சாலை அமைக்கப்பட வேண்டும்.

ஆனால், பல இடங்களில் மில்லிங் பணிகள் மேற்கொள்ளாமல் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டதால், அதன் தரை மட்டம் படிப்படியாக உயர்ந்துவிட்டது. இதனால், பெரும்பாலான இடங்களில் சாலையைவிட வீடு தாழ்வான பகுதியாக மாறியிருப்பதை பார்க்க முடிகிறது.

இதனால், மழைக்காலத்தில் சாலையில் வழிந்தோடும் வெள்ள நீர் நேரடியாக வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. இது போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, பழைய வீட்டை இடித்து கட்டுவோர் கூடுதல் உயரத்தில் தரைமட்டத்தை அமைப்பது வழக்கமாக மாறி உள்ளது.

பழைய வீட்டை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர் செயற்கை முறையில் வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் வழிமுறையை நாடுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, பீஹார், ஹரியானா மாநிலங்களில் இருந்து சில குழுக்கள், ஹைட்ராலிக் கருவிகளை பயன்படுத்தி வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தி கொடுக்கின்றன.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இக்குழுக்கள், வீடுகளின் தரைமட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபடுகின்றன. இதில் சாதாரணமாக, தரைதளம் மட்டும் உள்ள வீடுகள் மட்டுமின்றி, இரண்டு, மூன்று மாடி கட்டடங்களையும், 5 முதல், 10 அடி வரை உயரமாக்கி கொடுக்கின்றன.

மழைக்கால பாதுகாப்புக்காக இந்த வழிமுறையை உரிமையாளர்கள் பயன்படுத்தினாலும். அரசு துறைகள் இது விஷயத்தில் எவ்வித வரைமுறைகள், கட்டுப்பாடுகளை விதிக்காமல் உள்ளது ஏன் என்று தெரியவில்லை. எந்தெந்த பகுதியில் எத்தனை அடி வரை வீட்டின் தரை மட்டத்தை உயர்த்தலாம்.

தரைமட்டம் உயர்த்தப்பட்ட நிலையில் வீட்டின் ஸ்திரதன்மை எப்படி இருக்கும், தரைமட்டம் உயர்த்தும் பணியின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன என்பது போன்ற விஷயங்களில் அரசு நிர்வாகம் தனக்குள்ள பொறுப்பை உணராமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

இப்போதாவது அரசு விழித்து இது விஷயத்தில் உரிய கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும். தரைமட்டம் உயர்த்தும் பணிகளுக்கான பாதுகாப்பு விதிகளை வகுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Saturday, June 8, 2024

Want to check out an under-construction home?

 Want to check out an under-construction home?

An under-construction property is enticing due to its many benefits like higher returns and customisation opportunities.  That being said, it comes with a fair bit of uncertainty as there’s a chance of possession delays which can lead to financial loss.  Follow these steps to avoid any such issues and ensure a satisfactory property acquisition.

Verify the developer’s background

With the real estate market booming, one can find various ongoing and upcoming housing projects all over the city.  As choosing the right developer is crucial for a low risk purchase, buyers must check the developer’s track record, financial statements, and credentials.  “On several real estate blogs and websites, buyers discuss and share their experience of dealing with different developers.  Such reviews help judge the developer’s capability.  With a developer who has a reputation for completing projects with quality materials in the specified time, homebuyers can mitigate potential risks and ensure they get what was promised.  If one intends to hire a realtor, “As many realtors work with developers and can offer biassed opinions, one must consult a trusted real estate agent.”

Perform the legal due diligence

Real estate dealings require multiple approvals from local authorities.  “One must conduct a few mandatory checks before purchasing a property, such as whether the project is approved by the Real Estate Regulatory Authority (RERA), to gauge the authenticity of the development.” Enquire about documents like the property title, commencement certificate (CC), and an approved layout.  Confirm if you will be provided with an occupancy certificate (OC) once the construction is complete.  Read all the agreements like the development agreement and the sale agreement to understand all the terms and conditions of the purchase.  Also, make sure that details such as the completion date, payment schedule, warranties or guarantees, and penalty clause in case of project delay are mentioned in the agreement.

Flexible payment plans


Under-construction homes come with several financial perks.  Buyers can opt for a construction-linked payment plan, which is spread across the duration of construction.  It limits one’s financial losses in case the project gets delayed or cancelled.  Some builders also offer discounts and options like zero EMI till possession. 

Survey the site frequently

Visit the construction site and evaluate the quality of materials to guarantee that the construction meets the promised standards.  “Examine the fixtures and fittings, electrical, mechanical, and plumbing work, cement quality, waterproofing, compliance with environmental and safety regulations, levelling of beams and columns, and state of the walls and tiles.”  Regular visits will also highlight the speed at which the construction is progressing.

Investing your hard earned money in a property that is not yet ready is risky.  But with planning and vigilance, you can make your investment in an under-construction home successful.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய அடிப்படை தகவல்கள்!

 

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய அடிப்படை தகவல்கள்!
பொதுவாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கும் போது, அதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை சரி பார்ப்பதில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. கட்டுமான நிறுவனம் சொல்லும் அனைத்து வகையான வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை, வீடு ஒப்படைப்பதற்கு முன் சரி பார்க்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து, வீடு வாங்கும் போது அதில் வீட்டுக்குள் என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என, கட்டுமான நிறுவனம் உறுதியளித்த விஷங்கள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும். இதில், பெரும்பாலான சமயங்களில் வீடு ஒப்படைக்கும் போது அமைதியாக இருப்பவர்கள், அதன் பின் புகார் தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.


நீங்கள் வாங்கும் வீட்டில் என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என, கட்டுமான நிறுவனம் கூறும் விபரங்களை நம்புவது தவறில்லை. அதில் கட்டுமான செலவுக்கான பட்ஜெட்டில் எது சாத்தியப்படும் என்ற எதார்த்த நிலவரத்தை மக்கள் அறிய வேண்டியது அவசியம்.

கட்டுமான நிறுவனம் சார்பில் பேசும் விற்பனை முகவர்கள் சில சமயங்களில் பல்வேறு கூடுதல் வாக்குறுதிகளை அளிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய வாக்குறுதிகள் கட்டுமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ உறுதியா என்பதை சரிபார்க்க வேண்டும்.

பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், தங்கள் பட்ஜெட்டுக்கு உட்பட்டு வரும் சிறப்பு வசதிகளை மட்டுமே மக்களுக்கும் வழங்கும் நிலையில் உள்ளன. தற்போதைய விலைவாசியை கருத்தில் வைத்து, இது போன்ற வாக்குறுதிகளை நம்புவதில் கவனமாக இருக்க வேண்டும்.

சில இடங்களில் எதார்த்த சூழலில் சாத்தியமில்லை என்று தெரிந்தும், வீடு வாங்கும் நபர்கள் குறிப்பிட்ட சில கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோருகின்றனர். இது போன்ற நிலையில், உங்கள் அழுத்தம் காரணமாக கட்டுமான நிறுவனம் அந்த வசதிகளை செய்து கொடுத்தால், அதற்கான செலவு வேறு இடத்தில் சமரசம் செய்யப்பட்டு இருக்கும்.

அவ்வாறு, சமரசம் செய்யப்பட்ட காரணத்தால் கட்டடத்தின் வேறு பாகத்தில் புதிதாக ஏதாவது குறைபாடு வரும் போது, அப்போது வருத்தப்படுவதால் எவ்வித பயனும் இல்லை. இன்றைய சூழலில் கட்டுமான பொருட்களின் விலை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து வருகிறது.


இதில் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் எது சாத்தியப்படும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப உங்கள் எதிர்பார்ப்பு இருப்பதை உறுதி செய்யுங்கள். இவ்வாறு, எதார்த்த நிலையை புரிந்து செயல்பட்டால், வீடு வாங்கும் நிலையில் பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


Virtual home tours beyond ease and convenience

  Virtual home tours beyond ease and convenience Digital tours are also contributing to a greener planet by minimising the number of resourc...