About VV PROPERTIES: Your Expert Real Estate Consultant Welcome to my blog! I'm DR. PRABHU VENKATARAMAN, a passionate real estate consultant with 14 years of experience in helping clients buy, sell, and invest in properties. My mission is to simplify the real estate process, providing you with the knowledge and confidence to make the best decisions for your unique needs.
Saturday, August 24, 2024
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சொத்துக்களை விற்பதில் கவனிக்க வேண்டியவை!
வீட்டுவசதி கண்காட்சிகளுக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
இன்றைய சூழலில் ஆன்லைன் முறையில் பல்வேறு வசதிகள் கிடைத்தாலும் நேரில் சென்று விசாரித்து வாங்குவதில் மக்களுக்கு தனியான விருப்பம் தொடர்கிறது. இந்த வகையில் கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் திட்டங்கள் குறித்த விபரங்களை பொதுமக்கள் ஆன்லைன் முறையில் அறிய ஏற்பாடு செய்தன.
சொத்தின் நகல் பத்திரம் பெறுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
2001 க்கு முன் வாங்கிய சொத்துக்கு இண்டெக்சேஷன் வாய்ப்பு உண்டா?
மேலும், இது 2001க்குப் பிறகு வாங்கப்பட்ட வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்படியானால், 2001க்கு முன்பு வாங்கப்பட்ட சொத்துக்கான மதிப்பை எப்படிக் கணக்கிடுவது; அதற்கு இண்டெக்சேஷன் வாய்ப்பு உண்டா, என்றெல்லாம் பொதுமக்கள் மத்தியில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த குழப்பங்களை தீர்க்கும் வகையில், தற்போது 2001க்கு முன்பு வாங்கிய சொத்துகளுக்கான நீண்டகால மூலதன ஆதாய வரி தொடர்பாக, ஒரு விளக்கத்தை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டுக்கு முன் வாங்கிய நிலம், கட்டடம் அல்லது இரண்டுக்கும்,
இண்டெக்சேஷன் கணக்கீடு உண்டு. அன்றைய தேதியில், சொத்தின் வாங்கிய விலையோ அல்லது நியாயமான சந்தை மதிப்போ எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சந்தை மதிப்பு முத்திரைத் தாள் மதிப்புக்கு அதிகமாக இருக்கக் கூடாது.
உதாரணமாக, 1990ல் ஒரு சொத்து ஐந்து லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். 2001ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் அதன் முத்திரைத் தாள் மதிப்பு 10 லட்சம் ரூபாய், நியாய மான சந்தை மதிப்பு
12 லட்சம் ரூபாய்
என்றும் எடுத்துக் கொள்வோம்.
அந்த சொத்து ஜூலை 23, 2024க்குப் பிறகு ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் வைத்துக் கொள்வோம்.
2023 ஏப்ரல் 1 அன்று, அந்த சொத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் (முத்திரைத் தாள் அல்லது நியாயமான சந்தை விலையில் குறைவானதை எடுத்துக்கொள்வோம்)
இந்தச் சொத்தின் மதிப்பு 2023 -- 24 ஆண்டில் எவ்வளவு?
தற்போதைய மதிப்பு = 10 லட்சம் X 363/100 = 36.30 லட்சம் ரூபாய். இதுதான் இண்டெக்சேஷன் செய்த பின்னர் உள்ள மதிப்பு.
இதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரி எவ்வளவு?
ரூ.1 கோடி -- ரூ.36.30 லட்சம் = ரூ.63.70 லட்சம்.
இந்த 63.70 லட்சம் ரூபாய்க்கு, 20 சதவீதம் நீண்டகால மூலதன ஆதாய வரி கணக்கிட்டால், 12.74 லட்சம் ரூபாய் வரும். இதை அரசுக்கு செலுத்தவேண்டும்.
இவ்வாறு, வருமான வரித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
Thursday, August 22, 2024
பத்திரம், பட்டாவில் நில அளவுகளை சரி பார்ப்பதில் கவனிக்க
பெரும்பாலான பகுதிகளில் நிலத்தின் அளவுகள் ஹெக்டேர், ஏக்கர், ஏர்ஸ் என்ற அடிப்படையில் தான் குறிப்பிடப்படுவதை பார்த்து இருப்போம். ஆனால், பத்திரங்களில் நிலத்தின் அளவுகள் சதுர மீட்டர், சென்ட் என்ற அடிப்படையில் தான் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.
இதனால், என்ன பிரச்னை வந்துவிட போகிறது என்று தான் சொத்து வாங்கும் பெரும்பாலான மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். மேலும், சொத்தின் சர்வே எண், பட்டா எண் போன்ற விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று மேலோட்டமாக பார்த்து அமைதியாகிவிடுகின்றனர்.
உண்மையில், நீங்கள் ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்னால், அதன் பரப்பளவு என்ன என்பதை முழுமையாக தெளிவாக விசாரிக்க வேண்டும். விற்பனையாளர் சொல்லும் அளவுகள் அவர் பெயரில் உள்ள பத்திரத்தில் சரியாக இருக்கிறதா என்றும், அதே விபரங்கள் பட்டா உள்ளிட்ட ஆவணங்களிலும் இருக்கிறதா என்று பாருங்கள்.
மேலும், இது போன்ற ஆவணங்களை சரி பார்க்கும் போது, அதில் குறிப்பிடப்பட்ட அளவுகள் அடிப்படையில் ஏதாவது சந்தேகம் என்றால், நில அளவுகள் குறித்து அறிந்தவரை அணுகி உதவி பெறுவது நல்லது.
உதாரணமாக, ஒரு சொத்தை நீங்கள் வாங்கும் அதற்கான பத்திரத்தில் மனையின் அளவுகள் சதுர அடி, சதுர மீட்டரில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பட்டா, எப்.எம்.பி., எனப்படும் நில அளவை வரைபடத்தில் ஏக்கர், ஏர்ஸ் முறையில் குறிப்பிடப்பட்டிருந்தால் எப்படி சரி பார்ப்பது என்ற கேள்வி எழும். இதில் சொத்து வாங்குவோர், அடிப்படையாக சில அளவு விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, 1 சென்ட் என்பது, 435.60 சதுர அடி, 1 ஏக்கர் என்பது, 100 சென்ட், 1 மீட்டர் என்பது, 3.33 அடி என்ற அடிப்படை அளவுகளை மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இத்துடன் நிற்காமல், இணையதளங்களில் நில அளவுகள் தொடர்பாக கன்வெர்டர்கள் இலவசமாக கிடைக்கின்றன.
இது போன்ற வசதிகளை பயன்படுத்தி, பத்திரம், பட்டாவில் குறிப்பிடப்பட்ட நில அளவுகள் ஒரே மாதிரி இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம். குறிப்பாக, நில அளவை வரைபடத்தை பார்க்கும் போது, அதில் மொத்த பரப்பளவு குறிப்பிடப்பட்டு இருந்தாலும், பக்கவாட்டு அளவுகளை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டியது அவசியம்.
பத்திரத்தில் உள்ள அளவுகள் சரியாகதான் இருக்கும் என்று அலட்சியமாக இருந்தால், சொத்து வாங்கிய பின் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்கின்றனர், இத்துறை வல்லுனர்கள்.
Virtual home tours beyond ease and convenience
Virtual home tours beyond ease and convenience Digital tours are also contributing to a greener planet by minimising the number of resourc...
-
#eyedonation #service #socialservice
-
Information of Land use both oral as well as in writing across the table. For copies of plans approved by CMDA both for plots as well as...