Monday, September 11, 2023

வீடு, மனை வாங்குவோர் உரிமையாளருக்கு பணத்தை கொடுப்பதில் கவனம் தேவை!

 வீடு, மனை வாங்குவோர் உரிமையாளருக்கு பணத்தை கொடுப்பதில் கவனம் தேவை!

       சொத்து வாங்குவது என்பது மிகப் பெரிய சாதனை.  அது வீடாக, நிலமாக, மனையாக எப்படியிருந்தாலும், நமக்கான பெருமையும் சாதனையுமாகும்.  இதில் சொத்துக் குறித்தான ஆவணங்கள் மற்றும் வில்லங்

கம் தொடர்பான, பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

        ஆரம்பக் கட்ட பேச்சிலிருந்து, ஆவணங்கள் சரி பார்ப்பதிலிருந்து பதிவு செய்யும் காலம் வரை கவனமாய் இருக்க வேண்டியது அவசியம்.


        குறிப்பாக, விலையை பேசி முடிவு செய்வதில், எவ்வித குழப்பத்துக்கும் இடம் கொடுக்க கூடாது.  சொத்தின் சந்தை மதிப்பு, நாம் பேசியிருக்கும் மதிப்பு என எதிலும் சுணக்கம் இருத்தல் கூடாது.


         மொத்தத்தில், 50 சதவீத அளவுக்கே உங்களுக்கு உடன்பாடு இருக்கும் நிலையில், விலையை முடிவு செய்து முன்பணம் கொடுப்பதில் எவ்வித பயனும் இல்லை.


        விலையை முடிவு செய்த நிலையில், அதை உறுதிபடுத்த விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.  இந்த விற்பனை ஒப்பந்தம் என்பது சொத்து விற்பவரிடமிருந்து சொத்துக்கான உரிமையும் சொத்து வாங்குபவரிடத்திற்கு மாற்றப்பட்டதற்கான முக்கியமான ஆவணம் ஆகும்.


         இந்த சமயத்தில் முடிவு செய்யப்பட்ட விலை எவ்வளவு, அதில் முன்பணம் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விபரங்களை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும்.


         அத்துடன், கிரைய பத்திரம் எப்போது பதிவு செய்வது என்பதையும், விலையாக பேசப்பட்ட தொகை எப்படி, எப்போது கொடுக்கப்படும் என்பதையும் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.  இவ்வாறு, குறிப்பிட்டபடி, கிரைய பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.


          இதில், கிரைய பத்திரம் பதிவுக்கு முன் முழு தொகையையும் கொடுப்பது சரியா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.  பொதுவாக, பத்திரப்பதிவின் போது, சார்-பதிவாளர், விற்பவரிடம், ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை வாங்கி விட்டீர்களா என்று விசாரிக்க வேண்டும்.

         

 பல இடங்களில், இந்த விஷயத்தில், சார்-பதிவாளர்கள் தலையிடாமல் ஒதுங்கி விடுகின்றனர்.  பத்திரத்தில் குறிப்பிட்ட தொகை கைமாறிய நிலையிலேயே பதிவு செய்ய வேண்டும்.


           ஆனால், சில இடங்களில் பத்திரம் பதிவுக்கு ஏற்கப்பட்ட பின் தான் பணம் கைமாறுகிறது.  இதில், சார்-பதிவாளர்கள் உரிமையாளருக்கு சொத்துக்கான பணம் வந்ததா இல்லையா என்பதில் கவனம் செலுத்துவதில்லை.


           விலையாக பேசப் பட்ட தொகை முழுதும் கைமாறிய நிலையிலேயே, பத்திரம் பதிவுக்கு ஏற்கப்பட வேண்டும்.  பணம் கிடைக்காத நிலையில், பத்திரம் பதிவு செய்யப்படுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

                

             அதே நேரத்தில் பணம் வாங்கிக் கொண்டவர், பத்திரப்பதிவுக்கு ஒத்துழைக்க வேண்டும்.  அவர் கடைசி நிமிடத்தில் ஏதாவது பிரச்னை செய்தால், அது சொத்து வாங்குவோருக்கு சிக்கலாகி விடும்.


             எனவே, இதில் ஒப்பந்தம் எழுதி, அதன் அடிப்படையில் விற்பவரும், வாங்குபவரும் செயல்படுவது அவசியம்.


             இழப்பீடு விதியும் இதில் சேர்க்கப்பட வேண்டும்.  அதாவது, சொத்தின் உரிமை தொடர்பான பிரச்னையோ அல்லது பண இழப்போ ஏற்படும் வகையிலான சேதங்களுக்கு, சொத்து விற்பனையாளர், அதை வாங்குபவருக்கு பணம் செலுத்துவேன் என அளிக்கும் உறுதி என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.


No comments:

Post a Comment

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...