Saturday, October 21, 2023

பழைய வீடு வாங்கும்போது கவனம்

 பழைய வீடு வாங்கும்போது கவனம்
சொந்தமாக வீடு வாங்க நினைப்பவர்கள் புதிய வீட்டை தான் முதலில் தேடுவார்கள்.  ஆனால், நிதி நிலை காரணமாக பழைய வீட்டை வாங்க வேண்டிய நிலை வரலாம்.இதன்படி, பழைய வீட்டை வாங்கும்போது பல்வேறு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  இதில் வழக்கமாக, பத்திரங்கள், வீட்டின் அமைப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனிப்பர்.
          
ஆனால், பழைய வீடு விற்பனையில் அதன் உறுதித் தன்மையை வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.  விற்பனைக்கு வரும் சொத்து அதற்கு முந்தைய பத்திரத்தில் எப்படி இருந்ததே அப்படியே தற்போது இருக்க வேண்டும்.
       
          பல சமயங்களில், தற்போது பத்திரத்தில் எப்படி உள்ளதோ அதை அப்படியே புதிய பத்திரத்தில் குறிப்பிட்டு விற்றுவிடுவர்.  இவ்வாறு சொத்தை வாங்கியபின் அதன் எல்லை தாவாக்கள் தெரியவரும்.  இதைதவிர்க்க, பழைய வீட்டை வாங்கும் நிலையில் கூடுதல் விஷயங்களை கவனிப்பது அவசியம்.  அதிலும் சில விற்பனையாளர்கள் சிறுபிள்ளைதனமாக செயல்படுவதும் உண்டு.

         குறிப்பாக, விற்பனைக்கு வரும் சொத்தை நீங்கள் பார்க்க செல்லும் போது இருந்த நிலையில் அப்படியே உங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.  அதில் பயன்பாட்டு பொருட்களை மட்டுமே பழைய உரிமையாளர் எடுத்து செல்லலாம்.


          ஆனால், சில இடங்களில் விற்பனையாளர்கள், வரைபடத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் கூடுதலாக கட்டப்பட்ட அறைகளை பத்திரப் பதிவுக்கு முன் தன்னிச்சையாக இடித்து விடுவர்.  அலமாரி உள்ளிட்ட அமைப்புகளை பெயர்த்து எடுத்து செல்வர்.  இன்னும் சிலர், வீட்டிற்குள் விளக்குகளை அகற்றிவிடுகின்றனர்.  மேலும், கூடுதலாக அமைத்த சுவிட்ச் போர்டுகள், தண்ணீர் மோட்டார்களை அகற்றி விடுகின்றனர்.


          இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களை அனுமதிக்காதீர்.  வீடு வாங்க முன்பணம் கொடுக்கும்போதே, இது தொடர்பான விஷயங்களை கண்டிப்புடன் தெரிவிப்பது நல்லது.  அப்போது தான், வீட்டை வாங்கி நீங்கள் குடிபுகும் நிலை சிக்கல் இன்றி அமையும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.    


No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...