Monday, September 26, 2022

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் பட்டா விஷயத்தில் கவனிக்க

 அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் பட்டா விஷயத்தில் கவனிக்க

       வீடு, மனை வாங்குவோர் அதற்கான பத்திரப்பதிவு முடிந்தவுடன், பட்டா மாறுதலில் கவனம் செலுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

        இருப்பினும், மனை வாங்குவோர் மத்தியில் ஏற்பட்ட அளவுக்கு, அபார்ட்மெண்ட் திட்டங்களில், வீடு வாங்குவோரிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை.

         அடுக்குமாடி வீடுகளை வாங்குபவர்கள் பத்திரப்பதிவு முடிந்தவுடன், எல்லா வேலைகளும் முடிந்து விட்டதாக நிம்மதியாக இருந்து விடுகின்றனர்ஆனால், வேலை அத்துடன் முடிந்து விடாதுவீட்டுக்கு பட்டா வாங்க வேண்டுமல்லவா...

          தனி வீட்டுக்குப் பட்டா வாங்கலாம்; ஆனால், அடுக்குமாடி குடியிருப்புக்கு எப்படி பட்டா வாங்குவது...  உதாரணமாக அடுக்குமாடி குடியிருப்பில், ஆறு வீடுகள் இருந்தால், இந்த ஆறு பேரும் தங்களுக்கென தனியாக உட்பிரிவு பட்டா வாங்க வேண்டும்.

           மனை விற்பனையில் பத்திரப்பதிவின் போது பட்டா பெயர் மாறுதலுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதுஇதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.

           இதை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட தாலுக்கா அலுவலகத்தை அணுகி பட்டா பெயர் மாறுதல் பெறலாம்.

           இதில், தற்போது வரை, நிலத்துக்கு பட்டா மாறுதலுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதுஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு விற்பனையை பதிவு செய்வோருக்கும், இந்த வசதி இருக்க வேண்டும்உண்மையில், அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர், இத்தகைய ஒப்புகை சீட்டு பெற்றாலும், அவர்கள் பட்டா மாறுதல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

            இன்னும் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பட்டா வாங்க வேண்டியதில்லை என்ற எண்ணத்திலேயே மக்கள் இருக்கின்றனர்தனி வீடு என்றால், பட்டா வாங்க வேண்டும்; அடுக்குமாடி குடியிருப்புகளில் பட்டா தேவையில்லை என்று பலரும் நினைக்கின்றனர்.

           இதிலும், அதிக எண்ணிக்கையில் வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பட்டா வழங்குவதில், அதிகாரிகள் நிலையிலேயே பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றனசாதாரணமாக, 10 வீடுகள் வரை உள்ள குடியிருப்புகளுக்கு, யு.டி.எஸ்., பங்கீடு அடிப்படையில் பட்டா வழங்குவதில் சிக்கல் இல்லை.

               ஆனால், 50 வீடுகளும், அதற்கு அதிகமான வீடுகள் உள்ள குடியிருப்புகள், நான்கு அல்லது ஐந்து சர்வே எண்களில் உள்ள நிலங்களின் தொகுப்பாக உள்ளதுஇந்த தொகுப்பு நிலங்களுக்கு, யு.டி.எஸ்., அடிப்படையில் பட்டா வழங்குவதற்கான நடைமுறைகளை வருவாய்துறை தெளிவுபடுத்த வேண்டும்.

                தமிழகத்தில், பல இடங்களில் இப்படி தொகுப்பு நிலங்களை பயன்படுத்தியே குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

                 இதன் தாக்கத்தை புரிந்து, வருவாய் துறை அதிகாரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பட்டா வழங்குவதில், குழப்பங்களை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்இதுவரை, பத்திரப்பதிவு செய்து, பட்டா கேட்டு விண்ணப்பம் அளிக்கலாம்இந்த உட்பிரிவு பட்டா என்பது, அடுக்குமாடி வீடுகளுக்கு மட்டுமல்ல; மலைகளுக்கும், மற்ற பயன்பாட்டு நிலங்களுக்கும் பொருந்தக் கூடியது என்கின்றனர்,ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

துணை விதிகளை பார்க்காமல் அறக்கட்டளை சொத்துக்களை வாங்காதீர்!

 துணை விதிகளை பார்க்காமல் அறக்கட்டளை சொத்துக்களை வாங்காதீர்!

           புதிதாக சொத்து வாங்குவதில் சில அடிப்படை விஷயங்களை சட்ட ரீதியாக சரி பார்த்துக் கொள்ள வேண்டும்குறிப்பாக யாரிடம் இருந்து புதிய சொத்தை வாங்குகிறோம் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

            தனி நபர்களிடம் இருந்து சொத்து வாங்குவதை காட்டிலும், அறக்கட்டளை, சங்கங்களிடம் சொத்துக்களை வாங்குவதில் சட்ட ரீதியாக பல்வேறு சிக்கல்கள் வருகின்றனஇத்தகைய சொத்துக்களை வாங்க வேண்டாம் என்று ஒதுங்க முடியாது.



            விற்பவர்கள், சட்ட வழி முறைகளை சரியாக கடைப்பிடித்துள்ளார்களா என்பதை பார்க்க வேண்டும்குறிப்பாக, அறக்கட்டளை சொத்துக்களை வாங்குவதில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

             தனிநபர் எனில் அவருக்கு அந்த சொத்து எப்படி கிடைத்தது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பார்க்கப்படுகிறதுஅது போன்று, சங்கம், அறக்கட்டளையின் சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது கூடுதல் ஆய்வு அவசியம்.

            குறிப்பாக, அறக்கட்டளை சார்பில் விற்கப்படும் சொத்துக்களை வாங்குவோர், அந்த சொத்தின் முன் வரலாறு விபரங்களை அறிய வேண்டும்இதில், அறக்கட்டளையின் நிர்வாக அமைப்பு, அதில் யாருக்கு சொத்து விற்பனை அதிகாரம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

          மேலும், அறக்கட்டளையின் துணை விதிகளின் பிரதியை வாங்கி பார்க்க வேண்டும்அதில் சொத்து விற்பனை தொடர்பாக யார் என்ன செய்ய வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்.

        அனைத்து அறக்கட்டளைகளுக்கும் ஒரே விதமான துணை விதிகள் தான் இருக்கும்ஆனால், சில அறக்கட்டளைகள், துணை விதிகளில் மாறுதல்கள் செய்து இருக்கும்.

         இது போன்ற விஷயங்களை வழக்கறிஞர் உதவியுடன் சரி பார்க்க வேண்டும்மேலும், சொத்து விற்பனை தொடர்பாக அறக்கட்டளையின் நிர்வாக குழுவில் ஏதாவது தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர், சட்ட வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Thursday, September 22, 2022

Real Estate Investment Consultant


Real Estate Investment Consultant


 https://www.youtube.com/channel/UCrf-_u-WQTuDth5vJ4Et1rg
https://www.facebook.com/VVPCHENNAI/
https://www.linkedin.com/in/dr-prabhu-venkataraman-87a73915b/
Twitter @prabhuvvp
#realestate #investment #propertysale #chennai #tamilnadu #india #consultant #homeloan #sbi #hdfc #kvb #icicibank #lichfl #socialservice #gatedcommunity #apartments #flats #villas #plots #commercialshops #internationalsales #interiors #homelane #squareyards #township #highrise #service #integratedtownship #lifestyle #luxuryapartments #security&safety

An emerging real estate service provider established in Chennai, dealing in properties and everything covered under the realm of the word to say plots, villas, apartments, etc. We believe in not just settling deals but in educating our customers about every minute detail that effects the real estate market and can influence their decision-making. Always making the customer’s needs our prime concern. We teach, we lead we suggest and test until you find what you wished for providing a one-stop for all property solutions

TN Govt. RERA Certified Property Consultant
Branded Interiors
International Sales
No Brokerage / Commissions
Transparency and Accountability
End-to-End Solution
Team of Professionals
Financial Services : We are empaneled with all the leading banks were all the required service will be at the doorstep.

உரிமையாளர் ஆட்சேபத்தால் பத்திரப்பதிவில் ஏற்படும் சிக்கல்கள்!

 உரிமையாளர் ஆட்சேபத்தால் பத்திரப்பதிவில் ஏற்படும் சிக்கல்கள்!

     சொத்து பரிவர்த்தனைக்கான பத்திரப்பதிவில் விற்பவர், வாங்குபவர் இருவரும் சார்-பதிவாளர் முன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்ஆனால், சில தவிர்க்க முடியாத சூழலில், விற்பவர் அல்லது வாங்குபவர் யாராவது ஒருவர் நேரில் ஆஜராக முடியாத நிலை ஏற்படலாம்.

       இத்தகைய சூழலில், சம்மந்தப்பட்டவர் இருப்பிடத்துக்கே பதிவாளர் வந்து பத்திரப்பதிவை மேற்கொள்வார்இந்த சலுகையை அனைவரும் பயன்படுத்த முடியாது.


                                            #documentation #propertysale #sale 

        உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், சிறையில் இருப்பவர்கள், நீதிமன்ற தடை காரணமாக பொது இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தலாம்இதில், வழக்கமான கட்டணத்துடன் கூடுதல் தொகை வசூலிக்கப்படும்.

           இந்த சலுகை நியாயமான காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை சம்மந்தப்பட்ட சார் பதிவாளர் தான் முடிவு செய்ய வேண்டும்குறிப்பாக, ஆள்மாறாட்டம் செய்வோர், இதை பயன்படுத்திட வாய்ப்புகள் உள்ளதால் சார் பதிவாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

         இத்துடன், சில சமயங்களில் விற்பவர் பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்து இருப்பார்இதை சொத்து பெறுபவர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்து பதிய முனைவார்.

         இது போன்ற சமயங்களில் சார்-பதிவாளர் சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளருக்கு கடிதம் அனுப்பி, அவர் தரப்பில் ஆட்சேபம் உள்ளதா என்பதை அறிய வேண்டும்இதில் பதில் வராத நிலையில், சார்-பதிவாளர் அந்த பத்திரத்தை தாக்கல் நிலையிலேயே நிராகரிப்பார்.

          இவ்வாறு நிராகரிக்கப்படும் நிலையில், பதிவுக்கு சென்றவர், மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்வார்இந்த மேல் முறையீட்டிலும் நிராகரிப்பு உறுதியானால், அவர் நீதிமன்றம் செல்லவும் வாய்ப்புள்ளது.

          உரிமையாளர் நேரில் வராமல் பத்திரங்களை பதிவு செய்வதை பெரும்பாலான சார் பதிவாளர்கள் தவிர்க்கின்றனர்ஆனால், சில இடங்களில் பிரச்னை குறித்து தெரிந்த நிலையிலும் சார்-பதிவாளர்கள் இதற்கு துணை போகின்றனர்.

           உரிமையாளர் இல்லாமல், அவர் சார்பில் பணியாளர்கள் இத்தகைய ஏற்பாடுகளை செய்து சொத்து பரிவர்த்தனை செய்தால் பணம் கொடுத்து வாங்குவோர் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்எனவே, எந்த அடிப்படையிலும், உண்மையான உரிமையாளர் நேரில் வராமல் பதியப்படும் சொத்துக்களை வாங்காதீர் என்கின்றனர், பதிவுத்துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

யு.டி.எஸ்., சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள்!

    யு.டி.எஸ்., சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள்!

         அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவோர், அதற்கான நிலம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்இதில் நிலம் யாருடையது, அது கட்டுமான நிறுவனத்தால் எந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை வீடு வாங்குவோர் அறிய வேண்டியது அவசியம்.

          நீங்கள் வீடு வாங்க தீர்மானித்துள்ள அடுக்குமாடி திட்டம் அமைந்துள்ள நிலம் யாருடையதுஅதில், கட்டுமான நிறுவனத்தின் உரிமை என்ன என்பதை முன்பணம் கொடுக்கும் நிலையிலேயே விசாரிக்க வேண்டும்.


                            #uds #apartment #investment #propertysale #gatedcommunity

         இன்றைய சூழலில், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் நிலத்தை தங்கள் பெயருக்கு கிரையம் செய்து கொள்வதில்லைஉரிமையாளரிடம் பவர் வாங்கி அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துகின்றன.

          இதில், பெரிய பரப்பளவு நிலங்களை வாங்கி அதிக எண்ணிக்கையில் வீடு கட்டுவது ஒரு வகைஇரண்டு வெவ்வேரு நபர்களின் பெயரில் உள்ள தலா அரை கிரவுண்ட் நிலத்துக்கு பவர் பெற்று, அதில் வீடு கட்டுவது ஒரு வகை.

          இவ்வாறு சிறிய அளவில் நிலத்தை மேம்படுத்தும்போது, அதில் குறிப்பிட்ட அளவு வீடுகள் உரிமையாளர்களுக்கே கொடுக்கப்படும்இவர்களுக்கு போக மீதியுள்ள வீடுகள் வெளியாருக்கு விற்கப்படும்.

         இப்படி வெளியாருக்கு விற்கப்படும் வீடுகளுக்கு யு.டி.எஸ்., பங்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றனகுறிப்பாக, இது போன்ற திட்டங்களில், 50 சதவீத யு.டி.எஸ்., பழைய உரிமையாளர்களுக்கு சென்றுவிடும்மீதியுள்ள, 50 சதவீத  யு.டி.எஸ்., வீடு வாங்குவோருக்கு வழங்கப்படும்இதில் எத்தனை வீடுகள் வருகிறதோ அவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும்.

          ஆனால், சில இடங்களில், மொத்தமாக, 50 சதவீத  யு.டி.எஸ்., பங்கை வைத்துள்ள பழைய நில உரிமையாளர்கள் புதிதாக வீடு வாங்குவோரை சிறுபான்மையாக கருதி பல்வேறு தொல்லைகள் கொடுப்பது தொடர்பான புகார்கள் எழுகின்றன.

           சில இடங்களில் வழக்கு வரை செல்லும் அளவுக்கு இப்பிரச்னை செல்கிறதுபழைய உரிமையாளர், புதிய உரிமையாளர் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் முறையான யு.டி.எஸ்., பங்கு அளிக்கப்பட வேண்டும் என்கின்றனர், நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

காலியாக உள்ள வீட்டுமனைகளுக்கு சொத்து வரி விதிக்கப்படுமா?

 காலியாக உள்ள வீட்டுமனைகளுக்கு சொத்து வரி விதிக்கப்படுமா?

      நமது நாட்டில் நில வரி என்பது வருவாய் துறை சார்ந்த விஷயமாக இருந்து வருகிறதுஇதில் விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்காக நிலம் பயன்படுத்தப்பட்டால் அதில் கிடைக்கும் லாபம் அடிப்படையில் வரி விதிப்பு இருக்கும்.

        ஆனால், நிலம் வீட்டு மனையாக மாற்றப்பட்டு, அதில் வீடுகள் கட்டப்படும் நிலையில், அப்பகுதியின் அடிப்படை வசதி மேம்பாட்டுக்காக உள்ளாட்சி அமைப்புகள் வரி விதிக்கும்இதற்காக நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

                                                    #propertytax #vacantplot #investment

         இவ்வாறு சொத்து வரி விதிப்பதற்கு சட்ட ரீதியாக வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளனஇருப்பினும், சில சமயங்களில் சொத்து வரி சார்ந்த சிக்கல்கள் எழுகின்றன.

         தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி, கட்டடம் கட்டப்பட்டு இருந்தால் மட்டுமே சொத்து வரி விதிக்க முடியும்ஆனால், கூரை வீடுகளுக்கு சொத்து வரி விதிக்க முடியாது.

          இதில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளவர்கள், நிலங்களை முறையாக மதிப்பீடு செய்து வரியை நிர்ணயம் செய்ய வேண்டும்ஆனால், பல இடங்களில் நிலங்களை நேரில் ஆய்வு செய்யாமல் சொத்து வரி நிர்ணயம் நடப்பதாக கூறப்படுகிறது.

            இதனால், காலியாக உள்ள மனைகளுக்கு சொத்து வரி விதிக்கப்படுகிறதுஇவ்வாறு வரி விதிப்பு குறித்து தகவல் வரும்போது உரிமையாளர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

             இது குறித்து நேரில் சென்று விசாரித்தால் உள்ளாட்சி அமைப்புகளில் முறையான பதில் கிடைப்பதில்லைஇதனால், எதிர்காலத்தில் வீடு கட்டுவதற்காக மனை வாங்கி வைத்தவர்கள் கடுமையான அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.

             காலியாக உள்ள மனைக்கும் சேர்த்து தான் அந்தந்த பகுதிகளில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனஅப்படி இருக்கும்போது, காலியாக உள்ள மனைகளின் உரிமையாளர்களுக்கு வரி விதிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

              இதில், நகர்ப்புற பகுதிகளில் இத்தகைய நிலங்களுக்கு காலி மனை வரி விதிக்க தனியான வழிமுறை உள்ளதுஅதை கடைபிடிக்க உள்ளாட்சி அமைப்புகள் முன் வர வேண்டும்.

              அதைவிடுத்து விதிகளை மீறி சொத்து வரி விதிப்பதால் சட்ட சிக்கல் தான் ஏற்படுகிறதுஇது விஷயத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகளுக்கு அரசு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...