Tuesday, July 9, 2024

பிளம்பிங் இணைப்புகளை சரி பார்க்காமல் சுவரில் டைல் பதிக்கலாமா?

 

பிளம்பிங் இணைப்புகளை சரி பார்க்காமல் சுவரில் டைல் பதிக்கலாமா?


புதிதாக வீடு கட்டும் போது அதில் அடிப்படை கட்டுமானங்களில் கவனம் செலுத்தினால் போதும் என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், சுவர்கள் கட்டு வது, அதில் டைல்ஸ் எனப்படும் பதிகற்கள் அமைப்பது தொடர்பான பல்வேறு விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


சமீப காலமாக, வீடுகளில் தரைகள் மட்டுமல்லாது, சுவர்களிலும் பதிகற்கள் அமைக்கும் பழக்கம் பரவலாக அதிகரித்துள்ளது.இது போன்று சுவர்களில் பதிகற்கள் அமைத்துவிட்டால், எவ்வித ஈர கசிவும் ஏற்படாது என்று தான் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.


உண்மையில் தண்ணீர் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் சுவர்களில் பதிகற்கள் அமைப்பது நல்ல பலனை தரும் என்று நம்பப்படுகிறது.

ஒருவகையில் இது சரியான வழிமுறையாக தெரிந்தாலும், பயன்பாட்டு நிலையில் பதிகற்கள் அமைக்கப்பட்ட சுவர்களில் வேறு எந்த சீரமைப்பு வேலையும் செய்யமுடியாது.


குறிப்பாக, பெரும்பாலான வீடுகளில் குளியலறையில் பிளம்பிங் குழாய்கள் கன்சீல்டு முறையில் சுவருக்குள் பதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு சுவருக்குள் பிளம்பிங் குழாய்களை பதிக்கும் நிலையில் அதில், பிற்காலத்தில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டது தெரிந்தால், டைல்ஸ் பதித்த நிலையில் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும்.


எனவே, உங்கள் வீட்டு குளியலறை உள்ளிட்ட பகுதிகளில் பதிகற்கள் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டால், அங்கு பிளம்பிங் குழாய் அமைக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, பிளம்பிங் குழாய்களை தேர்வு செய்வதில் துவங்கி, வற்றை இணைப்பது வரையிலான நிலைகளில் கவனமாக செயல்பட வேண்டும்.




குறிப்பாக, பிளம்பிங் குழாய்களை அமைக்கும் போது அதில் உடைப்புகள் எதுவும் உள்ளதா என்பதை ஆரம்பத்திலேயே உரிய கருவிகளை பயன்படுத்தி சரி பார்க்க வேண்டும். ஒரு இடத்தில் தண்ணீர் வினியோகத்துக்காக பிளம்பிங் குழாய்கள் அமைக்கும் போது அதில் முழுமையாக தண்ணீர் பயன்படுத்தும் போது, எவ்வளவு அழுத்தம் ஏற்படும் என்பதை சரி பார்ப்பது அவசியம்.


இதற்கான சில நவீன கருவிகள் வந்துள்ள நிலையில், உரிய வல்லுனர்களை அணுகினால், இத்தகைய கருவிகள் வாடகை அடிப்படையில் கிடைக்கும். இக்கருவியை வரவழைத்து, பிளம்பிங் குழாய்களில் அதிகபட்ச அழுத்தம் கொடுத்து, உடைப்பு, கசிவு ஏற்படுகிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.


இத்தகைய ஆய்வு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தான் சுவரில் பதிகற்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் தற்போது, தரை போன்று சுவர்களுக்கும் ஸ்லாப் வடிவத்தில் பெரிய பதிகற்கள் வந்துள்ளதால், அதை பயன்படுத்துவது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.


சுவர்களில் பதிகற்கள் அமைத்துவிட்டால் அங்கு அடிக்கடி உடைத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

அனாதீன வகைப்பாட்டில் உள்ள நிலத்தை விலைக்கு வாங்கலாமா?

 

அனாதீன வகைப்பாட்டில் உள்ள நிலத்தை விலைக்கு வாங்கலாமா?



வீடு, மனை வாங்கும் போது நிலம் தொடர்பான பல்வேறு சட்ட ரீதியான விஷயங்களில் தெளிவாக செயல்பட வேண்டும். ஒரு வீடு, மனை வாங்க நீங்கள் முடிவு செய்யும் போது, அது அமைந்துள்ள நிலம் யாருடையது என்பது தொடர்பான ஆவண ஆதாரங்களை கேட்டு பெற வேண்டியது அவசியம்.


இதில், நிலம் தொடர்பான விற்பவரிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் பெற்றுவிட்டோம், அனைத்தும் அசல் என்பதுடன் அமைதியாகிவிடாதீர்கள். அந்த ஆவணங்களில் நிலம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை முழுமையாக ஆய்வு செய்யுங்கள்.


அந்த குறிப்பிட்ட நிலம் இதற்கு முன் என்னவாக இருந்தது, அரசின் நிர்வாகத்தில் அது என்ன வகைபாட்டில் இருந்து தற்போது பட்டா நிலமாக மாறிஉள்ளது என்பதை அறிவது அவசியம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலம் தொடர்பான வகைபாடுகளில் மக்களிடம் சில குழப்பங்கள் காணப்படுகின்றன.


எந்தெந்த வகைபாட்டில் உள்ள நிலங்களை பொது மக்கள் வாங்கலாம், விற்கலாம் என்பது குறித்த விஷயங்களை அறிவது அவசியம். நம் நாட்டில் ஒரு சில நபர்களிடம் ஒட்டுமொத்த நில உரிமையும் குவிய கூடாது என்பதற்காக, நில உச்சவரம்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது.


இதன்படி, தனி நபர்கள், குடும்பங்களுக்கு கூட்டாகவும், அமைப்புகள் பெயரில் எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மேற்பட்ட நிலம் இருந்தால் அது அரசுடைமையாகிவிடும் என்பதே இந்த சட்டத்தின் அடிப்படை சிறப்பு அம்சமாக உள்ளது.


இந்நிலையில், உச்சவரம்பு சட்டப்படி அரசுடைமையான நிலங்கள் வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது போன்ற நிலங்களில் யாரும் உரிமை கோரப்படாத நிலையில் உள்ள நிலங்கள் அனாதீனம் என்ற வகைபாட்டில் வைக்கப்பட்டு, வருவாய் துறையால் பராமரிக்கப்படும்.


இது போன்று அனாதீனம் என்று வகைபடுத்தி வைக்கப்பட்ட நிலங்களை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. சில ஆண்டுகள் முன்புவரை சொந்த வீடு இல்லாத மக்கள் இது போன்ற உரிமை கோரப்படாத நிலத்தில் குடிசைகள் போட்டு வசித்து வந்தனர்.


ஒரு கட்டத்தில் இவ்வாறு குடியேறியவர்கள் தங்கள் பெயருக்கு பட்டா வழங்கும்படியும் அரசிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. இதில் சில இடங்களில், பக்கத்தில் உள்ள முறையான பட்டா நிலத்துடன், அனாதீன நிலமும் சேர்ந்து விற்பனை ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.


இவ்வாறு நடந்த விற்பனையை சுட்டிக்காட்டி, விடுபட்ட நிலம் என தவறான தகவல் அளித்து, அனாதீன நிலங்களுக்கு சிலர் பட்டா பெறுகின்றனர். வருவாய் துறையில் கீழ்மட்டத்தில் சிலரின் தவறால் இது போன்ற பட்டாக்கள் வழங்கப்பட்டது தெரியவரும் நிலையில் மேலதிகாரிகள் இதை ரத்து செய்கின்றனர்.


இதில், சில இடங்களில் இது போன்ற தவறான பட்டாவை நம்பி நிலம் வாங்கும் கட்டுமான நிறுவனங்கள் அதில், குடியிருப்புகளை கட்டிவிடுகின்றன. இந்நிலையில் அனாதீன நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் வீடு, மனை வாங்கியவர்கள் தங்கள் பெயருக்கு பட்டா மாறுதலுக்கு செல்லும் போது தான் பிரச்னை தெரியவரும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

Monday, July 1, 2024

அடுக்குமாடி திட்டங்களில் வீட்டின் பகுதிகள் தொடர்பாக, அறிய வேண்டியவை!

அடுக்குமாடி திட்டங்களில் வீட்டின் பகுதிகள் தொடர்பாக, அறிய வேண்டியவை!

     அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இதில் வீட்டின் ஒவ்வொரு பகுதிக்குமான பெயர்கள் புதிதாக உள்ளன. தனி வீடுகள் எனில், நிலத்தின் பரப்பளவு, அதில் உள்ள வீட்டின் அளவு மட்டும் பார்க்கப்படுகிறது. ஆனால், அடுக்குமாடி திட்டங் களில் கூடுதலாக பல்வேறு விஷ யங்களை பார்க்க வேண்டியுள்ளது.
    
    அந்த குறிப்பிட்ட திட்டத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட் டுள்ளன. அதில் நாம் வாங்கும் வீட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத் தின் அளவு என்ன என்பதை மக் கள் பார்க்க துவங்கியுள்ளனர். இதில் அடுக்குமாடி திட்ட வீடு கள் விற்பனையின் போது குறிப் பிடப்படும் சில வார்த்தைகள் மக் களுக்கு புதிதாக உள்ளன.
    
    இந்த பெயர்களுக்கு உரிய பகுதிகள் எவை என்ப தில் குழப்பம் ஏற்படுகிறது. பில்டப் ஏரியா, கார்பெட் ஏரியா, பிளிந்த் ஏரியா போன்ற பெயர்கள் மட்டுமே பரவலாக புழக்கத்தில் உள்ளன. இதில் பில்டப் ஏரியா அடிப்படையில் தான் நிறுவனங்கள் விற்பனையை துவங்குகின்றன.  ரியல் எஸ்டேட் சட் டப்படி, கார்பெட் ஏரியா அடிப்படை யிலேயே வீட்டை விற்க வேண்டும்.  பல இடங்களில் வற்புறுத்தி கேட்டால் மட் டுமே கார்பெட் ஏரியா குறித்து தெரியவரும்.   

    வீட்டில் அறைகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் சர்குலோடிங் ஏரியா என்று குறிப்பிடப்படுகின்றன.  இதில் உட்புற சர்குலேட்டிங் ஏரியா, பொதுவான சர்குலேட்டிங் ஏரியா ஆகியவற்றுக்கு வேறுபாடு உண்டு. கட்டடத்தின் சில பகுதிகள் பேஸ்மென்ட் அல்லது செல்லார் என குறிப்பிடப்படுகிறது. கட் டடத்தின் அடித்தள பகுதியே மேஸ்மென்ட் அல்லது செல் லார் என அழைக்கப்படுகிறது. இது போன்று, கட்டடத்தின் கவர்டு ஏரியா, சஜ்ஜா எனப் படும் வெளிப்புற திறப்பு பகு திகள் எவை என்பதையும் வீடு வாங்குவோர் தெளிவாக புரிந்து கொள்வது அவசியம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.



Saturday, June 29, 2024

Three key features that make a township flat worth the investment

Three key features that make a township flat 

worth the investment

From sports, recreation, and retail Centre’s to 

top-notch security, transit systems, and ample 

parking space – residential townships provide 

an all-in-one community that charts the course 

for a fulfilling lifestyle



    In the past couple of years, luxury has taken the top spot on the checklist of homebuyers.  Due to the pandemic, it is becoming  common to have an uncompromising approach towards comfort while shopping for a home among other things.  Today, a dream home is not only defined by its outdoor amenities, but also the outdoor offerings that come with it and give way to a more holistic lifestyle.  Given these consumer sentiments, residential townships invite homebuyers to venture into a way of living that offers unparalleled convenience, and accessibility to amenities.
      Here are the key reasons why homebuyers should consider investing in a residential township.
   
 
Well-planned and self-sustaining
        
     What makes township different is that the residents can rely on them for diverse needs.  “The pandemic has inspired a paradigm shift in consumer lifestyles, changing the core principles of how home buying used to work.  More people are now realizing the importance of a self-sustaining, and self-reliant society.  As a result, residential townships make for an attractive investment option since they provide an ecosystem, and lifestyle that stand-alone buildings cannot offer.”
         After all, townships boast of all the factors that enhance the liveability quotient for its residents, be it state-of-the-art amenities, security systems, high-street retail, ample parking spaces, or expansive open areas.  “Gone are the days when people had to drive to the gym just to use a treadmill.  In a way, many residential townships embody similar characteristics as that of well-planned cities and hence, pose as smaller yet highly functional replicas of metro cities”.


Holistic and healthy lifestyle

   Besides a world-class residence, townships offer a unique lifestyle to their residents.  “Ample greenery, and beautiful gardens, running tracks, swimming pools, tennis courts, and other such facilities are available in townships; charting the course of a healthy lifestyle.  Most importantly, open areas in townships allow people to rejuvenate when needed.  Having these provisions at close distance assists people in being more active and invested in their well-being.  Townships also offer modern, and fully furnished apartments, proving that style and comfort can go in hand,“.
     Moreover, many townships also feature top-notch security systems, hospitals, schools, and shopping centres that make the daily life of its residents convenient.  “Additionally, some townships also contain mass transit systems that transport residents to the nearest bus or train station, thus making their daily commute easy.  The accessibility to these modern facilities makes townships truly unmatched and sought-after among homebuyers” .

A sense of community

    Many families inhabit residential townships and become a part of well-knit communities that foster a sense of belongingness.  Agarwal opines, “Residential townships serve as great rental options for not only joint families but also nuclear ones and young couples as they provide a robust sense of community.”

       Amit Jain (name changed), an entrepreneur, recently moved into a township with his family of five.  He expresses, “While this was a huge financial commitment for us, life has become more comfortable.  My parents are able to interact with like-minded people; my daughter enjoys more freedom, and safety in terms of going out to play with other kids.  The move has brought some much-needed social change in our lives.  While in apartment buildings, most people chose to remind closed off in their homes, here, we enjoy better interaction with our community.”

Tuesday, June 11, 2024

புதிய வீட்டுக்கான முன்பதிவு செய்வதில் கவனிக்க வேண்டியவை !

 புதிய வீட்டுக்கான முன்பதிவு செய்வதில் கவனிக்க வேண்டியவை !


சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில் தங்களுக்கான வீட்டை முன்பதிவு செய்வது வழக்கம். இதில், மக்களை ஈர்க்க கட்டுமான நிறுவனங்கள் முதலில் வரும் நபர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. 



சில ஆண்டுகள் முன்பு வரை புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் நாட்களில், அதில் வீடு வாங்க முன்பதிவு செய்வதில் மக்களிடம் கடும் போட்டி இருந்தன. இதை ஊக்குவிக்கும் வகையில் கட்டுமான நிறுவங்கள் சலுகைகளை வாரி வழங்கி வந்தன.



பொதுவாக, இப்படி புதிய திட்டம் அறிவிக்கப்படும் போது முன்பதிவு செய்தால், அப்போது, அடையாளமாக 1 லட்சம் ரூபாய் வரை மக்கள் செலுத்துவர். அதன் பின் நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., பத்திரப்பதிவு முடிந்த பின், வங்கிக்கடன் வாயிலாக வீட்டின் விலை தொகை கட்டுமான நிறுவனத்துக்கு வரும். 


இவ்வாறு வரும் தொகையை அடிப்படையாக வைத்து தான் கட்டுமான பணியில் ஏற்படும் பல்வேறு செலவுகளை கட்டுமான நிறுவனங்கள் சமாளிக்கும்.



இதில் ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், கட்டுமான திட்டம் அறிவிக்கப்படும் போதும், கட்டுமான பணிகள் நடக்கும் நிலையில் விற்பனையாகும் வீட்டுக்கு ஐந்து சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. 



ஆனால், கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு உரிய சி.சி,, சான்றிதழ் பெற்ற நிலையில், அந்த வீட்டை வாங்கும் போது ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படாது. இதனால், பெரும்பாலான மக்கள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் வரை காத்திருந்து அதன் பின் அந்தந்த திட்டங்களில் வீடு வாங்க முன்வருகின்றனர்.



இதனால், கட்டுமான நிறுனங்களுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்படுவதுடன், வீடுகள் விற்பது உறுதியாகாத நிலையில் அவர் வங்கியில் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டியுள்ளது. 


இது புதிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவதில், கட்டுமான நிறுவனங்களுக்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும். 


எனவே, புதிய வீடு வாங்கும் மக்கள் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளை வாங்க முன்வந்தால் தான் அடுத்தடுத்த புதிய திட்டங்கள் வருவதற்கு ஏற்ற சூழல் உருவாகும்.  குறிப்பாக, ஜி.எஸ்.டி., தொடர்பாக சில விஷயங்களை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.


கட்டுமான பணி முடிந்து, சி.சி. சான்று வாங்கிய வீடுகளுக்கு ஜி.எஸ்.டி., வரி இல்லை என்றாலும், அதில் பல்வேறு நிலைகளில் கட்டுமான நிறுவனம் செலுத்திய ஜி.எஸ்.டி., வரி தொகை, விலையில் தான் சேர்க்கப்படும் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.


மேலும், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய பதிவு விதிகளின்படி, கட்டுமான பணி முடியும் நாள் குறித்த விபரங்களை, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.



ஏலத்தில் வரும் வீட்டின் முழு ஆவணங்களையும் ஆய்வு செய்வது அவசியம் !

 ஏலத்தில் வரும் வீட்டின் முழு ஆவணங்களையும் ஆய்வு செய்வது அவசியம் !

பொதுவாக, சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்போர், புதிதாக கட்டப்படும் வீடுகளை வாங்க வேண்டும் என்று தான் திட்டமிடுகின்றனர். புதிய வீடுகள் விலை மிக மிக அதிகமாக இருக்கும் நிலையில், பொது மக்கள் பழைய வீடு கிடைத்தால் கூட பரவாயில்லை என்று வாங்க முற்படுகின்றனர்.


இவ்வாறு, பழைய வீடு வாங்கும் நிலையில், உரிமையாளர் நல்ல முறையில் பயன்படுத்தி வரும் வீடு என்றால் மட்டுமே அதை வாங்குவர். இதில் அடுத்த கட்டமாக, வங்கிகள் ஏலத்தில் விற்கும் வீடுகளை வாங்க மக்கள் மத்தியில் பரவலாக ஆர்வம் அதிகரித்துள்ளது.


உதாரணமாக, சென்னையில் ஒரு இடத்தில் புதிதாக கட்டப்படும், 600 சதுர அடி வீடு, 35 லட்சம் ரூபாய் என்று விலை இருக்கும் இடத்தில் வங்கி ஏலத்தில், 22 லட்சம் ரூபாய்க்கு வீடு கிடைத்தால், அதை வாங்குவது லாபகரமானது தான்என்ற முடிவுக்குமக்கள் வருகின்றனர்.


வீட்டுக்கடனை முறையாக செலுத்தாத நபர்களின் வீடுகளை வங்கிகள் இவ்வாறு ஏலம் வாயிலாக விற்பனை செய்யும். இதில் பெரும்பாலான வங்கிகள் உரிய சந்தை மதிப்பை ஆராய்ந்து அத்தொகைக்கு ஏலம் விடுவதைவிட, தங்கள் நிலுவைத் தொகை வந்தால்போதும் என்று நினைக்கின்றன. 


இதனால், குறைந்த விலையில் வீடுகள் ஏலத்துக்கு வருவதை பார்க்க முடிகிறது. இத்தகைய வீடுகளை வாங்க வேண்டும் என்று நினைப்போர் வங்கிகளை முறையாக அணுகி, ஏலத்தில் பங்கேற்று அந்த வீடுகளை வாங்கலாம்.


இவ்வாறு, ஏலத்தில் அறிவிக்கப்படும் வீட்டை வாங்க நினைப்போர், முதலில் ஏல அறிவிப்பில் உள்ள முகவரி, சர்வே எண் விபரங்கள் அடிப்படையில் அந்த சொத்து தொடர்பான வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். 


அதன் பின் அந்த முகவரிக்கு நேரில் சென்று கட்டடத்தின் தற்போதைய நிலை, அது அமைந்துள்ள பகுதியின் நிலை ஆகியவற்றை ஆராய வேண்டும். அதன் பின் ஏலத்தில் பணம் செலுத்தி பங்கேற்று, வீட்டை வாங்கும் போது, அது தொடர்பாக கடன் தாரர் என்னென்ன ஆவணங்களை ஒப்படைத்தார் என்ற பட்டியலை கேட்க வேண்டும்.


அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் பிரதிகளையும், அசலையும் கேட்டு வாங்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் சட்ட ரீதியான வில்லங்க சரிபார்ப்புக்கான ஆவணங்கள், கிரைய பத்திரங்கள், கட்டட வரைபடம், தாய் பத்திரம், பட்டா பிரதி ஆகியவற்றை மட்டுமே வங்கிகள் கொடுக்கின்றன. 


இந்த வீட்டின் மின்சார இணைப்பு, சொத்து வரி, குடிநீர் வடிகால் இணைப்புக்கான ஆவணங்களையும் மக்கள் கேட்டு வாங்க வேண்டும், இதை தவறவிட்டால், வீடு வாங்கியபின் இந்த இணைப்புகளை தங்கள் பெயருக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

முன்னோர் சொத்துக்களை பெற விரும்பும் வாரிசுகள் கவனத்துக்கு…

 முன்னோர் சொத்துக்களை பெற விரும்பும் வாரிசுகள் கவனத்துக்கு…


வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் பெரும்பாலும் சுய சம்பாத்தியத்தில் சேர்த்த பணத்தை கொடுத்து உரிய நபரிடம் இருந்து கிரையம் பெறுவது வழக்கம். இவ்வாறு கிரையம் வாயிலாக பெறப்படும் சொத்துக்கு அந்த நபர் தான் முழுமையான உரிமையாளர் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.


சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்குவது ஒரு பக்கம் என்றால், முன்னோர் சேர்த்து வைத்த சொத்துக்களை முறையாக திரட்டி, அதன் வாரிசாக இருப்பது ஒரு ரகம். இதில் முன்னோர் சொத்துக்களை அடைய வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


குறிப்பாக, ஒரு குடும்பத்தில் தந்தை வாங்கி வைத்த சொத்துக்கள் அவரது மகன், மகள்களுக்கு சேரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தந்தை இறந்த நிலையில் சொத்துக்களுக்கு நாம் உரிமையாளர் ஆகிவிடுவோம் என்று தான் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.


தந்தை அல்லது அவருக்கு முந்தைய தலைமுறையினர் சேர்த்த சொத்துக்களுக்கு நீங்கள் வாரிசாக இருந்தால், அதை முறைப்படி ஆவண ரீதியாக நிரூபிக்க வேண்டும். இதற்கு, சொத்தின் உரிமையாளராக இருந்த நபர்கள் இறந்து விட்டதாக வாய்மொழியாக சொல்வது போதாது.


சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர் எப்போது, எப்படி இறந்தார் என்பதற்கான ஆவண ஆதாரங்கள் முறையாக பெற வேண்டியது அவசியம். 


குறிப்பாக, சொத்து உரிமையாளர் இறந்தது குறித்த இறப்பு சான்றிதழ், அவருக்கு நீங்கள் எந்த விதத்தில் வாரிசு என்பதை உறுதி செய்யும் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்து தான் சொத்தை உங்கள் பெயருக்கு மாற்ற முடியும்.



இந்த ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருந்தால் போதுமா என்றால் இத்துடன் கூடுதலாக மேலும் சில ஆவணங்களையும் அளிக்க வேண்டும். சம்பந்தபட்ட சொத்து குறித்து அதன் உரிமையாளர் உயில் எதுவும் எழுதி வைத்திருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.


இதே போன்று, அந்த சொத்து அவர் பெயருக்கு எப்படி வந்தது என்பதற்கான பத்திரம், அதற்கு முந்தைய உரிமையாளரிடம் இருந்ததற்கான பத்திரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.


இதில் பழைய பத்திரங்கள், பட்டா, நில அளவை வரைபடம் ஆகியவற்றை முறையாக அளித்தால் தான் உங்கள் பெயருக்கு சொத்து வரும். 


பல இடங்களில் தந்தை இறந்த நிலையில் ஒரு மகன் அல்லது ஒரு மகள் இருக்கும் குடும்பத்தில், சொத்து தானாக தங்கள் பெயருக்கு வந்துவிட்டதாக நினைத்துக்கொள்கின்றனர். இதனால், பல ஆண்டுகளாக அப்படியே அனுபவித்தும் வருகின்றனர். இதில் ஆவண ரீதியாக உரிய கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.

Virtual home tours beyond ease and convenience

  Virtual home tours beyond ease and convenience Digital tours are also contributing to a greener planet by minimising the number of resourc...