Friday, October 20, 2023

வீடு கட்ட தனி நபர் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை!

  வீடு கட்ட தனி நபர் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை!
கட்டடம் கட்டும் போது நமக்கு பல கனவுகள் இருக்கும்.  அத்தனை கனவுகளையும் நனவாக்கும் தகுந்த திட்டமிடலும், சரியான ஒப்பந்ததாரரும் அமைய வேண்டும்.
          உங்களுக்கான கனவு இல்லத்தை கட்டித்தர யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
          பெரிய நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் முந்தைய திட்டங்களை ஆய்வு செய்வதே திருப்தியளிக்கும்.  ஆனால், தனி நபர் ஒப்பந்ததாரரை தேர்வு செய்வதில் அவரது முந்தைய திட்டங்கள் மட்டுமே போதுமானதல்ல.
           இதில், ஒப்பந்ததாரர்களாக செயல்படும் தனி நபர்களை நம்பி வேலையை ஒப்படைக்கலாமா என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.  கட்டுமானத் துறையை பொறுத்தவரை நிறுவனத்தின் பெயரை முன்னிலைப்படுத்தி பலரும் செயல்படுகின்றனர்.
           வணிக ரீதியில் இத்தகைய நிறுவனங்கள் பல்வேறு விஷயங்களில் பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றன.
           ஆனால், நிறுவன பெயர் இன்றி தனி நபர்கள் பெயரில் வீடு கட்டும் வேலையை ஒப்படைப்பதில் பலருக்கும் கசப்பான அனுபவங்கள் உள்ளன.
            எனினும், பல இடங்களில் பெரிய நிறுவனம் என்று இல்லாமல் தனி நபர்களாக வீடு கட்டுபவர்கள் சிவில் பொறியாளர்களாக இருந்தால் பரவாயில்லை.  இத்தகைய நபர்கள் தொழில் நுட்ப ரீதியாக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு கட்டுமான பணிகளை முடிப்பர்.  அவரின் முந்தைய கட்டுமானப் பணி எத்தனை லட்சம் வரை செய்திருக்கிறார்.
            நம் பணியின் பட்ஜெட் எவ்வளவு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
             தற்போது, பொது கட்டட விதிகள் போன்றவை நடைமுறைக்கு வந்துள்ளதால், அவர்கள் முறையாக பதிவு செய்து உரிமம் பெற்றுள்ளனர் என்று பார்க்க வேண்டும்.  உரிமம் பெறாத நபர்களிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைப்பதில் ஏற்படும் இழப்புகளுக்கு நிவாரணம் பெற முடியாது. 
            ஆனால்,  பொறியாளராக இல்லாமல், கட்டுமான திட்டங்களை செயல்படுத்த வரும் தனி நபர்கள் விஷயத்தில் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.  அவர்கள் பதிவு செய்த நிறுவனமாக, உதவியாளர்கள், வரைபட நிபுணர்கள் கொண்ட ஒரு அலுவலகமாக இருத்தல் அவசியம்.  அப்படி இருந்தால் தான் ஒரு வரையறைக்குள் கட்டுப்பட்டு நம் வேலையை கவனித்து செய்வர்.
            உள்ளூர் அரசியல் செல்வாக்கை மட்டுமே அடையாளமாக வைத்து கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவோரிடம் கவனமாக இருக்க வேண்டும்.  இத்தகைய நபர்கள் குறிப்பிட்டபடி வேலையை முடித்து தருவரா என்பதற்கு யாரும் உறுதி அளிக்க முடியாது.
        
             பாதியில் திட்டம் நிறுத்தப்பட்டால் இவர்கள் மீது அரசு அமைப்புகளில் புகார் அளிக்கவும் முடியாது.
             அப்படியே புகார் அளித்தால், அடியாட்களை வைத்து மிரட்டுவது, தாக்குவது போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
             இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க யாரிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைப்பது என்பதில் மிக கவனமாக எடுக்க  வேண்டும்.
              இத்துடன், உங்களுக்கான வீடு கட்டும் ஒப்பந்ததாரர், அதே பகுதியை சேர்ந்தவராக இருப்பது நல்லது.  உள்ளூர் நிறுவனம் தெரியாத நபர்களிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள். 

No comments:

Post a Comment

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...