VV PROPERTIES Estd-2010 Govt. of Tamilnadu RERA Registered Property Consultants Branded Interiors Homeloan Consultants Our Services:- Property Consultant - Luxury Villas, Life Style Apartments, CMDA, and DTCP Approved Plots, Home Loan Consultant: STATE BANK OF INDIA / HDFC For More Details:- +91 99412 39900
Monday, February 19, 2024
Is interior designing on a budget possible?
Upcoming Knowledge City could drive real estate demand
The demand for office spaces and commercial real estate around the knowledge city is expected to grow multi-fold; this will drive infrastructure for support services such as healthcare, hospitality, transportation and security. Land parcels are being identified and construction activities are being developed around TKC.
Saturday, February 10, 2024
வீட்டுமனை வாங்குவோர் சுற்றுச்சூழல் பிரச்னைகளையும் கவனிக்க வேண்டியது அவசியம்!
நிறைய பேர் வீட்டுமனைக்கான அங்கீகாரம் பற்றிய தகவல்களை சரிவர ஆராயாமல் குறைந்த விலையில் கிடைப்பதையே தங்களுக்கு சாதகமான அம்சமாக நினைத்து மனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். எந்த பகுதியில் மனை வாங்கினாலும் அந்த பகுதியை சூழ்ந்திருக்கும் கட்டமைப்பு வசதிகளை மட்டும் கவனத்தில் கொள்ளக்கூடாது. சகல வசதிகளும் நிறைந்திருப்பதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மனை பற்றிய அத்தனை ஆதாரங்களையும் சரிபார்க்க வேண்டும்.
குறிப்பாக, விற்பனைக்கு வரும் மனை தொடர்பான ஆவணங்கள், அங்கீகாரம் உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். இத்துடன் மனை அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்தும் கவனிக்க வேண்டும்.
ஒதுக்கீடு செய்யும்போது மனைப்பிரிவுகளில் குறிப்பிட்ட பகுதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போது தான் மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சிலர் அப்படி செய்யாமல் அனைத்து மனைப்பிரிவுகளையும் விற்பனை செய்து விடுவதன் மூலம் மனை வாங்குபவர்கள் பிரச்னையை சந்திக்க நேரிடும். எனவே மனை வாங்கும்போது அதற்கு செல்லும் சாலை வசதியை கவனத்தில் கொள்வதுடன் பொது பயன்பாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு சென்று அந்த மனை பற்றிய விபரங்களை சரி பார்ப்பது நல்லது.
பெரும்பாலான மக்கள் சமவெளி பகுதிகளிலேயே மனைகள் வாங்குகின்றனர். இதில் அந்த மனைகள் அருகில் குவாரிகள், நீர் நிலைகள், தொழிற்சாலைகள் இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். ஆனால், மலைப்பகுதிகளில் மனை வாங்குவோர் கூடுதலாக சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நம்மில் பலருக்கும் சுற்றுலா முக்கியத்துவம் உள்ள மலைப்பகுதிகளில் மனை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் அங்கு சென்று பொழுதை கழிக்க மாட்டோமா என்ற ஏக்கத்திலேயே இத்தகைய மனைகளை மக்கள் வாங்குகின்றனர். இவ்வாறு மனைகள் வாங்குவதில் அடிப்படையில் எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த மனைகள் யாருடையது என்பதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மலைப்பகுதிகளில் பெரும்பாலான நிலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டிலும், பழங்குடியின மக்களின் சொத்தாகவும் இருக்கும். இது போன்ற பிரிவு நிலங்களை வாங்குவதால் எதிர்காலத்தில் பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், இதில் சுற்றுச்சூழல் சார்ந்த அரசின் கட்டுப்பாடுகள் என்ன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான மலைப்பகுதி மனைகளில் கட்டடங்கள் கட்டுவதற்கும், போர்வெல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றை கவனிக்காமல் மனை வாங்கியவர்கள் பிற்காலத்தில் அதை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற மனைகள் விற்பனைக்கு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தை அணுகி, அங்கு சுற்றுச்சூழல் ரீதியாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும். இதில் தெளிவு ஏற்பட்ட நிலையிலேயே மனை வாங்குவது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
Thursday, February 1, 2024
பணி நிறைவு சான்று இல்லாத வீட்டை வாங்குவதில் கவனம் தேவை
புதிதாக வீடு வாங்குவோர், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை நாடுகின்றனர். இதில் அதிக வீடுகள் உள்ள திட்டங்கள், குறைந்த எண்ணிக்கையில் வீடுகள் உள்ள திட்டங்கள் என இரண்டு வகை உள்ளன.எத்தகைய திட்டத்தில் உங்களுக்கான வீட்டை தேர்வு செய்வது என்பதில் முதலில் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
அதன் பின் அதற்கான திட்டம் எது என்பதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.இதில் அதிக வீடுகள் உள்ள பெரிய அளவிலான குடியிருப்பு திட்டங்களில் பிரச்னையும் அதிகமாக இருக்கும் என்ற எண்ணம் நிலவுகிறது.
இதனால், சிலர் குறைந்த எண்ணிக்கையில் வீடுகள் உள்ள குடியிருப்புகளில் வீடு வாங்க முற்படுகின்றனர். இவ்வாறு, குறைந்த எண்ணிக்கை வீடுகள் உள்ள திட்டங்களை தேர்ந்தெடுப்போர், சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, கட்டட அனுமதி, பணி நிறைவு சான்று உள்ளிட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அந்த குடியிருப்பு திட்டத்தில் தற்போது வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதா அல்லது இனிமேல் தான் முடிக்கப்பட உள்ளதா என்று பாருங்கள். கட்டுமான பணி நடக்கும் நிலையில் வீடு வாங்குவதாக இருந்தால் திட்ட அனுமதி ஆவணங்களை ஆராய வேண்டும்.வீட்டை ஒப்படைக்கும் முன் பணி நிறைவு சான்றிதழ் இருப்பது அவசியம். பல இடங்களில் இது போன்ற சிறிய திட்டங்களை செயல்படுத்துவோர் பணி நிறைவு சான்று வாங்குவதில் அலட்சியமாக இருக்கின்றனர்.
வீடு வாங்குவோர் கேட்டாலும், அதெல்லாம் பெரிய திட்டங்களுக்கு தான், சிறிய குடியிருப்புகளுக்கு வராது என்று மழுப்புகின்றனர். அரசின் பொது கட்டட விதிகளின்படி, மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட திட்டங்கள் அனைத்துக்கும் பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயம்.
இதை சரியா புரிந்து வீடு வாங்கும் நிலையில் செயல்பட வேண்டியது அவசியம். அப்போது தான் அந்த கட்டடத்தில் விதிமீறல்கள் இல்லாததை உறுதி செய்ய முடியும். இதில் கவனக்குறைவாக இருந்தால், கட்டட விதிமீறல்களால் எழும் பிரச்னைகளில் சிக்க வேண்டி இருக்கும். வீடு வாங்குவோர் பணி நிறைவு சான்று விஷயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
Tuesday, January 30, 2024
கதவு ஜன்னல்களை கரையான்களிடம் இருந்து பாதுகாக்க உதவும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
வீட்டில் கதவு, ஜன்னல்கள், அலமாரிகள் அமைப்பதில் சரியான மரத்தை தேர்வு செய்து, முறையாக பயன்படுத்த வேண்டும். இதில் மிகவும் கவனமாக இருந்தாலும், சில சமயங்களில் கறையான் போன்ற பாதிப்புகள் சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
கட்டுமான பணியில் மரங்களை பயன்படுத்தும் போது, அதில் ஈரம் மற்றும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மரங்களை கட்டடத்தில் பொருத்தும் இடத்தில் இத்தகைய பூச்சிக்கொல்லி மருந்துகள் அவசியமாக தேவைப்படுகின்றன.
ஒருமுறை கறையானின் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், என்ன செய்தாலும் முழுதும் நீக்குவது கடினம். ஆகையால், வராமல் பார்த்துக் கொள்வது தான் முக்கியம்.
முந்தைய காலத்தில் கறையான்கள் உருவாகாமல் இருக்க தாரை பயன்படுத்தி வந்தனர். சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படும் தாரை வாங்கி சூடுபடுத்தி மரங்களில் பூசுவது வழக்கமாக இருந்தது. இதில் காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு, புதிய வகை பொருட்கள் பயன்படுத்தும் தனி நிறுவனங்கள் வந்து விட்டன.
நாம் வீட்டில் பயன்படுத்தாத மரப் பொருட்களை, தனி அறையில் போட்டு மூடி வைத்திருப்போம். சில காலத்திற்கு பின் அதை திறக்கும் போது கறையான் அரித்திருக்கும். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனால் நிதியிழப்பு ஏற்படும். இதை தடுக்க, 'பெஸ்ட் கன்ட்ரோல்' நிறுவனங்களை நாடலாம். இந்நிறுவனங்கள், சதுர அடிக்கு ஏற்ப கட்டணம் கணக்கிடப்படும். 5 ஆண்டுகளுக்கு கறையான்கள் வராது என உத்தரவாதம் தருகின்றனர்; அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
குறிப்பிட்ட கட்டட தரை எந்த வகையில் அமைத்துள்ளனர் என பார்ப்பர். சிமென்ட் தரை என்றால் ஒரு அடி கணக்கில் சுவரை ஒட்டி சாக்பீஸ் நுழையும் அளவு டிரில் செய்து ஓட்டை போடுவர். அதில் வரும் மண்ணை அகற்றி கெமிக்கலை அரை மணி நேரம், ஒரு முறை மருந்து தெளிப்பான் மூலம் உள்ளே செலுத்துவர். மார்பிள் தரையை ஒட்டி 'எல்' வடிவ ஓட்டையிட்டு மருந்து செலுத்தப்படும். பின் சாக்பீஸை கெமிக்கலில் ஊற வைத்து ஓட்டைகளில் வைத்து, தரை நிறத்திற்கு ஏற்ப சிமென்ட் கலர் பூசுவர். இதனால் ஓட்டை போட்டது தெரியாத அளவு தரை மாறும். இப்படி செய்தால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை கறையான் தொல்லை இருக்காது.
குறிப்பாக, 'கிரியோஸேட்' என்ற பொருளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. நிலக்கரியில் இருந்து கிடைக்கும் தார் பல கட்டங்களில் சுத்திகரிக்கப்பட்டு கிரியோஸேட் தயாரிக்கப்படுகிறது. தரையில் குழி எடுத்து நிறுத்தப்படும் மரங்களில் பூச்சி அரிப்பு ஏற்படாமல் இருக்க இதை பயன்படுத்த துவங்கினர்.
மரங்களை ஈரம், கறையான் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பதில் கிரியோஸேட் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் மரங்களை கறையானிடம் இருந்து பாதுகாக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருங்கள்.
கட்டுமான நிறுவனம் என்ன செய்ய இருக்கிறது என்பதை விசாரித்து அறிய வேண்டும். இது விஷயத்தில் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. மரங்களில் அனைத்து பக்கங்களிலும், வார்னீஷ் அடித்தால் போதும் என்ற எண்ணத்தில் இருந்து விடுகின்றனர்.
பொதுவாக கறையான் போன்றவை, மரங்களை மட்டுமல்லாது நாளடைவில் கட்டடத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். கறையான் விஷயத்தில் துளியும் அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.
Saturday, January 27, 2024
கட்டடங்களில் பால்கனி தோட்டம் அமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
இதனால், பெரும்பாலான குடியிருப்புகளில் பால்கனி மற்றும் மொட்டை மாடி பகுதிகளில் தோட்டம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கும் இடத்தை பயன்படுத்தி தோட்டம் அமைப்பது நல்ல நடைமுறை தான்.
இருப்பினும், நடைமுறையில் இதனால் சில பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பொதுவாக பால்கனி பகுதிகள், கட்டடத்தின் இருந்து வெளிப்புறமாக நீட்டி அமைக்கப்பட்ட ஸ்லாப்களை நம்பியே இருக்கும்.
இதற்கான கட்டுமானம் எப்படி மேற்கொள்ளப்படுகிறதுஎன்பதை ஆரம்பத்தில் இருதே கவனிக்க வேண்டும். கட்டடத்தின் தளம் அமைக்கப்படும் அளவிலேயே பால்கனி பகுதிக்கான ஸ்லாப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுவாக பல இடங்களில் தளம் அமைக்கப்படும் போதே பால்கனிக்கான ஸ்லாப்கள் அமைக்கப்படுவதில்லை. தள பணி முடிந்த பின் தான் பால்கனிக்கான ஸ்லாப்கள் அமைக்கப்படுகின்றன.
வெளிப்புற தோற்றத்துக்கு பால்கனி கட்டடத்துடன் இணைந்து காணப்பட்டாலும், உட்புறத்தில் அது புதிதாக இணைக்கப்பட்டதாகவே காட்சியளிக்கிறது. இதனால் என்ன ஆகிவிடும் என்றுபலரும் அலட்சியமாக இருக்கின்றனர்.
கட்டடத்தின் தளம் அளவுக்கு பால்கனியும் உறுதியாகஇருக்கும் என்று நினைத்து அதில் தோட்டம் அமைப்பார்கள். இதற்காக, மண் நிரப்பப்பட்ட தொட்டிகள் அதிகமாக அங்கு வைக்கப்படும்.
இது தவிர வேறு சில சுமை பொருட்களும் பால்கனியில் வைக்கப்படுகிறது. இத்தகைய கூடுதல் சுமைகளை தாங்கும் நிலையில் பால்கனி இருந்தால் பிரச்னை இல்லை.
அதே நேரத்தில், கூடுதல் சுமையை தாங்க முடியாத அளவுக்கு பால்கனி பலவீனமாக இருந்தால், அது விபத்துகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே, உங்கள் வீட்டுக்கான பால்கனி அமைக்கப்படும் போது, அதற்கான ஸ்லாப் தளத்துடன் இணைந்ததாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
Friday, December 8, 2023
Buying a home for the first time? Don’t forget to claim these benefits
“The Real Estate Regulation Act (RERA) ensures transparency and accountability in the real estate sector, thus protecting the interests of buyers by curbing malpractices. The Pradhan Mantri Awas Yojana (PMAY) is aimed at providing “housing for everyone” and benefits first-time home purchasers from lower and middle-income families. The subsidy rates on the principal amount vary based on the buyer’s income, with additional income brackets recently introduced to extend the benefits to a wider segment of the population. Moreover, the housing subsidy GST has been reduced from 12 per cent to eight per cent for residences acquired under PMAY, allowing eligible first-time homeowners to avail of a higher subsidy of up to Rs 2.7 lakh,” informs Pritam Chivukula, vice president, CREDAI-MCHI.
“Bigger loans, longer payback periods, or a weak CIBIL score may attract slightly higher interest rates. Remember, not all banks and financial institutions offer the same rates and terms for their loans. It’s essential to compare offerings from multiple lenders to get the best deal,” says Vickash Choudhary, founder of a real estate firm.
The one mistake that first-time homebuyers often make is that they focus mainly on securing lower interest rates, but they should also consider other terms such as prepayment charges and processing fees while comparing loan offers.
Developers often extend special reductions and benefits to attract first-time homebuyers and promote their projects. These benefits can vary depending on the developer’s marketing strategy and the property being offered. Common offers include discounts on the base price of the property, thus making it more affordable for first-time buyers. Some developers may also provide additional incentives such as free furniture or appliances, or free membership to gyms or clubhouses. Additionally, to ease the financial burden on first-time buyers, developers might offer flexible payment plans with staggered payments or lower initial down payment requirements. Developers may offer discounted prices to first-time homebuyers, especially in affordable housing projects. Some developers may waive off additional charges such as floor rise charges, preferred location charges, or clubhouse membership fees to attract first-time buyers. Developers may have tie-ups with specific banks or financial institutions, thus providing special home loan interest rates or processing fee waivers for buyers of their properties. Chivukula cautions, “Prospective homebuyers should thoroughly review all the terms and conditions of such offers before making any decisions to ensure they fully understand the benefits and implications.”
கம்பி கட்டு வேலையில் கவனக்குறைவு ஏற்பட்டால் அது கட்டடத்தை பாதிக்கும்!
இந்த அமைப்புகளுக்கான கட்டுமான பணியில் சில அடிப்படை விஷயங்களை புரிந்து செயல்பட வேண்டும். இக்கட்டுமானங்களின் அளவுகள் என்ன என்பதை ஆரம்ப நிலையிலேயே வரையறுக்க வேண்டும்.
அதாவது, பணி முடியும் நிலையில் என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.
இதில், கம்பி கூடுதல் தாங்கு பலகைகளை தொடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். இந்த இடைவெளியில் கான்கிரீட் கலவை நன்கு பரவ வழி செய்ய வேண்டும். மேல் தளம் அமைப்பு பணியின் போது, கான்கிரீட் கலவை பரவலை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, கான்கிரீட் கலவை, சரியாக பரவாத நிலையில், அது நீர் கசிவு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, தாங்கு பலகைகள் அமைக்கும் போது அதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
Thursday, December 7, 2023
Make the right choice : Standalone home vs. flat
Apartments come with minimum hassles of maintenance. On the other hand, in an independent home, the owner must go through the hassles of finding plumbers or carpenters, and even take it upon himself to manicure the lawns. Although most of the amenities (pool, and garden) can be built into an individual house, the financial implications are huge. Also, owners have to install CCTV cameras or burglar alarms to monitor the property, which is an additional expense.
– Manju Yagnik, senior vice-president, NAREDCO
இன்சூரன்ஸ் வேண்டுமா? - காரை ஆன் செய்யாதீர்கள்!
இன்சூரன்ஸ் வேண்டுமா? - காரை ஆன் செய்யாதீர்கள்!
Friday, December 1, 2023
Have you inspected the property before signing on the dotted line !!
When you’re out and about exploring the property (for end-use or rent), a broker or sales executive will likely join you. They’ll guide you through the property, and discuss the costs and all, but in this whirlwind, you get a limited chance to properly check out the house yourself.
During a typical site tour, you might notice newly painted walls, yet it’s impossible to inspect the building’s structural quality. You’ll likely see a beautifully maintained home, but the possible presence of leaks or pests won’t be visible. Hence, it’s crucial to make a thorough home inspection your top priority.
Although it is not a popular practice in India, unlike Western countries where it is a regulated industry, there are still a few new-age companies that offer this service. Experts in the sector hope that some government guidelines are formed in India as well to aid homebuyers. “There should also be proper codes and tolerance limits set for the finishing aspects of building construction,” says Venkat, chief business officer of a leading home inspection company.
Questions To Ask Your Landlord !!
What are the accepted modes of payment (e.g., bank transfer, check, cash)?
When will the security deposit be returned once you vacate the property?
If something breaks, who will repair it?
Which utilities are included in the rent (e.g., water, electricity, gas, etc)?
Are there any restrictions on the number of occupants?
Does the property come equipped with fire safety gear, such as smoke detectors?
Is there storage space available for tenants?
Can either party terminate the lease before its expiration, and under what conditions?
9. Legal obligations
Are there any specific rules or regulations you should be aware of, such as building rules or local law?
Which appliances and pieces of furniture come with the rental?
Asking these questions can help you make an informed decision. Besides, you should also make sure that everything that you have mutually agreed upon should be documented in writing, preferably within the lease agreement, to avoid any disputes in the future.
Electric vehicle charging stations: An added benefit or a necessity?
Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...
-
Is it possible to sell your under-construction apartment after registering it? If you find yourself in a situation where you are unable to...