Friday, September 22, 2023

பூர்வீக சொத்துக்களை தேடி கண்டுபிடிப்பதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

 பூர்வீக சொத்துக்களை தேடி கண்டுபிடிப்பதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

பொதுவாக, குடும்பத்தில் பெரியவர்கள் பல்வேறு இடங்களில்   அசையா சொத்துக்களை வாங்கி வைத்திருப்பர்.  இந்த சொத்துக்களை முறையாக அடுத்த தலைமுறையினருக்கு பத்திரம் எழுதியிருப்பர்.

                           ஆனால், நடைமுறையில் அந்த சொத்து வாரிசுகள் கட்டுப்பாட்டில் இருக்காது.  தாங்கள் வசிக்கும் பகுதியில், சொத்து இருந்தால், நேரடியாக அதில் வாரிசுகள் உரிமை கொண்டாடுவர்.

                            சில சமயங்களில், வெளியூரில் சொத்து வாங்கி வைக்கப்பட்டு இருக்கும்.  இந்த சொத்து தொடர்பான பத்திரம் மட்டுமே பெரியவர்களிடம் இருக்கும்.

                           அதை வைத்து அவர்கள் உயில் அல்லது செட்டில்மென்ட் பத்திரம் எழுதி கொடுத்து இருப்பர்.  இன்னும் சில இடங்களில் பெரியவர்கள் பெயரில் பத்திரம் மட்டுமே இருக்கும்.  உயில் போன்ற மாற்றங்கள் நடந்து இருக்காது.  பெரிய குடும்பங்களில் இத்தகைய சொத்துக்களை சொந்தமாக்குவதும் மாற்றுவதும் சற்று சவாலானது.

                           சில பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி தங்கள் சந்ததியினருடன் நல்ல உறவைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அவர்கள் மூதாதையர் சொத்தை வாரிசாகப் பெறுவதைத் தடுக்க விரும்பலாம்.  இருப்பினும், இது சட்டப்படி சாத்தியமில்லை.

                          இத்தகைய சூழலில், நில அபகரிப்பாளர்களிடம் இருந்து பூர்வீக சொத்துக்களை பாதுகாப்பது, வாரிசுகளுக்கு சவாலான பணியாக உள்ளது.  குறிப்பாக, பூர்வீக சொத்து தொடர்பான பத்திரத்தை மட்டும் வைத்து, அதை நேரடியாக கண்டுபிடிப்பது எளிதான பணி அல்ல.

                           இதில் சம்பந்தப்பட்ட பகுதிக்கான வருவாய் துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

                            தொடர்ந்து, பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாத நிலையில் உள்ள சொத்தில் அக்கம் பக்கத்தினர் அத்துமீறி நுழைந்து இருக்கலாம்.

                            தங்கள் பத்திரத்தில் இந்த நிலத்தின் சில பகுதிகளை  சேர்த்து மோசடி செய்வது என்றும் இறங்கி இருக்கலாம்.

                             சில சமயங்களில், அடுத்தவர் மனை என்று தெரியாமல், கட்டடமும் கட்டி இருக்கலாம்.

                             இதில், சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வழக்கறிஞர் உதவியுடன் அறிந்து செயல்பட வேண்டியது அவசியம்.

                              குறிப்பாக, அதிரடியாக செயல்படுகிறோம் என்று பிரச்னை ஏற்படுத்தி கொள்ளாமல் காரியத்தை சாதிப்பதில், வாரிசுகள் கவனமாக இருக்க வேண்டும்.  ஒருவரின் தந்தை அல்லது தாத்தா மூலம் பெறப்பட்ட சொத்து என்று வரும்போது சொத்துச் சட்டத்தின் வாரிசுச்சட்டம் அதன் சொந்த விதிமுறைகளைக் கொண்டுள்ளது.

                              நீங்கள், உங்கள் குடும்பத்தினர் யாரும் வசிக்காத ஊரில் உள்ள பூர்வீக சொத்துக்களை மீட்பதில் நடைமுறை ரீதியாக, இது போன்ற பிரச்னைகள் வரும்.  இதை பொறுமையாக சமாளிப்பதில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்மையும் சில சமயங்களில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

                              எனவே, பூர்வீக சொத்துக்களை மீட்கும் பணியில் இறங்கும் வாரிசுகள் இத்தகைய பிரச்னைகளை சமாளிப்பது அவசியம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.


No comments:

Post a Comment

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...