Tuesday, June 11, 2024

வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் பணிகளுக்கு கட்டுப்பாடு வருமா?

 வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் பணிகளுக்கு கட்டுப்பாடு வருமா?



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக மனை வாங்கி அதில் வீடு கட்டும் போது அப்பகுதி சாலையைவிட, 2 அடி உயரத்தில் தான் வீட்டின் தரை மட்டம் அமைக்கப்படும். இத்தகைய பகுதிகளில், சாலையின் தரைமட்டம் கடந்த, 20 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து வருவதால் வீட்டின் தரைமட்டத்தைவிட சாலை உயர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக புதிதாக சாலை அமைக்கும் போது அங்கு தரைமட்டத்தை உயர்த்தி அதன் மேல் தார் சாலை அமைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு தார் சாலை அமைக்கப்பட்ட பின், அடுத்து வரும் ஆண்டுகளில் புதுப்பித்தலின் போது, மேல் பகுதி தார் சாலை மில்லிங் முறையில் சுரண்டி எடுக்கப்பட்டு அதன் பின் புதிய சாலை அமைக்கப்பட வேண்டும்.

ஆனால், பல இடங்களில் மில்லிங் பணிகள் மேற்கொள்ளாமல் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டதால், அதன் தரை மட்டம் படிப்படியாக உயர்ந்துவிட்டது. இதனால், பெரும்பாலான இடங்களில் சாலையைவிட வீடு தாழ்வான பகுதியாக மாறியிருப்பதை பார்க்க முடிகிறது.

இதனால், மழைக்காலத்தில் சாலையில் வழிந்தோடும் வெள்ள நீர் நேரடியாக வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. இது போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, பழைய வீட்டை இடித்து கட்டுவோர் கூடுதல் உயரத்தில் தரைமட்டத்தை அமைப்பது வழக்கமாக மாறி உள்ளது.

பழைய வீட்டை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர் செயற்கை முறையில் வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் வழிமுறையை நாடுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, பீஹார், ஹரியானா மாநிலங்களில் இருந்து சில குழுக்கள், ஹைட்ராலிக் கருவிகளை பயன்படுத்தி வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தி கொடுக்கின்றன.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இக்குழுக்கள், வீடுகளின் தரைமட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபடுகின்றன. இதில் சாதாரணமாக, தரைதளம் மட்டும் உள்ள வீடுகள் மட்டுமின்றி, இரண்டு, மூன்று மாடி கட்டடங்களையும், 5 முதல், 10 அடி வரை உயரமாக்கி கொடுக்கின்றன.

மழைக்கால பாதுகாப்புக்காக இந்த வழிமுறையை உரிமையாளர்கள் பயன்படுத்தினாலும். அரசு துறைகள் இது விஷயத்தில் எவ்வித வரைமுறைகள், கட்டுப்பாடுகளை விதிக்காமல் உள்ளது ஏன் என்று தெரியவில்லை. எந்தெந்த பகுதியில் எத்தனை அடி வரை வீட்டின் தரை மட்டத்தை உயர்த்தலாம்.

தரைமட்டம் உயர்த்தப்பட்ட நிலையில் வீட்டின் ஸ்திரதன்மை எப்படி இருக்கும், தரைமட்டம் உயர்த்தும் பணியின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன என்பது போன்ற விஷயங்களில் அரசு நிர்வாகம் தனக்குள்ள பொறுப்பை உணராமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

இப்போதாவது அரசு விழித்து இது விஷயத்தில் உரிய கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும். தரைமட்டம் உயர்த்தும் பணிகளுக்கான பாதுகாப்பு விதிகளை வகுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Saturday, June 8, 2024

Want to check out an under-construction home?

 Want to check out an under-construction home?

An under-construction property is enticing due to its many benefits like higher returns and customisation opportunities.  That being said, it comes with a fair bit of uncertainty as there’s a chance of possession delays which can lead to financial loss.  Follow these steps to avoid any such issues and ensure a satisfactory property acquisition.

Verify the developer’s background

With the real estate market booming, one can find various ongoing and upcoming housing projects all over the city.  As choosing the right developer is crucial for a low risk purchase, buyers must check the developer’s track record, financial statements, and credentials.  “On several real estate blogs and websites, buyers discuss and share their experience of dealing with different developers.  Such reviews help judge the developer’s capability.  With a developer who has a reputation for completing projects with quality materials in the specified time, homebuyers can mitigate potential risks and ensure they get what was promised.  If one intends to hire a realtor, “As many realtors work with developers and can offer biassed opinions, one must consult a trusted real estate agent.”

Perform the legal due diligence

Real estate dealings require multiple approvals from local authorities.  “One must conduct a few mandatory checks before purchasing a property, such as whether the project is approved by the Real Estate Regulatory Authority (RERA), to gauge the authenticity of the development.” Enquire about documents like the property title, commencement certificate (CC), and an approved layout.  Confirm if you will be provided with an occupancy certificate (OC) once the construction is complete.  Read all the agreements like the development agreement and the sale agreement to understand all the terms and conditions of the purchase.  Also, make sure that details such as the completion date, payment schedule, warranties or guarantees, and penalty clause in case of project delay are mentioned in the agreement.

Flexible payment plans


Under-construction homes come with several financial perks.  Buyers can opt for a construction-linked payment plan, which is spread across the duration of construction.  It limits one’s financial losses in case the project gets delayed or cancelled.  Some builders also offer discounts and options like zero EMI till possession. 

Survey the site frequently

Visit the construction site and evaluate the quality of materials to guarantee that the construction meets the promised standards.  “Examine the fixtures and fittings, electrical, mechanical, and plumbing work, cement quality, waterproofing, compliance with environmental and safety regulations, levelling of beams and columns, and state of the walls and tiles.”  Regular visits will also highlight the speed at which the construction is progressing.

Investing your hard earned money in a property that is not yet ready is risky.  But with planning and vigilance, you can make your investment in an under-construction home successful.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய அடிப்படை தகவல்கள்!

 

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய அடிப்படை தகவல்கள்!
பொதுவாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கும் போது, அதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை சரி பார்ப்பதில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. கட்டுமான நிறுவனம் சொல்லும் அனைத்து வகையான வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை, வீடு ஒப்படைப்பதற்கு முன் சரி பார்க்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து, வீடு வாங்கும் போது அதில் வீட்டுக்குள் என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என, கட்டுமான நிறுவனம் உறுதியளித்த விஷங்கள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும். இதில், பெரும்பாலான சமயங்களில் வீடு ஒப்படைக்கும் போது அமைதியாக இருப்பவர்கள், அதன் பின் புகார் தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.


நீங்கள் வாங்கும் வீட்டில் என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என, கட்டுமான நிறுவனம் கூறும் விபரங்களை நம்புவது தவறில்லை. அதில் கட்டுமான செலவுக்கான பட்ஜெட்டில் எது சாத்தியப்படும் என்ற எதார்த்த நிலவரத்தை மக்கள் அறிய வேண்டியது அவசியம்.

கட்டுமான நிறுவனம் சார்பில் பேசும் விற்பனை முகவர்கள் சில சமயங்களில் பல்வேறு கூடுதல் வாக்குறுதிகளை அளிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய வாக்குறுதிகள் கட்டுமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ உறுதியா என்பதை சரிபார்க்க வேண்டும்.

பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், தங்கள் பட்ஜெட்டுக்கு உட்பட்டு வரும் சிறப்பு வசதிகளை மட்டுமே மக்களுக்கும் வழங்கும் நிலையில் உள்ளன. தற்போதைய விலைவாசியை கருத்தில் வைத்து, இது போன்ற வாக்குறுதிகளை நம்புவதில் கவனமாக இருக்க வேண்டும்.

சில இடங்களில் எதார்த்த சூழலில் சாத்தியமில்லை என்று தெரிந்தும், வீடு வாங்கும் நபர்கள் குறிப்பிட்ட சில கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோருகின்றனர். இது போன்ற நிலையில், உங்கள் அழுத்தம் காரணமாக கட்டுமான நிறுவனம் அந்த வசதிகளை செய்து கொடுத்தால், அதற்கான செலவு வேறு இடத்தில் சமரசம் செய்யப்பட்டு இருக்கும்.

அவ்வாறு, சமரசம் செய்யப்பட்ட காரணத்தால் கட்டடத்தின் வேறு பாகத்தில் புதிதாக ஏதாவது குறைபாடு வரும் போது, அப்போது வருத்தப்படுவதால் எவ்வித பயனும் இல்லை. இன்றைய சூழலில் கட்டுமான பொருட்களின் விலை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து வருகிறது.


இதில் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் எது சாத்தியப்படும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப உங்கள் எதிர்பார்ப்பு இருப்பதை உறுதி செய்யுங்கள். இவ்வாறு, எதார்த்த நிலையை புரிந்து செயல்பட்டால், வீடு வாங்கும் நிலையில் பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


வீடு கட்ட ஏஏசி பிளாக்குகளை பயன்படுத்த மக்கள் தயங்குவது ஏன்?

 

வீடு கட்ட ஏஏசி பிளாக்குகளை பயன்படுத்த மக்கள் தயங்குவது ஏன்?


கட்டுமான பணிகளை விரைவாக, எளிதாக முடிப்பதற்காக பல்வேறு வகையான புதிய பொருட்கள் அறிமுகமாகின்றன. இந்த பொருட்களை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் முறையான வழிகாட்டுதல்கள் அடிப்படையில் செயல்பட வேண்டும்.


உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியை திட்டமிடும் போது, அதில் எந்த இடத்தில் என்ன வகை பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை ஆரம்ப நிலையிலேயே திட்டமிடுங்கள். குறிப்பாக, ஆற்று மணலை பயன்படுத்துவதா அல்லது எம் சாண்ட் பயன்படுத்துவதா என்பதை தெளிவாக முடிவு செய்யுங்கள்.


நீங்கள் வீடு கட்டும் பகுதியில் செங்கல் எளிதாக கிடைக்கும் என்றால், அதை பயன்படுத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில், கட்டடம் கட்டப்படும் இடம் ஈரமான மண் உள்ள பகுதியாக காணப்படும் நிலையில் செங்கலை பயன்படுத்தும் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.


இது போன்ற சூழலில் உள்ளூரில், எளிதாக கிடைக்கிறதே என்பதற்காக செங்கலை பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இல்லை. நிலத்தின் தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை நிலைத்து நிற்க செய்யும் வகையிலான மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.


குறிப்பாக, ஹாலோ பிளாக்குகள், சாலிட் பிளாக்குகள், ஏஏசி கற்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை புறக்கணிக்காதீர். அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு தகவல்கள் எளிதாக கிடைக்கும் நிலையிலும் ஏஏசி கற்ககளை கட்டுமான பணிக்கு பயன்படுத்துவதில் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.


கட்டுமான பணியில் மாற்று பொருட்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலையில், சில பொறியாளர்களும் கூட ஏஏசி கற்களை பயன்படுத்தினால் செலவு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். ஒரு 9 அங்குல ஏஏசி பிளாக்கை பயன்படுத்தும் இடம் என்பது, 13 செங்கல்களுக்கு இணையானது.


இன்றைய தேதியில் ஒரு செங்கல்லின் விலை என்ன, 13 செங்கல்களை வரிசையாக வைத்து இணைக்க தேவைப்படும் சிமென்ட் கலவை ஆகியவற்றுக்கான செலவை கருத்தில் கொள்ள வேண்டும். ஏஏசி கற்கள் இப்போது தான் வந்துள்ளது, இதை பயன்படுத்தி கட்டடம் கட்டினால் அதன் உறுதி என்ன என்பது உடனடியாக தெரியாது என்றும் கூறப்படுகிறது.

ஏஏசி கற்களை தயாரிக்கும் நிலையில் அது பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கல்லின் மொத்த எடை என்ன, அது எவ்வளவு சுமையை தாங்கும் என்பது அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


உயரமான கட்டடங்கள் கட்டும் போது, எடை குறைந்த கற்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு ஏஏசி கற்கள் சிறந்த மாற்றாக அமைந்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.


வீடு கட்டுவதில் குழப்பம் ஏற்படுத்தும் தகவல்களை தவிர்ப்பது நல்லது

 வீடு கட்டுவதில் குழப்பம் ஏற்படுத்தும் தகவல்களை தவிர்ப்பது நல்லது

சொந்தமாக நிலம் வாங்கி அதில் நம் விருப்பப்படி வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது தான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது. இதற்கான வழிமுறைகளை தேர்வு செய்வதிலும், செயல்படுத்துவதிலும் தான் பல இடங்களில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.எந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்காக, நிலம் வாங்கி வைத்து இருப்பீர்கள். அந்த நிலத்தில் வங்கிக்கடன் வாயிலாக நிதி திரட்டி வீடு கட்ட திட்டமிடும் போது அதற்கான வழிமுறைகள் குறித்த விஷயங்களில் உரிய நம்பகமான நபர்களின் வழிகாட்டுதல்களை ஏற்பது நல்லது.

இதில் ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் இறங்கினால், பல்வேறு தரப்பில் இருந்து ஏராளமான ஆலோசனைகள் இலவசமாக கொட்டும். இது போன்று குவியும் ஆலோசனைகளில் எதை ஏற்பது, எதை தவிர்ப்பது என்பதில் தெளிவாக முடிவு எடுக்க வேண்டும்.


நீங்கள் புதிதாக கட்ட உத்தேசித்துள்ள வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்கள் குடும்பத்தின் தேவை அறிந்து முடிவு செய்யுங்கள். மற்றவர்களின் விருப்பத்தைவிட அந்த வீட்டை தினசரி பயன்படுத்தும் நபரகளின் விருப்பம் தான் மிக மிக அவசியம்.


அதே சமயம், குடும்பத்தினரின் விருப்பப்படி என்ன வசதிகள் எப்படி அமைய வேண்டும் என்பதை பொறியாளருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள். இதில் நீங்கள் மனை வாங்கி வைத்துள்ள ஊரில் என்ன விதத்தில், என்ன கட்டடகலை முறையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பதை பாருங்கள்.


பெரும்பாலான மக்கள் என்ன வழிமுறையை கடைபிடிக்கின்றனர் என்று பார்த்து அந்த வழியில் உங்கள் வீட்டையும் கட்டுவது தான் சிக்கல் தவிர்ப்பு வழிமுறையாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்டட கலையில் காணப்படும் சிறப்பு அம்சங்களை சேர்த்து ஒரே வீட்டை கட்டுவது என்பது ஒருவகையில் அழகாக இருக்கலாம்.


ஆனால், எதார்த்த நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் வீடு கட்டி முடிக்க வேண்டும் என்ற சூழலில் இருப்பவர்கள் இது போன்ற முயற்சிகளில் இறங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலோட்டமாக பார்த்தால் செலவு குறைப்பு போன்று தெரியும் சில வழிமுறைகள் நடைமுறையில் கூடுதல் செலவை ஏற்படுத்துவதாக உள்ளன.


குறிப்பாக, யாரோ சொன்னார்கள் என்பதற்காக நீங்கள் தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டால் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

கட்டுமான பணிகள் பாதியில் தடைபடுவதற்கான காரணங்கள் என்ன?

கட்டுமான பணிகள் பாதியில் தடைபடுவதற்கான காரணங்கள் என்ன?
வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான பணிகளை துவக்கிய பின், ஏதாவது சில காரணங்களால் பணிகள் பாதியில் முடங்குவதை பார்த்து இருப்போம். வெளியில் இருந்து பார்க்கும் போது, கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் முழுமையாக புரியாது.


தனி நபர் அல்லது கட்டுமான நிறுவனம் என்று எதுவானாலும், புதிய திட்டத்தை செயல்படுத்தும் போது அதற்கான பணிகளை எப்படி தடையின்றி மேற்கொள்வது என்பதை திட்டமிட வேண்டும். குறிப்பாக, பணிகள் பாதியில் முடங்காமல் செல்வதற்கான செயல்திட்டம் இருக்க வேண்டும்.


தனி நபர் எனும் போது அவருக்கு இதில் போதிய அனுபவம் இருக்காது என்பதால், ஏதாவது பிரச்னை ஏற்பட்டு பணிகள் பாதியில் முடங்கலாம்.தொடர்ந்து பல்வேறு இடங்களில் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் கட்டுமான நிறுவனங்களின் திட்டங்களும் பாதியில் முடங்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.


ஒரு இடத்தில் குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்த பின், அதற்கான பணிகளை எப்போது, எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். கட்டுமான திட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால், அது சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவுடன் உரிமையாளர்கள் இருக்க வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, கட்டுமான திட்டங்கள் துவங்கிய வேகத்தில் விரைவாக நடக்க வேண்டும் என்றால் அதை முடக்கும் அடிப்படை விஷயங்கள் என்ன என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். கட்டுமான பணிக்கான பட்ஜெட் போட்டு அதற்கு தேவையான நிதியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணிகளை துவக்கும் நிலையில், அதற்கு குறைந்தபட்சம் முதல், 3 மாதங்களில் தேவைப்படும் நிதி இருப்பில் வைக்கப்பட வேண்டும்.வங்கிக்கடன் வாயிலாக வீடு கட்டுவதாக இருந்தால், முதல் தவணைக்கு முன் உங்கள் பங்கு நிதியை தயாராக வைத்திருக்க வேண்டும்.



வீடு கட்டுவதற்கான மொத்த பட்ஜெட்டில், முதல், 20 சதவீத தொகையை உரிமையாளர் தான் செலவு செய்ய வேண்டும். இந்த பணத்தை உரிமையாளர் வைத்திருப்பதை நிரூபித்தால் தான் கடன்கொடுக்க வங்கிகள் முன்வரும், அத்துடன் இதை முதலில் உரிமையாளர் செலவு செய்ய வேண்டும்.


இதே போன்று, கட்டுமான திட்ட அனுமதி சார்ந்த பணிகளை முறையாக முடிக்காமல், வீடு கட்டும் பணிகளை துவக்கக் கூடாது. பெரும்பாலான இடங்களில் கட்டுமான திட்ட அனுமதி நடவடிக்கைகள் பாதியில் இருக்கும் போதே கட்டுமான பணிகளை துவக்கி விடுகின்றனர். இதில் முறையாக வரைபடம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், திட்ட அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் கூட கட்டுமான பணிகள் பாதியில் முடங்க காரணமாகின்றன. குறிப்பிட்ட கால வரம்புக்குள் கட்டுமான அனுமதி கிடைக்க வேண்டும் என்பதை அரசு நிர்வாகம் உறுதி செய்தால், இப்பிரச்னை தவிர்க்கப்படும் என்கின்றனர் கட்டுமானதுறை வல்லுனர்கள்.

 

Wednesday, June 5, 2024

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வீடு, மனை வாங்குவோர் கவனிக்க

 தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வீடு, மனை வாங்குவோர் கவனிக்க

வீடு, மனை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபடுவோர், தங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, எந்த இடத்தில் வீடு வாங்க வேண்டும், அந்த இடம் நமக்கு ஏற்றதா என்பதை தெளிவாக கவனிக்க வேண்டும். 


இதில், ஒரு இடத்தில் குடியேற வேண்டும் என்றால், தினசரி வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கு இருக்க வேண்டும். போக்குவரத்து வசதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவை முறையாக இருக்க வேண்டும்.


வில்லங்கம் இல்லாத சொத்தாக இருக்க வேண்டும் என்பதுடன், இது போன்ற அடிப்படை தேவைகளும் பூர்த்தியாக வேண்டியது அவசியம். சில சமயங்களில் சொத்து வில்லங்கம் எதுவும் இல்லாமல் சிறப்பான முறையில் அமைந்து இருந்தாலும் அதில், அடிப்படை வசதிகள் குறைபாடு காணப்படும். 


அடிப்படை வசதிகளை பொறுத்தவரை, நீங்கள் வாங்கும் வீடு, மனைக்கு முறையான சாலைகள், கழிவுநீர், மழைநீர் வடிகால் வசதிகள் இருக்க வேண்டியது அவசியம். இத்துடன் அந்த இடத்தில் நிலத்தடி நீர் எந்த அளவுக்கு கிடைக்கிறது, அதன் தரம் என்ன என்பதை முறையாக ஆய்வு செய்வது அவசியம்.



இதில் அனைத்து விதத்திலும் நம்மை திருப்தி படுத்தினாலும், தண்ணீர் விஷயத்தில் சில குறைபாடுகள் இருக்கும் சொத்தை வாங்குவது நல்லதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு இடத்தில் குடியிருக்க வேண்டும் என்றால், தண்ணீர் வசதி மிக மிக அடிப்படையான தேவை.

எனவே, நீங்கள் வீடு, மனை வாங்கும் இடத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறதா என்பதை கவனித்து பார்க்க வேண்டியது அவசியம். சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் தான் என்றாலும், அது கோடை காலத்தில் மட்டும் இருந்தால் சமாளித்துக்கொள்ளலாம்.

ஆனால், ஆண்டு முழுதும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் என்றால், அந்த பகுதிகளில் வீடு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஆண்டில் சில மாதங்கள் தண்ணீர் தட்டுப்பாடு என்றால், லாரிகள் வாயிலாக வாங்கி, கீழ் நிலை தொட்டிகளில் நிரப்பி வைத்து பயன்படுத்தலாம்.

இந்த நடைமுறையை ஆண்டு முழுதும் கடைப்பிடிப்பது என்பது, அதிகம் செலவு பிடிக்கும் வழிமுறையாக அமைந்துவிடும். எனவே, தட்டுப்பாடு உள்ள பகுதி என்று தெளிவாக தெரியும் இடங்களில் வீடு, மனை வாங்குவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

அனைத்து வசதிகளும் நல்ல முறையில் உள்ளது, விலையும் குறைவாக இருக்கிறது, வில்லங்கம் இல்லை என்பது சிறப்பு தான் என்றாலும், தண்ணீர் தட்டுப்பாடு என்பது உங்கள் தினசரி வாழ்க்கையில் பிரதான தேவை. இந்த விஷயத்தை எதார்த்த நிலையில் புரிந்து, அதன் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது நல்லது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

Virtual home tours beyond ease and convenience

  Virtual home tours beyond ease and convenience Digital tours are also contributing to a greener planet by minimising the number of resourc...